அழைப்பிதழ்

11 07 2008

ஜீலை20 அன்று நடைபெறவிருக்கும்

நானும் எனதுநண்பர்களும் இணைந்து எழுதியுள்ளபிரம்மாபுத்தகவெளியீட்டு விழாவிற்கு

 

அன்புடன் அழைக்கின்றேன்

பாண்டித்துரை

82377006

 

நூல்வெளியீடு

 

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம்

நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: மாலை 6.30 மணியளவில்

 

     பிரம்மா

 

தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம்

 

வரவேற்புரை:      தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார்

 

வாழ்த்துப்பா:   கவிஞர் சின்னபாரதி

 

விழாத் தலைமை

திருமதி. புஷ்பலதா கதிரவேலு

சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி

 

 

இவர்களைப்பற்றி                                                         இவர்கள்

 

 

கவிஞர். கோட்டைபிரபு                       சொல்லருவி பெரி.சிவக்குமார்

 

கவிஞர். (நீதிபதி) பாண்டித்துரை    எழுத்தாளர். இராம.வைரவன்

 

கவிஞர். செல்வா                                   கவிஞர். திருமதி இன்பா

 

கவிஞர். காளிமுத்து பாரத்                கவிஞர். காதலுடன் கண்ணா

 

 

நூல் வெளியீடு

தமிழ்த் தொண்டர் போப்ராஜ் என்கிற நாகை தங்கராஜ்

(ஜோஸ்கோ டிராவல்ஸ்)

 

 

முதன்மை பிரதி பெறுபவர்

தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் - BBM

(தலைவர். மாதவி இலக்கிய மன்றம்)

 

 

சிறப்புரை

சொல்லின் செல்வர்

முனைவர் இரத்தின வேங்கடேசன்

 

 

நிகழ்ச்சி நெறியாளர்: கவிதை நதி கவிஞர் .வீ. விசயபாரதி

 

நன்றியுரை:        கவிஞர் (நீதிபதி) பாண்டித்துரை

 

  பிரம்மா பிறக்கிறான்; வாழ்த்திட வாருங்கள்!

 

 

 

 

பிரம்மாக்களுடன்  இணைந்து

இன்முக அழைப்பு

.வீ.சத்தியமூர்த்தி கண்டனூர் சசிகுமார் சின்னபாரதி

அறிவுநிதி மணிசரவணன்

 

அலைபேசி தொடர்புக்கு

82377006 ஃ 90613810 ஃ 93969383

 

 





தென்றல்

8 07 2008

 

 

தென்றலாய்
ஒரு கவிதையை வாசித்துக்கொண்டிருந்தாள்
கேட்டுக்கொண்டிருந்ததன் முடிவினில்
ன்றும் புரியவில்லை
ன்றுமட்டும் புரிந்தது
எனக்கு
மொழிப்பழக்கமில்லையென்பதை
சாவிகொடுக்கப்பட்ட பொம்மையுடனான
அவளின் சம்பாஷனை வழியே………………





மீண்டும் கென்

28 06 2008

 

 

பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்ற எனது கவிதை உங்களுடையதா என்று கேட்டு சாருவிடமிருந்து மின்னஞலுடன் ஒரு தொடர்பு எண்ணும் வந்தது.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்றெண்ணியபடியே தொடர்பு கொண்டேன்.

 

சாருவே உரையாடியது

எனக்கு கொஞ்சம் பதட்டம்

பேசவேண்டியதை எல்லாம் வேகமாகவே பேசினேன்.

கென் என்ற தலைப்பில் உள்ள கவிதை பற்றி விசாரித்தார். பின்னர்தான் புரிந்தது அதனை என்னுடைய கவிதையாக அவர் பாவித்தது…..

கென்னின் மடிநிறைய கற்கள் என்ற கவிதைதொகுப்பு (2வது மின் தொகுப்பு) நூலில்இருந்து கென்னின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய கவிதை வரிகளை தொகுத்து நேற்று (27.06.200 8) கென்னின் பிறந்த நாள் என்பதால் கென்னின் கவிதை வரிகளையே கென்னிற்கு பிறந்த நாள் பரிசளித்ததாக கூறினேன்

கென்னின் கவிதைகளை எனக்கு அனுப்பமுடியுமா என்றார். பேசுவதற்கு நிறைய இருக்கிறது கவிதை  உங்களுடையதா என்றார். ஆமாம் என்றேன்

உங்களின் படைப்புகளின் கீழே உங்களின் பெயரினை பதிவுசெய்யுங்கள் என்றார். புரிந்துகொண்டேன்.

எனது நகுலன் வலைப்பக்கம்பற்றி விசாரித்தார்.

(அதனைபற்றிய முழுமையான விபரங்களை எனது வலைப்பூவில் கூறவில்லை). ஜனரஞ்சக இதழ்களில் வரும் இலக்கியம் சார்ந்த படைப்புககளை ஒரு இடத்தில் தொகுக்க ஆரம்பித்து (http://nagulan.wordpress.com/ ) நேரமின்மையால் சரிவர இயக்கவில்லை என்றேன்.

தொடர்பை துண்டித்தபொழுது இன்னும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆக்கம்: பாண்டித்துரை