டோ டோ பறவையின் ஞாபகங்களுடன்

22 06 2009

கடந்த ஞாயிறு 14.06.09 மாலை 4.30மணியளவில், இரு மலேசிய எழுத்தாளர்களின் நூல் அறிமுகத்துடன் நவீன எழுத்துகள் சார்ந்த புரிதலுக்கான கலந்துரையாடலாக சிங்கப்பூர் தேசிய நூலகவாரியத்தின் 16வது (POD) மாடியில் எழுத்தாளர் பாலுமணிமாறனின் ‘தங்கமீன்’ பதிப்பக ஏற்பாட்டில் நடைபெற்றது.

உள்நுழைந்து வெளிரும் வரையில், பார்வையாளர் வருகையில் இருந்து நிழ்வில் நிறையவே வித்தியாசங்களை உணரமுடிந்தது. நிழவின் முதலாக தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் வாழ்த்துரையும், நன்றியுரையையும் ஒருங்கே சொன்னார்.

பின்னர் பேசவந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் “நவீனவாதம் ஒரு பகிர்வு” எனும் தலைப்பில், அவருள் இன்னும் முழுமைபெறதா நவீனத் தேடலை மேலைநாடுகளில் தொடங்கி, தமிழக எழுத்துகளின் மீதான நவீனத் தோன்றலுடன், ஈழ இலக்கியங்களின் நவீன வாழ்வியலையும், மலேசிய சிங்கப்பூர் நவீன வாதம் என ஐந்து கட்டங்களாக பிரித்தளிக்கபட்ட கட்டுரையை நிறைவுசெய்தபோது அறிவியல் சமன்பாடுகளாக பரிணமித்து பார்வையாளர்கள் முன் சிக்கலான பிம்பத்தையே தோற்றுவித்தது.

நவீனம், பின்நவீனத்தின் கூறுகளை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் பல்வேறு வண்ணச்சிதறல்களாக நவீன உலகின் வாழ்வியலையும், அதே வாழ்வியலை சங்ககாலத்திற்கும் எடுத்துச் சென்று இன்றைய, இயல்பான எதார்த்தமான விசயங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றுச்சொல்லி பள்ளிக்கூடம், பெண்ணியம் ஊடாகங்களை கடந்து பல்வேறு இசங்களைச் சுட்டி சொல்லப்பட்ட செரிவான செய்திகளை வாசகர்கள் உட்புகுந்து வந்தார்களா என்பதைவிட, கடைசியில் சொல்லப்பட்ட டோ டோ பறவையின் ஞாபகங்களை எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்ககூடும். அன்றைய இரவு உறக்கத்தில் டோரா புஜ்ஜியாக டோ டோ பறவையும் அதன் அழிவால் எப்படி டோ டோ மரங்களும் இன்று நம்மிடையே வெறும் பெயர்களாக இருக்கிறது என்ற பிம்பங்களைச் சுமந்து விடியும் வரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

பின்னர் எழுத்தாளர்களே நூலினை அறிமுகம் செய்யும் நிகழ்வு அரங்கேறியது. 700 சிறுகதைகள் எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களின் ‘அரிதாரம் கலைந்தவன்’ எனும் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட எழுத்தாளர் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். அதன்பின் பரவலாக கவனம்பெற்றிருக்கும் மற்றொரு மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது ‘கடவுள் அலையும் நகரம்’ முதல் கவிதை தொகுப்பை வெளியிட மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பெற்றுக்கொண்டார்.

Devarajan Book Launch

‘எனது மேடு பள்ளங்கள்’ எனும் தலைப்பில் அரிதாரம் கலைந்தவன் எனும் சிறுகதை புத்தகத்தை எழுதிய மலேசிய எழுத்தாளர் ஏ.தேவராஜன் 80-களின் தொடக்கத்தில் இருந்து எழுதிய சிறுகதைகளின் வெளியையும், பரிச்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்ட சிறுகதைகளுடன் சிறுகதைகளுக்கான கூறுகளையும் எடுத்துக்காட்டி இது நவீனமாக என்று சிறுகதையை படித்துப்பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றபோது எல்லோருக்குள் ஒருவித இறுக்கம் சுமந்துகொண்டது. அந்த இறுக்கங்களையெல்லாம் தனக்குள் மற்றொரு திறமையை பொதித்து வைத்திருந்த 70ற்கும் மேற்பட்ட குரல்களில் பேசும் ஏ.தேவராஜன் சிலகுரல்களில் பேசிக்காட்டியபோது தங்களின் இறுக்கங்களையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுடன் 16வது மாடிக்கட்டிடம் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போயிருக்ககூடும்.

