மை சாரா

இன்று காலை 7.30க்கு மின்தூக்கியில் அலுவலக பணிக்குச் செல்லும்போது அந்த சீனக் குழந்தையை சந்தித்தேன். பெயர் மைசாரா என்றாள்,  தெய்வத்திருமகள் திரைப்படதில் வரும் குழந்தையின் சாயலைகொண்டிருந்தாள். என் வீட்டிற்கு மேலே உள்ள ஒரு தளத்தில் ஏதோ ஒன்றில் தான் அவள் வசிக்கிறாள்நான்கு மாதகாலமாக இதே நேரத்தில் அலுவலகம் செல்லும் நான் இன்றுதான் அவளை சந்தித்தேன். என்னுடைய பெயரை சொன்னேன் புன்னகைத்தாள். வீட்டைவிட பள்ளியில்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினாள். அங்குதான் அவளுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாலாம்,  அவளோடு பள்ளிவரை சென்று வர ஆசையிருந்தும் அவளை புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணமிருந்தும் நான்கு மாதத்திற்கு பிறகு சந்திக்கும்  அந்தநாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு கார் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

மை சாரா என்னை ஞாபகம் வைத்திருக்க கூடும்……

இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம்

அந்த மிருகம்
எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று
அந்த மிருகம்
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று
அந்த மிருகம்
எப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று

இரையாகிக்கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்

 

என்ன செய்துவிட்டேன்

எனக்கு தெரிந்த
எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன

எடுத்துக்கொண்ட ப்ரியங்களை
திரும்பபெற
காத்திருத்தலில்
என்ன இருக்கப்போகிறது
உனக்கு தெரியும்

தொலைந்துபோவது
ஒரு பாவனைதான்

திரும்ப வருவதும்
ஒரு பாவனைதான்

குட்டப்பனோடு உரையாடி
நீண்ட நாட்களாகிவிட்டது
நீண்ட நாட்களில்
என்ன செய்துவிட்டேன்
குட்டப்பனோடு உரையாடுவதை தவிர்த்து

 

சாப்பிட வாருங்கள்: “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” 12.02.2012 – ஜீராங் ஈஸ்ட் நூலகத்தில்

 

 

.

வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,

29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.

நாள்: 29-1-12 ஞாயிறு

மாலை: 5.00 மணி

தலைப்பு: புதுக் கவிதைகள்

இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore) 

 அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக

சித்ரா

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

திரு-பூர்வீக-சதிர்

நூல் வெளியீட்டு விழா

 நாள்: நவம்பர் 2,  புதன் கிழமை நேரம்: மாலை 6.00 மணி

இடம்: புரோகிராம் வளாகம்

ஜீவன் ஜோதி பில்டிங் 107 பாந்தியன் சாலை எழும்பூர் சென்னை – 2

 

வெளியிடப்படும் நூல்கள்

 அன்பின் ஆறாமொழி

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: முபீன் சாதிகா

வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி

பெறுபவர்:ஜமலான்

நூல் அறிமுக உரை

 இந்திரா பார்த்தசாரதி

ஜமலான்

அமிர்தம் சூர்யா

திரு-பூர்வீக-சதிர்

(நாவல்)

ஆசிரியர்: அரவிந் அப்பாதுரை

வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன்

பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்

நூல் அறிமுக உரை:

பிரபஞ்சன்

எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழச்சி தங்கபாண்டியன்

 

ஏற்புரை: முபீன் சாதிகா

அரவிந் அப்பாதுரை

 

நிகழ்சி தொகுப்பு: பா.உதயகண்ணன்

 தொடர்புக்கு: 98401 54652 94446 40986

வெளியீடு:

பாலம் பதிப்பகம் (பி) லிட்

25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்

3வது பிரதான சாலை

தண்டிஸ்வரர் நகர்

வேளச்சேரி

சென்னை – 600042