“கலவை”

7 07 2008

15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின்கலவைமுதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.

 

இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரேகலவைசிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !

சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால்  இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால்கலவை“  சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கியகலவைசிறுகதை  மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.

தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.

என்பார்வையில்  கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ..பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார

மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது  ஒருமாணவன் - ஒரு நாள் - ஒரு ஆசிரியைஎன்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. ” தடுமாற்றம் ” ” இன்னசெய்தாரைபோன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்  என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் .சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்

நன்றி: www.tamiloviam.com              “கலவை” சிறுகதை தொகுப்பு வெளியீடு

பாண்டித்துரை

 





வாசிப்போம் சிங்கப்பூர் 2008

2 07 2008

 

இந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர்  நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

 

இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு அன்று எல்லோரும் கலந்துகொள்ளும் பொதுச்சந்திப்பாக நிகழவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவம். எஸ்.ராமகிருஷ்ணன் -னின்  அனைத்து நூல்களும் சிங்கப்பூரின் பிரதான நூலகங்களில் இருக்கிறது.

 

 

பொதுசந்திப்பு பற்றிய விபரங்கள்

 

1. Saturday July 12 6.30-8pm
    Programme Zone,Central Lending Library
     100,
Victoria Street.2. Sunday July 13,

4.30-8pm
    Programme Zone,
   
Ang Mo Kio  Community Library.
 - nearest MRT -
Ang Mo Kio.

 

 

இந்த ஆண்டு எஸ்.ராமகிருஷ்ணன்-னின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்  “பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தொகுப்பாக தொகுத்துள்ளனர். இந்த தொகுப்பின் அடிப்படையில் ஒருநாள் கலந்துரையாடல் இரக்ககூடும்.

 

தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்

 

1. ஆண்கள் தெருவில் ஒரு வீடு
2. 
நம்மில் ஒருவன்
3. 
இடம் பெயர்தல்
4. 
தெரிந்தவர்கள்
5. 
தாவரங்களின் உரையாடல்
6. 
பெயரில்லாத ஊரின் பகல்வேளை
7. 
அந்தரம்
8. 
நத்தைகளின் புன்னகை

 

இந்த தொகுப்பை படித்து முடித்தபொழுதுபெயரில்லாத ஊரின் பகல்வேளை” சிறுகதை  எனக்கு இவரது புதினமானநெடுங்குருதி”-யை ஏனோ ஞாபகப்படுத்தியது.

 

பாண்டித்துர





வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

1 04 2008

 வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, கூறல், நிறை மட்டுமே படிக்க நேர்ந்தது. நான் இன்னும் என்னை படைப்புகளை நுகர்ந்து என் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்த தயார் செய்யவில்லை, அல்லது இன்னும் அதீதமாக இலக்கிய படைப்புகளை படிக்காததன் தயக்கமாகவும் இருக்கலாம். என்னை ஏதோ ஒரு தளத்திற்கு அழைத்துச்செல்லும் களமாக வாசகர்வட்டம் இருப்பதால், என் பயிற்சியாகவே இந்த முயற்சியும்  

பொதுவாகவே வண்ணதாசன் சிறுகதைகளில் கதைசொல்லக்கூடிய உக்தி ஒன்று போலத்தான் தெரிகிறது. இதை இவரது பல சிறுகதைகளில் காணமுடிகிறது (நான் படித்தவரையில்) அல்லது பிறரின் சிறுகதைகளில் கவனிக்க தவறிய அம்சமாகவும் இருக்கலாம். ஒரு கதையில் டிபன்பாக்ஸ், இன்னும் சிலகதைகளில் போர்வை, தலைவலி, தேரோட்டம் என்று இது போன்ற ஒன்றை மையப்படுத்தி, அல்லது அதீதமாக தென்படச்செய்து இதனூடாக அந்த கதையை விவரித்து விஸ்தரித்து செல்லும் பொழுதுதான், வண்ணதாசன் என்னை வியக்கச்செய்கிறார். நான் விரும்பி படித்த யாளிகள் கதை, இன்னும் சில கதைகள் அலுப்பு தட்டச் செய்தது. திரு.சுப்ரமணியம் ரமேஷ் குறிப்பிட்ட தனுமை என்னும் சிறுகதை என்னை ரொம்பவே கவர்ந்தது அதை என்னால் இங்கு எப்படி என்று விவரிக்க இயலாதது வருத்தமே.