Bala Book Launch

‘கடவுள் அலையும் நகரம்’ எனும் தனது முதல் கவிதை தொகுப்பை அறிமுகப்படுத்திய மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன் ‘நானும் எனது கடவுள் அலையும் நகரம்’ எனும் தலைப்பில் ஆரம்பகாலத்தில் கவர்சியான காதல்கவிதைகளை எழுதி சுற்றிக்கொண்டிருத்தவன் என்று பட்டவர்தனமாக ஆரம்பித்து, தற்செயலான நிகழ்வாக கல்லூரிக் காலகட்டத்தில் வாசிக்கபட்ட நவீனம் சார்ந்த எழுத்தாளர்களைசுட்டி மறுவாசிப்பின் வழியேதான் அவர்கள் முன்வைத்த சிக்கல்களை, புரிதல்களை எனக்குள் கிரகிக்கமுடிந்தது என்றும், தனது கடவுள் அலையும் நகரத்தின் கடவுள் என்பது ஒரு குறியீடு, அந்த குறியீடு தனது இயல்பு வாழ்க்கையை சிதைத்து வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களே என்பதை சில கவிதைகளின் வழியே புனிதபிம்பங்களையும், மனிதனை உற்பத்தியாக மாற்றும் நகரத்தின் பரபரப்புகளையும் உணர்வு சார்ந்து உடைத்தெறிந்தார். இருப்பினும் என்னற்ற வளர்ச்சிகளை தனக்குள் உள்ளடக்கி வானுயர்ந்து வளர்ந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றுகொண்டு இன்றும் ஆடுகளை வெட்டிக்கொண்டிருக்கறார்கள், இராமர்பாலம் என்றுச் சொல்லி முடக்கப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாழ்தலுக்கு சாத்தியமில்லாத எழுத்து படைப்பில் மட்டுமே நவீனத்தை உள்ளடக்கியிருக்கிறது, மாற அன்பு மட்டுமே நிரந்தரமானது அன்பாக இருங்கள் என்றபோது இவருக்கு முன் வந்தவர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியதை பார்வையாளர்கள் உணர்ந்திருக்க்க் கூடும்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட கலந்துரையாடலின் துவக்கத்தில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது சிங்கப்பூரின் பழமையை ஞாபகப்படுத்தி எது நவீனம் பின்நவீனம் என்றால் எல்லாமே மக்கள் விரும்பவேண்டும் என்பதை மனதில் வைத்து படைக்கவேண்டும் என்றார். இடையிடையே எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் சை.பீர்முகமதுவின் கருத்துகளுக்கு பெண்ணியம் சார்ந்த சில கருத்துகளை முன்வைத்தார். பின்னர் தொலைபேசிவாயிலாக ‘கொரியா கண்ணனிடம்’ எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சில கேள்விகளை முன்வைத்தார் பார்வையாளர்களும் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். இவரைத்தொடர்ந்து தமிழக எழுத்தாளர் ‘உயிர்மை’ இதழ் ஆசிரியர் ‘மனுஸ்யபுத்திரனுடன்’ தொலைத்தொடர்பை ஏற்படுத்த பின் நவீனம் பின்பின் நவீனம் என்று நகர்ந்துவிட்ட சூழலில் நவீனக் கவிதைகளை மறுவாசிப்பு தொடர்ச்சியான வாசித்தலின் வழியேதான் அடையாளம் காணமுடியும் என்றபோது நகரவாழ்வின் பரபரப்பில் தங்களின் சுயத்தை இழந்துகொண்டிருந்த மனிதர்கள் கலைந்துசெல்லத் துவங்கியிருந்தனர்.

தங்கமீன் பதிப்பகம் வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் படைப்புசார்ந்தும் ‘கலவை’ சிறுகதைதொகுப்பின் ஒரு நாள் நிகழ்வு, ‘பயாஸ்கோப்காரன்’ வழியே மலேசிய எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், இன்று புரிதலை நோக்கிய பயணம் என்று சிறு சலனங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகவே முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பயணம் விமர்சனங்களை கடந்தும் தொடரவேண்டும்.

