கடிதம் - 1
22 07 2008அன்புள்ள பாண்டி
பேசிக்கொண்டிருப்பது வாசு, உங்களது மின் அஞ்சலை பார்த்துவிட்டு, எழுதாத கடிதத்தின் ஞாபகம் வர அமர்ந்துவிட்டேன். சம்பவங்களில் இருந்து கவிதை தேடும்போது சம்பவத்தின் சக மனிதன் கவனிக்கப்படுவதும் நாம் கவிதை தேடும் வேட்டைக்காரனாகவும் மாறும் சாத்தியம் உண்டு. மனதை ஆட்டிப்படைக்கின்ற சம்பவம் நடக்காத ஒரு நாளில் மண்டை முடியை பிய்துக்கொள்ளும் அவஸ்தையும் நிகழக்கூடும் ( இடைவிட்டு மீண்டும் எழுதுகிறேன். வீட்டிற்கு வந்துவிட்டேன்.)
இந்தக் கடிதம் ஏன் கிழிந்தது என்பதிலிருந்துதான் இந்த கடிதம் தொடங்கியிருக்கவேண்டும். இந்த கடிதத்தின் நீள, அகல போதமை என்னை கட்டுப்படுத்துவதை உணர்கிறேன். இன்று நான் எழுதும் இரண்டாவது கடிதம். கடந்த இரண்டு வருடத்தில் இருந்தே நான் எழுதும் இரண்டாவது கடிதம் இதுதான். முகிலுக்கு எழுதப்பட்ட முதல் கடிதத்தில் நிறையவே எழுதிவிட்டேன். அந்த கடிதத்தின் காப்பி இதில் வந்துவிடக்கூடாது என்று கவனமாக எழுதுகிறேன்.
நாம் தொலையாடியிருந்தாலும் (உங்களிடம் சுட்டது) சிறு அறிமுகம் நமக்குள் இருந்தாலும் இதுவே நமது நேரடி சந்திப்பாக நான் நினைப்பதால் என்னைப்பற்றின வலுவான ஒன்றை உங்களிடம் காட்டி சபாஷ் வாங்கிட நினைக்கிற முட்டாள்தனம் வந்துவிட்டது. மூன்றாவது பாட்டில் பீரும் மூன்றாவது முத்தமும் பால்யத்தின் கனவுகளை அல்ல பால்யத்தையே கொண்டுவரும் (இந்த எடத்தில் கடிதத்தை கிழிக்கும்பொழுது ஒரு வரி கிழிந்துவிட்டது) கொண்டவையோ… அடுத்த முறை மூன்றாவது பாட்டில் பீரை முயற்சி செய்யவும். (எழுத்து பிழைகளோடு கொஞ்சம் கருத்து பிழையும் இருக்கும் மன்னிக்கவும்) படித்ததுவரை ஒரே ஒரு கவிதை தவிர்த்து உங்களை கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. (அந்தக் கவிதை நியாபகமில்லை பண்ணும்போது சொல்கிறேன்) பால்யத்தின் கனவுகளுக்காக நீங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம் காதல் கவிதைகளில் பழைய நெடி இருந்தாலும் ரீமிக்ஸ் பாடல் போல் இல்லை. காதலை ஆணிவேர் சல்லிவேர் அக்குவேராக பிரித்து எரிந்துவிட்ட தமிழ் சமுகத்துக்கு நாம் காட்டும் வேரும் அதில் ஒன்றாகவே கட்டாயம் இருக்கும். தமிழ் சமூகம் காதலை விட்டு ஒதுங்கி மீண்டும் புதிய காதல் செய்ய தொடங்கும்போது அது வாய்க்கலாம். அதுவரை யாரோ எடுத்து எறிந்த ஏதோ ஓர் வேர் நம் கைகளில் இருந்துகொண்டுதான் இருக்கும். உங்களின் கட்டுரை சிலரை படித்தேன். மிக அருமை சிறுகதைகளை இன்னும் படிக்கவில்லை அலுவலகத்தில் கொஞ்சம் கெடுபிடி அதிகமாகிவிட்டது. போன மாதம் வந்த எங்கள் மேனேஜரை விழித்துக்கொள்ள வைத்துவிட்டது. உங்கள் போட்டோ பார்த்தேன் ரொம்ப சின்னதாகவும் கொஞ்சம் அழகாகவும் ரொம்ப ஒல்லியாகவும் (இது மட்டும் கவிஞர்களுக்கான பொது அடையாளம்)
தூரத்தில் இருந்து என்னை பார்த்தால் உங்களைப்போலவும் (ச்சே… சே.. ரொம்ப அழுகுன்னே எழுதியிருக்கலாம்) இருக்கிறீர்கள். கடிதம் முடிந்துவிட்டது. நிஜமாகவே எப்ப முடியும் என்று காத்திருந்தேன். இன்னும் சிலநாள் ஆகும் மிக ஆர்வத்துடன் ஒரு கடிதம் எழுத பாசம் பழக்கம்தானே!
அன்புடன் வாசு
கடிதத்தின் பக்கவாட்டில் எழுதப்பட்டது
சிங்கப்பூரில் குளிர் அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் வெயிலும் வெயில் அதிகமாக இருப்பதாக நினைத்தால் குளிரும் கொடுக்கும்படி இறைவனை வேண்டுகிறேன்.
நலம் நலமறிய ஆவா எழுத மறந்துவிட்டேன்.
மறுமொழிகள் : 1 மறுமொழி »
வகைகள் : கடிதம், சமீபத்தில் படித்தது, நட்புக்காக, மனவெளியில்

அண்மைய மறுமொழிகள்