பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்ற எனது கவிதை உங்களுடையதா என்று கேட்டு சாருவிடமிருந்து மின்னஞலுடன் ஒரு தொடர்பு எண்ணும் வந்தது.
பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்றெண்ணியபடியே தொடர்பு கொண்டேன்.
சாருவே உரையாடியது
எனக்கு கொஞ்சம் பதட்டம்
பேசவேண்டியதை எல்லாம் வேகமாகவே பேசினேன்.
கென் என்ற தலைப்பில் உள்ள கவிதை பற்றி விசாரித்தார். பின்னர்தான் புரிந்தது அதனை என்னுடைய கவிதையாக அவர் பாவித்தது…..
கென்னின் மடிநிறைய கற்கள் என்ற கவிதைதொகுப்பு (2வது மின் தொகுப்பு) நூலில்இருந்து கென்னின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய கவிதை வரிகளை தொகுத்து நேற்று (27.06.2008) கென்னின் பிறந்த நாள் என்பதால் கென்னின் கவிதை வரிகளையே கென்னிற்கு பிறந்த நாள் பரிசளித்ததாக கூறினேன்
கென்னின் கவிதைகளை எனக்கு அனுப்பமுடியுமா என்றார். பேசுவதற்கு நிறைய இருக்கிறது கவிதை உங்களுடையதா என்றார். ஆமாம் என்றேன்
உங்களின் படைப்புகளின் கீழே உங்களின் பெயரினை பதிவுசெய்யுங்கள் என்றார். புரிந்துகொண்டேன்.
எனது நகுலன் வலைப்பக்கம்பற்றி விசாரித்தார்.
(அதனைபற்றிய முழுமையான விபரங்களை எனது வலைப்பூவில் கூறவில்லை). ஜனரஞ்சக இதழ்களில் வரும் இலக்கியம் சார்ந்த படைப்புககளை ஒரு இடத்தில் தொகுக்க ஆரம்பித்து (http://nagulan.wordpress.com/ ) நேரமின்மையால் சரிவர இயக்கவில்லை என்றேன்.
தொடர்பை துண்டித்தபொழுது இன்னும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
ஆக்கம்: பாண்டித்துரை

http://www.charuonline.com/june08/pp6.html
மிக்க நன்றி பாண்டி மீண்டும் மீண்டும்
நன்றிகள்