இது சரியா? தவறா

24 07 2008

                                                                          

இது சரியா தவறா என்று இங்கும் யாருக்கும் தெரிவதில்லை. சரி என்ற மனநிலையில் நான் இருக்கிறேன். தவறு என்ற மனநிலையில் நீங்கள் இருக்கலாம். நான் சொல்லவருகின்ற விசயங்கள் எல்லாம் உங்களிடத்தில் மாறுபடக்கூடும். நான் உங்களிடம் சொல்வது, நான் நீங்கள் ஆகவேண்டிய நிர்பந்தத்தை எதிர்பார்க்காதீர்கள். நான் எனது, எனக்கான, சில நிமிடங்கள், சில மணிநேரம், சிலநாட்களையாவது விட்டுச்செல்லுங்கள். இவை புரிதலுக்கான, உணர்தலுக்கான, பகிர்தலுக்கான விசயமாக இருக்கலாம் இல்லாதும்மிருக்கலாம்.

 

உணர்சிவசப்பட்டு உதிர்கின்ற கண்ணீர்துளிகளோ, மகிழ்வின் உந்துதலால் ஆனந்த கூத்தாடுவதையோ, எதிர்நோக்காததால் நான் எழுதிச்செல்வதில் எவ்வித சிரமமும் இல்லை. மொழியறியாதவனின் மனநிலை, அல்லது மொழியற்றவனின் மனநிலை, நான் கடந்து செல்லவும், என்னை கடத்திச்செல்லவும் காரணியாக இருக்கின்றன. இப்படி பேசுவதற்கான ஆயத்தங்களிலேயே திசை திருப்பப்பட்டு மூர்ச்சையாகிவிடுகிறேன்.

 

வீடுகளுக்குள் வருபவர்கள் எல்லாம் தவறானவர்களாக இருக்கிறார்கள். தப்பு தப்பாக பேசுகிறார்கள். ஏன் இப்படி இவன் இருக்கின்றான். இவனை சரியாக கவனிப்பது இல்லையா? உங்களின் மூத்தபையன் நல்லா கலகலனு இருக்கிறானே! இவனுக்கு என்னஆச்சு, என்பதில் தொடங்கி எண்ணங்களற்ற கேள்விகளால் எதிர்படும் குழந்தைகளின் முகங்களில் சப்தங்களற்ற சலனங்களாக. சபிக்கப்பட்டவர்களாக சிறுபிராயங்களிலேயே சிலுவைகளை  ஏற்றுக்கொள்கின்றனர்.

 

சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பெயரில் சென்றிருந்தேன். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். மூத்த பெண்ணிற்கு 12வயதிருக்கலாம் இளைய பெண்ணிற்கு 7வயதிருக்கலாம். இளையபெண் துறு துறு என்று எப்பொழுதும் பட்டாம்பூச்சியாய் தொட்டதும் பறப்பதும் தொடத்துவங்குமுன் பறப்பதுமாக வர்ணப்பூச்சுகளாய் என்னைமட்டுமல்ல பலரையும் ஈர்த்திடுவாள். இவளை பார்த்த பின் இவளது மூத்த சகோதரியை பார்க்க நேரிட்டது ஒரு சிலருக்குள் வினா எழும்பலாம் விடைபெறறுச் செல்லும்பொழுது சிலர் வினவவும்கூடும். முதல்பெண்குழந்தையின் ஆழ்ந்த மௌனமும் அதனூடான தனிமையும் ஒற்றைத்தலைவலியாய் எனக்கும், முன், பின் வந்தவர்களும் அனுபவித்ததை.

 

மூத்த குழந்தை, அவளின் இன்னும் சிறிய ப்ராயத்தில் சந்தித்திருப்பின் அல்லது இன்னும் பல ஆண்டுகள் கடந்துசென்றபின் சந்தித்திருப்பின் பட்டாம்பூச்சியாய் சிறகசைத்திருக்கலாம்! இப்பொழுது எனக்கு, இல்லை உங்களுக்கு சில ஓப்பீடுகள் எழக்கூடும். ஏன் இப்படி இவள் இருக்கிறாள், இளையவள் போல இல்லையே இவளுள் இருக்கும் அந்த கலகல துறுதுறு எல்லாம் எங்கு ஒளித்துவைத்திருப்பாள் என்று புரிந்து கொண்டதன் வெளிப்பாடு இது அல்ல!

