வாசிப்போம் சிங்கப்பூர் 2008

2 07 2008

 

இந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர்  நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

 

இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு அன்று எல்லோரும் கலந்துகொள்ளும் பொதுச்சந்திப்பாக நிகழவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவம். எஸ்.ராமகிருஷ்ணன் -னின்  அனைத்து நூல்களும் சிங்கப்பூரின் பிரதான நூலகங்களில் இருக்கிறது.

 

 

பொதுசந்திப்பு பற்றிய விபரங்கள்

 

1. Saturday July 12 6.30-8pm
    Programme Zone,Central Lending Library
     100,
Victoria Street.2. Sunday July 13,

4.30-8pm
    Programme Zone,
   
Ang Mo Kio  Community Library.
 - nearest MRT -
Ang Mo Kio.

 

 

இந்த ஆண்டு எஸ்.ராமகிருஷ்ணன்-னின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்  “பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தொகுப்பாக தொகுத்துள்ளனர். இந்த தொகுப்பின் அடிப்படையில் ஒருநாள் கலந்துரையாடல் இரக்ககூடும்.

 

தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்

 

1. ஆண்கள் தெருவில் ஒரு வீடு
2. 
நம்மில் ஒருவன்
3. 
இடம் பெயர்தல்
4. 
தெரிந்தவர்கள்
5. 
தாவரங்களின் உரையாடல்
6. 
பெயரில்லாத ஊரின் பகல்வேளை
7. 
அந்தரம்
8. 
நத்தைகளின் புன்னகை

 

இந்த தொகுப்பை படித்து முடித்தபொழுதுபெயரில்லாத ஊரின் பகல்வேளை” சிறுகதை  எனக்கு இவரது புதினமானநெடுங்குருதி”-யை ஏனோ ஞாபகப்படுத்தியது.

 

பாண்டித்துர





மீண்டும் மீண்டும் கென்

30 06 2008

 

சனியன்றே இந்த பதிவையெழுதியிருப்பின்

 

இன்று மீண்டும் மீண்டும் மீண்டும் கென் என்றே பதிவுசெய்திருப்பேன்.

 

சனியன்று மாலை கென் என்னை தொடர்புகொண்டு பாண்டி சாருஆன்லைன் பார்த்திங்களா என்றார்.

 

இல்லை கென் என்றேன்.

 

ரொம்பநன்றி பாண்டி, என்னுடைய கவிதையையும், உங்களுடைய கவிதையும் சாருவின் இணையத்தில் வந்துள்ளது என்றார். நன்றிகளை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டோம். நாளையும் (ஞாயிறு) நன்றிகளை சொல்லிக்கொள்ளப்போகின்றோம் என்பதை அறியாது.

 

ஞாயிறு கென்னிடமிருந்து அழைப்பு

 

சாருவின் இணையத்தை பார்த்தீர்களா என்று, இல்லை கென் திங்களன்றுதான் பார்க்கநேரிடுமென்றேன்.

 

கென் ஏதோ ஒன்றை அணுமானித்தே கேட்டது

 

ஆனால் அதன் வீரியம் பற்றி அறியாது கென்னும்வலைப்பக்கம் செல்லவில்லை. ஞாயிறு மாலை இணையத்திற்கு சென்று சாருஆன்லைனை பார்த்தபின்னர் அவ்வளவு மகிழ்ச்சி, சாரு தனது 3 வது எழுத்துலக  வாரிசாக கென்னை அறிவித்திருந்தார் (மற்ற இருவர் வா.மு. கோமு , மனோஜ்). கென்னை தொடர்புகொண்ட பொழுது ஆமாம் பாண்டி நண்பர்கள் சிலர் விசயத்தை சொல்லமால் இணையத்தை பார்த்தியா என்றனர் அதன் பின்னே சென்றுபார்த்தேன், எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை நீ கொடுத்திருக்கிறாய் பாண்டி என்று நன்றிகளை சொன்னார். இல்லை கென் நான் தான் உனக்கு நன்றியை சொல்லவேண்டும் என்று மாற்றி மாற்றி நன்றிகளை சொல்லிக்கொண்டோம்.

 

ஆனால் சின்னதாய் சந்தோசம்

கென் இனி எப்போது இதை நினைத்தாலும்

கென்னின் மகிழ்ச்சிக்கு எனது பங்களிப்பும் கொஞ்சமாய் எங்கோ துருதிக்கொண்டிருக்கலாம் (மறந்தால்தானே நினைப்பதற்கு)

 

கென் உனக்கு என்னுடைய வாழ்த்துகள்.

சாருநிவேதிதா- வின் பதிவு : வேலி முட்டியும் வாரிசுகளும் http://www.charuonline.com/june08/pp8.html

நன்றி: சாருநிவேதிதா
 

பாண்டித்துரை

 





கென்

27 06 2008

 

 

நீ

 

 

கொடுக்கப்படாத சிலமுத்தங்களை

நினைத்துப் பார்க்கலாம்

உனக்கான ஒன்றை

தேடத்துவங்கலாம்

மீண்டும் மீண்டும்

வல்லூறுகளின் பிடியில்

சிக்கிக் கொள்ளலாம்

தனித்த இரவொன்றில்

உன் மரணத்தை பரிசளிக்க

மனம் பிறழ்ந்தவனாய்

கடவுளிடம் உரையடிக்கொண்டிருக்கலாம்

காத்திருத்தலின் முடிவில்

அடையாளம் காணலாம்

 

புன்னகை சிந்திடும்

பிடிவாத மழலையாய் என்றுமே உன்னை

 

கென் உனக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

 

 

பண்புடன் குழும நண்பர்கள் சார்பாக

 

பாண்டித்துரை