சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கருத்தரங்கு
(ஜனவரி 2009)
முனைவர் திண்ணப்பன் அவர்களின் முயற்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழை விருப்ப பாடமாக படிக்கும் கல்லூரி மாணவர்களை கவிதை, சிறுகதை என்ற வெளிகளுக்குள் இழுத்துச் சென்று எழுத்தின் பிறப்பினை அறிமுகப்படுத்தியும், அதன்வழி பிறக்கவிருக்கும் வாசிப்பாளன், எழுத்தாளனை அடையாளப்படுத்தும் பணியுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முதன் முறையாக அந்த மாணவர்களுடன் அவர்கள் வாசித்து ஆய்வு செய்த நூல் ஆசிரியர்களை சந்திக்கவைத்து கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய பல்கலை கழகத்தில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த முதல் மேடை அனுபவமாக இந்த நிகழ்வு இருந்திருக்க வேண்டும். ஆனாலும் எந்த பயமும் இல்லை. குழந்தைகளாகத்தான் இருந்தது எல்லோரின் பேச்சும். இவர்களில் ஓராண்டிற்கு பின்னும் எத்தனை பேர் வாசிப்பினை தொடர்கின்றனர் என்பது எப்போதும் என்னுள் எழுகின்ற கேள்விக்குறியாய். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடதக்க ஓரிரு எழுத்தாளர்கள் உருவாகியிருக்கின்றர் என்று சொல்லாதது பெரிய வருத்தத்தை தோற்றுவிக்கப்போவதில்லை.
எழுத்தாளர்களின் முன் மாணவர்களால் வாசிக்கபட்ட ஆய்வுக்கட்டுரையை உள்வாங்கி பின் அதன் எண்ணங்களை தன் சுயம் பற்றியும் மௌனித்தும் பேசிய எழுத்தாளர்களை காணவாவது அடுத்த ஆண்டு அதீதமான பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் பாண்டித்துரை

அண்மைய மறுமொழிகள்