 

கேள்விகள் எழுந்த வண்ணமாய் அதற்கான பதிலா இது என்று தெரியாதபொழுதும் நான் அவளாகவே மாறுபட எத்தனிக்கிறேன். அவளது மனவெளியில் சஞ்சரிக்கும்பொழுது தனிமையும், மௌனமும் சின்னதாய் சிறகசைத்து புன்னகைக்கிறதுஇசைமீதான இவளது ஈடுபாடு முதன்மையான கல்வி இவற்றிடையே வாழ்ந்ததன் மிச்சங்களை நேசிக்க வாசிப்பதற்கான பக்கங்களாக அடிக்கிச்செல்லும் ஒவ்வொரு வெளியியும் அர்த்தம்பொதிந்தவை. மறையும் சூரியனின் உடைந்த சுடர்வெளியாய் எங்கும் புன்னகை எல்லாம் புன்னகை. இளையபெண் எந்த அளவிற்கு பட்டாம்பூச்சியாய் சிறகசைத்தாலோ அதனினும் மேலானதொரு தளத்தில் சஞ்சரித்துகொண்டிருந்தாள். உணவினை கொறித்துக்கொண்டிருக்கும் அணிலின் சிநேகத்தை ஏற்படுத்தியபடி.

 

நம்முடைய கேள்விகளும் அதன்பிறகு எழத்துடிக்கும் திணிப்புகளும் சிதைவுறும் மனவெளிக்கு திறப்புகளாகிறது. வேறபட்ட இருவரின் உலகுமே அழகியல் நிறைந்தது. ஆழ்கடலுக்குள் இவர்களை இழுத்சென்றபடி இவர்களின் தாய் தந்தையர் இருந்திருக்கலாம், இருக்கநினைக்கலாம்!

 

சரியா தவறா என்றதன் தொடர்ச்சியாய் இளையபெண்ணின் ஓவியங்களில் மனமொற்றி, அவளது வினாவிற்கான தேடலாக என் விழியெங்கும் வண்ணங்கள் நிரம்பிக்கொண்டிருக்க, என்முன் ஒரு புகைப்பட ஆல்பம் நீட்டப்பட்டது. நண்பரின் திருமதி கொடுத்த ஆல்பத்தை வாங்கும்பொழுது திருமண ஆல்பமாகவே இருக்ககூடும் என்ற எண்ணப்பாடு. (பல வீடுகளும் ஆல்பம் என்று அந்த ஒன்றை மட்டுமே அதிகமாக தந்ததை நினைத்துக்கொண்டேன்)  ஞாபகப்பொதிகளை மனம் சுமத்தலைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாக புகைப்படங்கள் சுமந்தபடியே வண்ணகளை இழப்பதற்கான ஆயத்தங்களில் இருக்கலாம்.

 

ஐந்து ஆறு வருடம், இன்னும் கொஞ்சம் காலறநடந்து ஒரு பத்து பதினைந்துவருடம் என்று பின்நோக்கத்தொடங்கினால், அம்மாவின் மடிமீது தலைவைத்துறங்கும் நிலையில் ஒவ்வொரு புகைப்படங்களாக வருடியபடி அடுத்தடுத்த பக்கங்களாக புரட்டப்படும்பொழுது, சிலநிமிட வாழ்தலுக்கான சாத்திங்கள் அந்தப்புகைப்படங்களில்! அந்த புகைப்படங்களில் இருப்பவருக்கோ அல்லது அதனையொட்டி பயணித்தவர்களோ மீட்டெடுத்தபடி மிதக்கும் வெளிகளில் பயணிக்க ………

 

இந்த புகைப்படத்தில் சம்பந்தப்படாதவர்கள் இந்த புகைப்படங்களை பார்த்தால்? இதுபோன்ற ஒருவெளியில் பயணித்திருப்பினும் புகைப்படத்தின் வெளிகளுக்குள் பயணிக்க !