தனி மனிதர்களாக நகர்த்திக்கொண்டிருக்கும் இந்த மலேசிய சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகள் ஒரு குழுவாக அல்லது இன்னும் சிலர் சேர்ந்து இயங்கும்போது கூடுதலான இடப்பெயர்வுகளை உருவாக்கலாம். உருவாக்கப்படவுண்டிய சிங்கப்பூரின் தமிழ் இளம் எழுத்தாளர்கள் டோ டோ பறவையின் ஞாபகங்களாக ஆக்கப்படுவதற்கு முன் வாசிப்பதற்கு சிறந்த களத்தினை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் அரசின் செயல்பாடுகள் அர்த்தம்பொதிந்த கனவாக….

பாண்டித்துரை





மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள்.

21 05 2009

இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என்பது இதுவே முதல் முறை ஆனால் கட்டுரைகளின் ஈர்ப்பு ஏனோ சிறுகதைகளுக்குள் இல்லை.

 

அக்கா – 1964 (இந்த வருடம் சரியா என்பது தெரியவில்லை)

திக்சக்கரம் – 1995

வம்ச விருத்தி – 1996

வடக்கு வீதி – 1998

 

வாசகர் வட்டத்திற்காக நான் வாசித்த மகாராஜாவின் ரயில் வண்டி – 2001  இவரது ஐந்தாவது சிறுகதை தொகுப்புஇ இதற்கு முன்னரும் பின்னரும் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை நான் படித்ததில்லை. சிறுகதையை படிப்பதற்கு முன்பு தலைப்பு பற்றிய பிரக்ஞையில் மகாராஜாவின் வண்டி என்றால் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் பிரமிப்புடன் மிதந்து கிடந்தேன். கதையை வாசிக்க துவங்கியபோதுஇ ஒருவித சலிப்பு ஏற்பட்டது. கதையை நகர்த்தல் ஒரு துப்பறியும் கதைசொல்லல் போன்ற பிம்பம் என்னுள் படிந்ததேஇ ஆனால் பிற கதைகளை வாசிக்க வாசிக்க மாற்றம் ஏற்பட்டது. ஒட்டு மொத்த கதைகளை படித்து முடிக்கும் போது பிரமிப்பு ஏற்படுதைவிடஇ ஒரு வறண்ட மனநிலையில் ஏற்படும் சலிப்பே தோன்றிமறைந்தது. எல்லாக்கதைகளின் முடிவிலும் ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு இழப்பு படிந்துபோய்கிடக்கிறது.

 

இருபது கதைகள் கொண்ட தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது மனதிற்கு நெருக்கமான கதை என்றுஇ “தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில”; கதையை சொல்லலாம்

 

பொன்னி எனும் வேலைக்காரச்சிறுமி காணமல் போவதிலிருந்து துவங்கிஇ அதன் தொடர்சியாக நிச்சயிக்கப்பட்ட தில்லை அம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு இந்த கதை முழுவதும் பிண்ணப்பட்ட இரண்டு சகோதர்களில் இளையவன் இறந்து போவதோடு முடிகிறது. இரண்டு சகோதர்களில் மூத்தவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதையில் இடம் பெரும் சில சொல்லாடல்களை இப்போது பார்ப்போம்.

 

‘’அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்கு பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது‘’.

 

‘’அங்கே கறுப்புப் புழுவுக்கு பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா இன்னும் நீ உடுக்கவில்லையா ? கார் வரப்போகிறது ஓடு ஓடு என்றாள் ‘’.

 

‘’நான் எப்போழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் எடுத்தேன் ‘’.

 

‘’எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது‘’.

 

‘’வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க மறு கை வெளியே தொங்க சின்ன மாமா சிகை கலைய அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். இந்த தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது. ‘’.

 

’கோயில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோவில். ஒரு குருக்களும் ஒரு மாடும் ஒரு சொறிநாயும் இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர்கள் ‘’.

 

‘’பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோவில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின்வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள் அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் அந்த குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது‘’.

 

‘’முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தனமாகத் திருப்பி வைத்தாள் ‘’.

 

 

‘’இன்னும் கரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி பத்திரப்படுத்தினேன் ‘’.

 

‘’அண்ணா நீ நீந்துவாயா? ஏன்றான் தீடிரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான் ‘’.

 

‘’எனக்கு கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்தை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்க கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

 

‘’அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்துகொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளை கொடுத்திருந்தாலோ சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம்போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது‘’.

 

‘’அதற்கு பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம் ‘’.

 

‘’தூங்குவதுபோலத் தம்பியை பக்கவாட்டில் இரண்டு ககைளிலும் ஏந்தியபடி அவர்நடந்து வந்து நடுஅறையில் நடுக்கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சுவிட்டேன் ‘’.

 

 

இப்போது நான் சொன்னவையெல்லாம் இந்த கதையில் வரும் இந்த கதையை சொல்லிச்செல்லும் மூத்த சிறுவனின் எண்ணங்கள் சார்ந்தவை . இவன் எந்த குணாதிசயங்களை உள்ளடக்கியவன் என்ற அனுமானத்திற்கு வாசகனை இட்டுச் செல்ல உதவுபவை

 

 

இரண்டு சகோதர்களுக்கு இடையேயான பிணைப்பை கதை முழுமைக்கும் காணாலாம். இயல்பாக இரு சகோதர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் ஏற்படும் போட்டிஇ தனக்கென்று பாதுகாத்து வரும் பொக்கிஷங்கள்இ பிரச்சினைகளின் தோற்றுவாயை மறைத்தல் என்று சிறுபிராயத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். மூத்த சிறுவன் நிறைய இடங்களில் அவனின் எண்ணங்கள் சாரந்து பிரமிக்கவைக்கிறான். கதைமுழுமைக்கும் மூத்த சிறுவனுக்குள் ஒரு வித குருரத்தன்மை நிரம்பியிருக்கிறது. இந்த குருரம் இளம்பிராயத்தில் பலருக்குள் ஏற்படக்கூடிய ஒன்றுதான் பின்னொருநாள் நினைக்கும்போதுஇ பலரும் இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்றுஇ நம்மீதான கோபத்தை பரிதாபத்தை தோற்றுவிக்கும.; சிலருக்குள் இத்தகைய குருரங்கள் வாழ்க்கை முழுமைக்கும் நிரம்பிவிடுகிறது.

 

‘நாளை’’ சிறுகதை ஒரு கிராம அழிவிலிருந்து தப்பித்து ஒருவேளை உணவுக்காய் நீண்ட தொலைவு அலைந்து அகதிமுகாமில் தங்கவைக்கப்படும் இரு சிறுவர்களை பற்றிய கதை என்றாலும் சொல்லப்பட்ட சில பக்கங்களுக்குள் இப்படித்தான் ஒரு முகாம் ஈழத்தில் இருக்ககூடும் என்ற ஒரு முழுமையான முகாமினை கற்பனை செய்யமுடிகிறது. இதில் வரக்கூடிய மூத்த சிறுவனும் அவனது எண்ணங்களால் பிரமிக்க வைக்கிறான்

 

‘’மகாராஜாவின் இரயில் வண்டி’’ என்ற முதல் சிறுகதை பதின்ம வயதில் ஒருவனுக்குள் ஏற்படும் அதிர்வுகளும் மென்மையான காதலையும் பலவருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லோருக்குள்ளும் இப்படி ஒன்றை அசைபோட வைக்கிறது.

 

‘’ஐந்தாவது கதிரை’’ சிறுகதை கணவன் மனைவிக்குள் நடைபெரும் மனம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை பேசுகிறது. கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட ஒருவள் தனது மார்பகங்களில் பச்சை குத்திக்கொண்டதோடு முடிகிறது. மார்பகங்களில் பச்சை குத்தியதை படிக்கும் போது எனக்குள் படித்தபோது ஒரு வித அதிர்வு இருந்தது. ஆனால் பிறகு எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன் ஒரு பெண் இன்னொரு பெண்ணிற்கு பச்சை குத்தியிருக்கலாம் என்று.

 

‘’கடன்’’  சிறுகதை சிங்கப்பூரின் நிரந்தவாசிகளுக்கு பொருந்திப்போகக்கூடிய ஒன்று. முதுமையில் தனித்தலையும் ஒருவரின் ஏக்கங்கள் மற்றும் வாழ்வின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களோடு அந்த முதியவரை சாகடிப்பதுடன் முடிகிறது.

 

 

 

கொம்புளான, தொடக்கம் , அம்மாவின் பாவாடை, பட்டம் ,  ராகுகாலம் என்று இன்னும் சில கதைகளை பற்றி எழுத நினைத்திருந்தேன்.





வேண்டும் ஒரு அகராதி – இஸ்திகுனு வா!

18 05 2009

SOUTHEASTASIA-0411-01

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி). இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும், அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன்,  என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது.

 

 

சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு-வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து, அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று, இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன் (அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).

