துவக்கம்

 

1997ல் நான் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறேன். அப்ப எனக்குள் எளிதாக வந்தது காதல்இயல்பான ஒன்று எனக்குள் வந்ததில் ஆச்சர்யம் இல்லைஇரண்டாண்டு நீடித்த என் காதலின் முடிவு தெரிந்ததுநான் விரும்பிய பெண் என் நண்பனை விரும்பவும் என் நண்பனும் நான் விரும்பிய பெண்னை விரும்பவும் என் காதல் ஒருதலையாகியது.அவள் என் நண்பனை  விரும்ப எனக்கு தெரிந்து ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அந்த காரணம் அவனுக்குள் இருந்த எழுத்து மற்றும் பேச்சுத்திறமைஅந்த காலகட்டத்துல நானும் எழுதனும் பேசனும் என்று ஏங்கியது கிடையாது நிகழ்வுகள் மறக்கப்பட்டதாக……..

 

2005 ஏப்ரல் மாத காலகட்டத்தில் பெங்களுரில் பணிபுரிகிறேன். ஒருகாலகட்டத்தில்  இரண்டு நாட்கள் ஏகப்பட்ட  பிரச்சினை. எங்க போனாலும் பிரச்சினைஆனால் எல்லாப்பிரச்சினையம் ஆராய்ந்து பார்த்தால் ஒரு காரணமும் இருக்காது. அப்ப ஒரு வாரகாலம் என் மனதில் அதிக உளைச்சல் ஏற்பட்டது. இன்னும் சொல்லணும்னா நான் பைத்தியம் ஒன்றுதான் ஆகவில்லை. அப்ப எனக்குள்ள இருந்த மன உளைச்சல் எல்லாம் என்னையும் அறியாமல் எழுத்தாக வந்தது.

 

 

சரி எழுத ஆரம்பிச்சாச்சு அப்புறம் எப்படி என் வளர்ச்சி?

 

 

என் நண்பன் பெயர் விஜயகுமார் எங்க இரண்டுபேருக்கும்மிடையில் ஏதோ ஒரு அலைவரிசை ஒத்துப்போனதுஆனா? பல அலைவரிசை ஒத்து போகவில்லைனுதான் சொல்லனும். நான் அதை வெளிக்காட்டியதில்லை. என் நண்பனும் என்னை போலத்தானோநான் அவன் நல்லா வரணும்னம் அவன் நான் நல்லா வரணும்னு தான் நினைத்ததுண்டு. என் ஒவ்வொரு கவிதையின் முதல் ரசிகன்நான் எழுத ஆரம்பித்து அவனோடு இருந்த 8மாத கால கட்டத்தில் நான் எழுதியதை எல்லாம் கவிதை என்று சொன்னவன் இன்று நான் இணையத்தில் உலவ காரணம் என் இதயமான நட்பே!!

துவக்க ள் 07-04-2007

இந்த இணையபக்கத்தை

என் நண்பன் விஜயகுமாருக்கும்

இலக்கிய நட்பு  பிசிராந்தையார் கோப்செருஞ்சோழனுக்கும்

மற்றும் உலகம் தழுவிய நட்பிற்கும் சமற்பணம் செய்கிறேன்.

 

நான் எழுத ஆரம்பித்து கொஞ்ச காலம் ஆன பின்புதான் எனக்குள் ஒன்று புலனானது. ஒரு வேளை என் கல்லூரிக் காதல் என்னையும் அறியாமல் என் ஆள்மனதில் பதிந்து இன்று நான் எழுதுவதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்று?

 

 

எழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற  இப்பிரபஞ்சத்தில் மாயமாய்

எல்லாம் மாயை

என்னுள் இருப்பதும்

எழுத்தாய் வருவதும்

இனிஆரம்பம்

(நீதிபதி) பாண்டித்துரை

2 பதில்கள் -க்கு “துவக்கம்”

27 04 2008
gokul (16:46:06) :

அன்புள்ள பாண்டிதுரரைக்கு,

வணக்கம். ஒரு ஆச்சர்யம் எனக்கும் உங்களை போன்றே நிகழ்வுகள் நடந்துள்ளன காதல் தவிர்த்து. தனிமை, மன உளைச்சல் போன்றவையே எழுத்துக்களாக வெளி வரும் போல.. ஏனோ நான் காதல் வயப்படவேயில்லை :-)

எனக்கும் உங்களை போன்றே ஒரு நண்பர். இப்போது இங்கே அயல்நாட்டில் இருந்தாலும் மன உளைச்சலும் தனிமையுமே எனது எழுத்துக்கான அச்சாணி.

நன்றி
கோகுல்
http://kulambiyagam.blogspot.com

28 04 2008
பாண்டித்துரை (03:21:42) :

அன்பின் கோகுல் உங்களின் பின்னனூட்டத்தற்கு நன்றி.

நீங்கள் இன்றுவரை காதல்வயப்படவில்லை ஆனால் நாளை? .. திருமணத்திற்கு பின்னும் காதலிக்கலாமே!

என்னுடைய எழுத்துக்கள் தனிமை மனஉளைச்சலை பிரதிபலிப்பதாகவும் உங்களின் எழுத்துக்களும் இதை ஒத்துஇருப்பதாக கூறியமைக்கு மகிழ்ச்சி. இன்னும் கொஞ்சம் சற்றே உற்று நோக்கினால் எனது படைப்புகளில் தனிமை, மனஉளைச்சலை கடந்த ஒன்று தட்டுப்படக்கூடும்.

தோழமையுடன்
பாண்டித்துரை

மறுமொழியவும்

இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம் : <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>