சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒரு கவிதைப்பயணம்!

 

 

navarasam20end

கோடம்பாக்கத்து சினிமா குத்துக்களிலிருந்து விலகாமல் தமிழ்தொலைக்காட்சிக்கான அடையாளங்களை தக்கவைத்திருக்கும் சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி, தமிழ்சேவைக்கான பண்பலையை சமீபத்தில் அதிகரித்து வண்ணத்திரை என்ற புதிய தொலைக்காட்சி சேவையை தொடங்கியிருக்கிறது. ஆனால் என்னைப்போன்று தொழிற்பேட்டையில் தங்கி பணிபுரிபவர்களால் வண்ணத்திரையை காணவியலாது என்பது பெருத்த வருத்தமாக ஒன்றும் இருக்காது, திரைக்குவரும் அன்றே தங்குதடையின்றி கிடைக்கும் கள்ள தமிழ்சினிமா வட்டுக்களால்.

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தமிழ் எழுத்து இலக்கியத்திற்கான வெளி மிகச்சிறியது. சமீபகாலமாக நம்மைசுற்றி நாம் என்னும் நிகழ்வு வழியே கொஞ்சம் தொட்டுச்செல்கிறது. மற்றபடி தமிழக இலக்கிய ஆளுமைகள் வருகின்றபோது செய்திகளுக்கு இடையே கொஞ்சம் முகம்காட்டும். மேலும் சிங்கப்பூரில் பிரபலமான எழுத்தர்கள் நூல்வெளியிடும்போது கொஞ்சம் அவர்களின் நூல்பற்றிய பேச்சு என்று முடிந்துவிடும். இந்தியாவில் மொழி சார்ந்து அதிக எண்ணிக்கையில் இயங்குவது தமிழ் தொலைக்காட்சிகள் தான். அங்கேயே இலக்கியத்திற்கான இடம் என்று பார்க்கும்போது சமீபத்திய வருகையான மக்கள்தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியால் கொஞ்சம் அடையாளபடுத்தபட்டுள்ளது. அப்படி இருக்கையில் கோடம்பாக்கத்து சின்னத்திரையை ஜெராக்ஸ் செய்யும் வசந்தம், வண்ணத்திரையில் நாம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.

 

ஆனால் இங்கு நடைபெறும் சின்ன சின்ன நிகழ்வுகள் சிறிய மகிழ்ச்சியை தருகின்றது. அப்படி சமீபத்திய நிகழ்வுதான் நவரசம். மனிதனின் ஒன்பதுவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் இசை, நடனம் மற்றும் கவிதை என்ற மூன்று கலவையில் ஜனவரி 21 தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமை மாலை 8.00 மணியிலிருந்து 8.30மணியளவில் மார்ச் 25 வரை தொடரவிருக்கிறது.

 

கவிதையை எடுத்துக்கொண்டால் பயம், கோபம், அருவருப்பை உள்ளடக்கிய ஒன்பது உணர்வுகளையும் ஆண்கவிஞர் ஒருவர் பெண் கவிஞர் ஒருவர் பிரதிபலிக்கின்றனர். இங்கு பல்வேறு கவிஞர்களை அடையாளப்படுத்திய கவிமாலை அமைப்பினால் கண்டடைந்த கவிஞர்கள் பலர் இந்த நவரசத்தில் ஒரு ரசத்தை எழுதி வாசித்துள்ளனர். சிங்கப்பூர் எழுத்தாளரான பாலுமணிமாறன் இந்த நவரசத்தில் கவிஞர்களை ஒருங்கிணைப்பதிலிருந்து அவர்களைப்பற்றிய குறிப்புகளை எழுதுவதில் தொடங்கி, ஒரு ரசத்தை எழுதி வாசித்ததுடன் கவிதைக்கான பணிமுழுமையையும் மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் முழுமைக்கும் இருந்து ஒளிப்பதிவினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், ஒரு குழந்தைக்கு கிடைத்த புதிய விளையாட்டு களமாகத்தான் எனக்கு தோன்றியது. அங்கு கவிதை வாசித்த ஒவ்வொருவரும் புதிதாய் ஏதோ ஒன்றை கட்டமுற்பட்டதை சிரிப்பினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். அருவருப்பு என்னும் ரசத்தில் உயிர் வலியின் உச்சரிப்பை கொஞ்சம் கவனமாக கேளுங்கள் என்று தொடங்கும் நான் எழுதி வாசித்த கவிதை மார்ச் 11 (புதன்கிழமை) அன்று 8.00 – 8.30 மணியளவில் ஒலிபரப்பாகிறது.

 

நவரசம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்குறிப்பு (Telecast Dates)

 

 

Ø       Episode 1- Introduction of Navarasas by performing artists – January 21

Ø       Episode 2- Sringara - காதல் - January 28

Ø       Episode 3- Hasya - நகைச்சுவை – February 4

Ø       Episode 4- Karunyam 3 - கருணை – February 11

Ø       Episode 5- Roudram - கோபம் (ரௌத்ரம்) – February 18

Ø       Episode 6- Veeram – வீரம் – February 25

Ø       Episode 7- Bhayanaka - பயம்  – March 4

Ø       Episode 8- Bhibhastsa - அருவருப்பு – March 11

Ø       Episode 9- Adbhuta  - அற்புதம் – March 18

Ø       Episode 10- Shantam - அமைதி (சாந்தம்) – March 25

 

நன்றி - வசந்தம் தொலைக்காட்சி, பாலுமணிமாறன் & team of Navarasam.

 

அம்ருதா நவம்பர் 2008 இதழில்

நீங்கள் படிக்கப்போவதில்லை

 

நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

 

திருமணத்திற்கு பின்னான நாட்கள்
பியர் சாப்பிட்ட முதல் நாள்
நாய்க்குட்டிக்கு கொடுத்த முத்தங்கள்
குழந்தைக்கான கவிதை
அலுவலகக் கடிதம்
அம்மாவுடன் தொலையாடியது
லதாவுக்கான புன்னகை
கென் நித்யா ஞாபகம்
முதல் சிறுகதை
சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
குட்டப்பன் மீதான கோபம்
ஈழவிடுதலையின் முடிவு
கடைசி மரணம்

 

நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

©pandiidurai@yahoo.com

நன்றி : அம்ருதா

மேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-1

_40685781_203prab-ap

தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதாத்த சில சிந்தனைத்துளிகள்

 

1.       நான் பெரிது

நீ பெரிது என்று

வாழாமல் நாடு

பெரிதென்று

வாழுங்கள். நாடு

நமக்குப் பெரிதானால்

நாம் எல்லோரும்

அதற்குச் சிறியவர்ளே

எமது நிலையற்ற

வாழ்விலும் பார்க்க

நாட்டின் வாழ்வே

பெரியது.

பக்கம்-74

 

2.       தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாத்து அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்தில இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதாபாராமல் இருக்கவில்லை. இந்த சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதை துணிந்து எதாகொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை;  ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.

பக்கம்-66

 

3.       இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில், வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை இந்த; யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

பக்கம் – 15

 

4.       ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

பக்கம் – 13

 

5.       எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீர்ர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகஆவ எமது தாயின் மடியில் அவாகளைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி,  காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.

பக்கம் – 71

 

 

வே.பிரபாகரன்

நூல் – தலைவரின் சிந்தனைகள் (1995)