அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,
29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.
நாள்: 29-1-12 ஞாயிறு
மாலை: 5.00 மணி
தலைப்பு: புதுக் கவிதைகள்
இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore)
அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக
சித்ரா
நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.
மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.
இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.
இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்
இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது
கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….
கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..
இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —