பண்புடன் “நாம்”
5 04 2008பண்புடன் குழுமத்தில் நண்பர் கென் “நாம்” சிற்றிதழ் பற்றி எழுதிய செய்தியை இங்கு இணைத்துள்ளேன்
நன்றி: கென் மற்றும் பண்புடன் குழுமம்
“நான் என்பது தனிமை
நாம் என்பதே பெருமை “
என்ற வாசங்களின் படி ஒரு புதிய காலாண்டிதழாய் வெளிவந்திருக்கிறது ” நாம்” இதழ்.
நிறைய புதிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு இடம் தந்து , வலைப்பூக்கள், இணைய குழுமங்களில் இயங்குபவர்களுக்கும் இடம் தந்து வெளிவந்திருக்கிறது.
இணையக்குழுமங்களிலிருந்து
அய்யனார்,
பாண்டித்துரை,
விழியன்,
இலக்குவன்,
ப்ரேம்குமார்,
ப்ரியன்,
அனிதா மற்றும் (கென்)என் படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.
முதல் முயற்சிக்கு பாராட்டுகளோடு சில யோசனைகள்
பக்கங்களை வேண்டுமானால் சிறிது குறைத்துக்கொள்ளலாம்.
சில இடங்களில் கண்களுக்கு சலிப்பூட்டும் வண்ணம் எழுத்துருக்கள் , வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது தேவையற்றது.
மற்றபடி பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் , பொருளதவி செய்தவர்க்கும் வாழ்த்துகள்.
இதழ் வேண்டுபவர்கள் சென்னையில் என்னை தொடர்புக்கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.
செல்பேசி 99406 36223
” நாம் “
இதழ் தொடர்புக்கு
நாம் சிற்றிதழ்,
ஆர்.நீதிப்பாண்டி,
ஊராட்சி மன்ற சாலை,
ஆ.காளாப்பூர்
சிவகங்கை மாவட்டம்
630 501
email :naammagazine@gmail.com -
–
- கென்

பண்புடன் நண்பர்கள் பண்புடன் குழுமத்தில் நண்பர் கென் “நாம்” பற்றிய செய்தியை வெளியிட்டவுடன் ஆலோசனைகளுடன் அவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். அந்த செய்திகளை இங்கு இட்டுள்ளேன்.
நன்றி: பண்புடன் இணையகுழுமம்.
வாழ்த்துக்கள் கென்!
Naresh Kumar
வாழ்த்துகள் தம்பி
பாசமுடன்
என் சுரேஷ்
நேற்றைய சந்திப்பில் ‘நாம்’ பெற்றுக் கொண்டேன். நன்றி. விமர்சனம் வருகிறது விரைவில்
சாபு
நன்றி தம்பி,
நானும் “நாம்” பெற்றுக்கொண்டேன்.
நேற்றே அதை வாசித்தேன்!
அருமை!
வாழ்த்துகள்
பாசமுடன அண்ணன்
பாண்டி, நேற்று நாம் இதழை கண்டோம். நன்றாக வந்திருக்கிறது. கென் சொன்னது போல் வடிவமைப்பில் இன்னும் சிறிது கவனம் செலுத்தலாம்
பிரேம்குமார்
” நாம் ” பத்திரிகை படித்தேன்
போலித்தனங்களில்லாமல் இயற்கையாய்
மலர்ந்து இருக்கிறது
மேலும் வளரட்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
நாம் பெற்றுக்கொண்டேன்.அருமை. வாழ்த்துக்கள்.
கென் சொன்னதை வழி மொழிகிறேன்.
நன்றி .. என் கவிதை மற்றும் புகைப்படங்களை பிரசுரித்தமைக்கு.
இலக்குவணன்
நாம் மேன்மேலும் வளர்ந்து தரமான நல்ல இதழாக புகழ்பெற வாழ்த்துக்கள்