 

குடும்ப சுற்றுலா சென்றுவந்ததன் தடயங்களை பின்பற்ற  ஆல்பத்தில் காலயந்திரமும் சில மாயயந்திரமும் இணைக்கபட்டுள்ளதா? என்ற ஆவலில் பக்ககங்களை புரட்டும்பொழுது எல்லாம் விரியும் விழிகளின் வழியே ஒருவித மயாகற்பனைகளில் அதற்கான காட்சிகளும் விரியத்தொடங்குகிறது. பயணச்சீட்டுக்களும் புகைப்பட உருவாக்கத்தின் புராதான சுருக்கங்களுமாய் தசவதாரத்தை ரசித்த ஜாக்கிஷானின் மனநிலையில் மொழிதெரியாதவனாய் வாவ் வாவ் என்றே சொல்லத்தோன்றுகிறது  

 

எனக்கான ஆல்பமும் இப்படிஒன்றாகத்தான் இருக்கவேண்டும். எங்கு இந்த ஆல்பத்தினை வடிவமைத்திருப்பர் என்ற எண்ணப்பாட்டை  கேட்டபொழுது நண்பரின் திருமதி 15தினங்களுக்கும் மேலாக ஈடுபட்டு உருவாக்கியவை என்பதை ஒருபக்கம் மனம் நம்மபமறுக்கும்மல்லவா. கலைத்து போடப்பட்ட சீட்டுக்கட்டுகளாக மிக நேர்த்தியாக வடிமைக்கப்பட்டிருந்தது. கவனச்சிதறலையும் அடுத்தபக்களுக்கே இழுத்துசெல்லமுயன்றபடி பக்கங்கள்தோறும் மழலையரின் புன்னகையாய் அத்தனை வசீகரம். இந்த புகைப்பட ஆல்ப வடிவமைப்பினை வர்தக ரீதியில் முயன்றிருப்பின் நிச்சயம் சில பல உச்சங்களை தொட்டிருக்கலாம். இவற்றை எல்லாம் கடந்தபடி மதிய உணவினை உட்கொண்டபொழுது பிரியாணியுடன் பரிமமாறப்பட்ட குழம்பில் சிறு வில்லைகளாக போடப்பட தேங்காய் சில்லுகள் இப்பொழுதும் அந்த மதியவெளிக்கு இழுத்துச்செல்கிறது.

 

உண்டபின் குழுமிய நண்பர்களிடையே நவீனம், பின்நவீனம் கவிதைகள் பற்றிய கருத்துக்களை தெளிவுபடுத்த, அல்லது எப்படி அணுகுவது என்ற வினவலாக எழுந்த சொல்லாடல்கள் எல்லாம் தெளிவின்மையாய் தொக்கிநிற்பதால் புரிதலுக்கான முயற்சியாய் சொல்லபட்டவையை இங்கு இசையினூடக அணுகத்தொடங்குகிறேன். கவிதை மீதான ஒப்பீடாக இங்கு இசையை குறிப்பிடலாம். கர்நாடக சங்கீதம் தாண்டிய பறை போன்ற நம்முடையபாராம்பரிய இசைச்கருவிகள் எழும் இசைத்தலை எத்தனை பேர் புரிதலுடன் அணுகத்தொடங்கியிருக்கமுடியும்? தெம்மாங்கு, நாட்டுப்புறம், வில்லுப்பாட்டு என்று குறிப்பிட்ட சமுகத்தின் இசைவடிவங்களின் குறிப்பறித்தவர்கள் எத்தனைபேராக இருக்ககூடும்? இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் இசையாய் குத்தகை எடுத்திருக்கும் கோடம்பாக்கத்து இசையயை அணுகத்தொடங்கியிருக்கும் தொண்ணூரு சதவிகிதத்தினர் புரிதலுடான அணுகியிருப்பர்?

 

இசைமீது எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாதவன் என்ற அடிப்படையில் எப்படி இசையை நான் உணருகிறேன் என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது. ஆனால் இசையை ரசித்திருக்கிறேன், ரசித்துக்கொண்டிருக்கிறேன்இசையோடு இசையாக மாறவும் எத்தனிக்கிறேன். இதுபற்றி இங்கும் யாரும் ஆச்சரயபட்டதாய் நினைவில்லை. இது எனக்குமட்டுமல்ல பலருக்குமான ஒன்றே. ராஜஸ்தான்னில் இசைக்கப்படும் மரபுவழிபாடலாகவோ, கிறிஸ்தவ தேவாலயத்தில் இசைக்கபடும் இசையாகவோ, மசூதிகளில் ஓதப்படும் பாத்திமாவிலோ அல்லது நண்பர்களுடனா செல்பேசிஉரையாடல்களில் அவர்களின் பேச்சையும்தாண்டிய கேட்ககூடிய ரீங்காரங்களை எல்லாம்