 

“வாழமீனுக்கு” எனும் திரைப்பாடல் வெளிவந்த தருணம் (அப்போதுதான் நான் //பேரன் லவ்லி// போட்டு போட்டு பேராசை// உன்னை விட// அழகாய் இருப்பதாக// என்று எழுத ஆரம்பித்த தருணம்) ஒரே பாடலில் பிரபல்யம் அடைந்து விட்டானே என்ற காழ்ப்புணர்சியில், இது எல்லாம் ஒரு இசையா என்று சில குரல்கள் சினிமாத் துறைக்குள் ஒலித்தது. இதில் தன்னை ஆச்சாரங்களுக்குள் அடக்கிக்கொண்டு இசைஅமைக்கும் இசையமைப்பாளரும் ஒருவர் (இந்த செய்தி நான் பத்திரப்படுத்த தவறிவிட்ட (இப்படி பல செய்திகள்) ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது). “சித்திரம் பேசுதடி” திரைப்படம் வெளிவந்த தருணம் சென்னையில் இருந்தேன். அங்கு ஒரு திரையரங்கில் இந்தப்படம் ஓடிக்கொண்டிருந்தது (திரையரங்க பெயர் ஞாபகத்தில் இல்லை) அந்த திரையங்க வாயிலில் ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் வாழமீனுக்கு பாடலை பாடிய கானா உலகநாதனை அந்த திரைப்படத்தில் தோன்றிய உடையலங்காரத்தில் பார்க்கலாம். அவரை பாடச்சொல்லியும், ஆட்டோகிராப் கேட்டும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தனர், விசாரித்ததில் (யாரிடம் என்பது வேண்டாமே பின்பொருகட்டத்தில் தவறான தகவல் என்று தகவல் தந்தவரை மனதிற்குள் நான் பழிக்க நேரலாம் ) ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும்….  அப்படி ஒரு முறை காட்சிதர அவருக்கு ஐம்பதோ, நூறோ ரூபாய் அந்த திரையரங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

 

இந்த இடத்தில் சென்னை வேண்டாம் வேறு ஒரு மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் முறையாக பயின்ற ஒருவரின் முதல் சினிமா பாடல் வாழமீன் தந்த போதையை விட அதிகமாக தரும்பட்சத்தில், அந்தப் பாடகரை இப்படி திரையரங்க வாயிலில் மோடி மஸ்தானாக நிறுத்தி வைப்பார்களா என்ற கேள்விக்குறி எழுகிறது.

 

 

இந்த நேரத்தில் திரையில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழடைந்த ஓம்சக்தி பக்தர் இசையமைப்பாளர் தேவாவின் வெற்றிக்கு பின்னணனியில், கானா உலகநாதன் போன்ற பலர் இருந்திருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது இங்கு அவனின் ஏழ்மையும், அவன் சார்ந்த வர்க்கப் பின்னணியும் ஏகபோக சுரண்டலின் முதலாய் அவன் வாழ்க்கையின் முடிவாய்.

 

சரி மேற்சொன்ன விசயத்திற்கு வருவோம். குப்பத்து மொழி பற்றி சில தகவல்களை ஜெயமோகன் உள்ளிட்ட சில எழுத்தாளர்களும் சில நண்பர்களும் என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர். அதில் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படி குறிப்பிட்டிருப்பார் “ஒலித் திரிபுகளும் மொழிக்குழப்பமும் கொண்ட பிராமண பாஷை குப்பத்து மொழி போன்று தாழ்வாக நினைக்கப்படுவதில்லை என்பதை கவனித்தால் சென்னைத் தமிழ் மீதான கிண்டல் என்பது அதைப்பேசும் மக்கள் மீதான கிண்டல் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளலாம்”.

 

ஆக அவா, இவாளுக்கு அர்த்தம் புரிந்துகொள்ள இங்கு எவாளுக்கும் அகராதி தேவைப்படுவதில்லை, அதனையும் கடந்த ஒருவித பரவச குழைவே அவர்களுக்குள் ஏற்படுகிறது. இஸ்திகுனு-வாவோ அகராதி வேண்டி இம்சிக்கிறது. இறை என்று சொல்லிக்கொண்டு முற்றும் துறந்ததாக முற்றும் உணர்ந்ததாக சுகபோகமாய் வாழும் மா மகரிஷிகளை நாம் ஒன்றும் சொல்லவியலாது, அவர்களை சுற்றி எப்போதும் சிலர் இருந்துகொண்டிருக்கும் வரை. இந்த நேரத்தில் பகவான் ரமணமகரிஷியை மனதில் நினைக்கத் தோன்றுகிறது

 ©pandiidurai@yahoo.com

நன்றி: அநங்கம் (மலேசிய இலக்கிய இதழ்)