 ஓர் அருவியும் 3 சிரிப்பும் பக்கம் -131ல் 

குற்றால அருவியில் இரு நண்பர்களுக்கு இடையேயான சம்பாசனைகளில் இந்த சிறுகதை காட்டப்படுகிறது. கடைவைத்திருக்கும் அண்ணாச்சி என்னத்தை அனுபவித்திருக்க கூடும் என்ற இவர்களின் உரையாடலால், அண்ணாச்சி முதன் முறையாக வாழ்தலின் தரிசனத்தை அனுபவிக்க முயல்கிறார். இந்த சிறுகதையை படிக்கும்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தது பொன்.ராமச்சந்திரனும், ஆனந்தவிகடனும். பொன்.ராமச்சந்திரன் நேற்றிருந்தோம் முதல் சந்திப்பில் எம்.ஆர்.டிக்காக காத்திருந்த தருணத்தை சொன்னது, அநேக பேர் இப்படித்தான் இருக்கின்றோம். சிலரோ தெரிந்தும் அத்தகு வாழ்தலை நுகர விருப்பமின்றியே விடைபெறுகின்றனர். 

ஆவியில் வண்ணதாசன் எழுதிவரும் தொடர் அகம் புறம், எப்பொழுதாவது படிப்பதுண்டு. அப்படி சமீபத்திய அவரது பதிவு, புலி பற்றி வரும் கனவு (யானை பற்றிய கனவுகள்தான் இவருக்கு அதிகமாக வருமாம்) இறுதியில் எல்லோரையும் கனவு காணச்சொல்லியிருப்பார். அந்தக் கனவும் அண்ணாச்சியுடன் பொருந்திப்போவதாகவே தோன்றுகிறது.

 இதே போன்று ஞாபகம் எனும் சிறுகதை பக்கம் 175-ல் 

டிபன் பாக்ஸ் பற்றிய ஞாபகங்களை எடுத்துச்செல்லும் அந்தக் கதையில் இறுதியில் வரும் வரிகள்  

வாட்ச்மேன் இவள் பார்ப்பதற்கு பதில் சொல்வது போல ‘ நம்ம எஃப் கிளார்க்குமா ஓவர்டைம் செய்தாரு வேலைனா வீடும் அவருக்கு மறந்து போகும்னு சிரித்தார்.   

அவளுக்கு சிரிப்பு வரவில்லை தனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல் அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்

 இந்த சிறுகதையில் டிபன்பாக்ஸை மறந்துவிட்டுச் சென்று மீண்டும் எடுக்க வரும்பொழுது 100 பேர் பணிபுரிந்த அலுவலகமா இது என்று, அந்த நிசப்தத்தில் தன்னை அவள் தொலைத்திருப்பாள். இந்த கதையின் ஓட்டம் வேறு என்றாலும் முடிவு நான் மேலே சொன்ன கதையுடன் ஒன்றுபடுகிறது. அண்ணாச்சிக்கு ஞாபகப்படுத்தியது போல், கடந்து செல்லும் பொழுது நமக்கும் யாரவது ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது. 

வந்தோம், இருந்தோம், சென்றோம், இப்படித்தான் இங்கு அநேக பேர் வாழ்ந்து செல்கின்றனர். நம்மை சுற்றிலும் நாம் தவறவிட்ட வாழ்வியல்களை அதற்குரிய கணத்துடன் வண்ணதாசனின் பல சிறுகதைகளில் காணமுடிகிறது. 

வண்ணாத்திப்பூச்சியின் நினைவுகளுடன்

பாண்டித்துரை  

நன்றி:வாசகர் வட்டம்  (10-02.200 8)