இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !!

இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !!

  

சிறுகதை – “பாண்டித்துரை”

  நேற்றுத்தான் முன்னாவை பார்த்தேன்ரொம்பவும் சந்தோசமாக இருந்தான். (ஊரில் முனுசாமி சிங்கப்பூர் வந்தபின்னாடி முன்னாவாகிட்டான்).

  

  சிவாஜி படத்தை மூனு தடவைப் பார்த்துவிட்டு  அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

  

 நீ என்னதான் சொல்லு சங்கரை அடிச்சுக்கவே முடியாதுப்பா! முதல் காட்சியிலேயே தலைவரு  என்னம்மா வர்றாரு தெரியுமாவாஜி வாஜி ..ன்னு வந்து படம் முடியற வரைக்கும் சும்மா கலக்கிட்டாருவாஜி வாஜி

  

 சாலையில் போயிட்டு இருக்கிற  எல்லாரும் எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அமைதியாக நடையைத் தொடர்ந்தோம்.

  

  எப்படா மாப்ஸ் நீ சிவாஜியைப் பார்க்கப் போறேன்னு என்னைக் கேட்டான்.

  

  பதினைஞ்சு வெள்ளியைக் கொடுத்துப் பார்க்க வசதியில்லை தேக்காவில் ஐந்துவெள்ளி குடுத்து டிவிடி யில தான் பார்க்கலாம் என்று இருக்கேன், என்றேன் நான்.

  நீ திருந்தவே மாட்டியாடா. ஓவர் டைம் பணத்தை எல்லாம் என்னடா மாப்ஸ் பண்ற  கொஞ்சமாவது செலவு பன்னுங்கடா என்றான்.

  

 ஒரு விசயம், நான் இன்னைக்கு மறுபடியும் பிளாசா போறேன் சிவாஜி படம் பார்க்க. கேத்ரீனா, வந்தனா, சுப்புலெட்சுமி எல்லாம் வர்றாங்க நீயும் வர்றியா?  என்றான்.

  

  இவங்களை எல்லாம் மாதத்தில்  இரண்டு, மூனு நாள் முன்னா கூட பார்க்கலாம். எனக்கும் அவங்க நண்பர்கள் தான். ஆனால் அவங்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையே நான் திரும்பிப் பார்த்துக்க வேண்டியிருக்கும்வேற ஒன்னும் இல்லை பர்சு இருக்கான்னு தான்.

  

   சீனத் தோழி கேத்ரீனா என்னைசிட்டிஎன்றுதான் அழைப்பாள் .ஏன்னா  சிதம்பரம் என்கிற பேரு அவளுக்கு கூப்பிட வரலையாம். கேத்ரீனாசிட்டி, எங்களையெல்லாம் கலட்டிவிட்டுட்டு, நீ எப்பவும் தனியா போறியே லவ் ஏதாவது இருக்கிறதா என்றாள்! “

  

  கேத்ரீனாவுக்கு நம்ம ஊருக் கதையெல்லாம் தெரியும்.  எங்க கூடசேர்ந்து தமிழ்ப்படம் பார்த்து நல்லாவே புரிஞ்சுக்கிறா! நானும் நிறைய சொல்வேன்.

  

  முன்னா தோழிகளில் கேத்ரீனா மட்டும் தான்  என்கிட்ட நல்லா பேசுவா.

  அவளே போன் பண்ணி பல சமயம் மணிக்கணக்கா பேசுவாஅப்பவெல்லாம் முன்னா கேப்பான், “என்ன மாப்ஸ் லவ்வா? அப்புறம் எங்க அத்தைக்கு யாரு பதில் சொல்றதுன்னு”  கிண்டல் பண்ணுவான்

என்னத்தச் சொல்ல, ஒரு பொண்ணோட மணிக்கணக்கா பேசுனா காதல் தான்னு நம்ம ஊரில் எழுதப்படாத சொல்லா இன்னைக்கும் நடைமுறையில் இருக்கில்ல.

  நாங்க போனில் பேசிக்கிட்டு இருக்கும் போது, முன்னா சத்தமாக கத்துவான் கேத்ரீனா கேட்பா, யாரு அது முன்னா தானே ? நாட்டி பாய்னு சிரிச்சுகிட்டே சொல்லுவா. இப்படியாய் நகர்ந்தன நாட்கள்.

  

  ஒருநாள் வந்தனா,தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதற்கு செந்ததோசா தீவில் பார்ட்டி கொடுத்தாள்.

  

  சாரு, நிவேதன், முன்னா, கேத்ரீனா, சுகாங், மக்காய், சுப்புனு எண்ணிப்பார்த்தா பதினைஞ்சு பேர்எப்படியும் அன்றைக்கு ஆயிரம் வெள்ளி செலவாகியிருக்கும்முன்னா 250 வெள்ளி குடுத்திருப்பான்.  

 நான் பரிசுப்பொருளாய்பார்த்திபனின் கிறுக்கல்கள்புத்தகம் குடுத்தேன்என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு  “ஏன் அப்படியே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு வந்து குடுக்குறது தானே? கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா? என்று சிரித்தாள்.

  

  இங்கேயும் அந்த சிவாஜி தாக்கம், மிதமான இருட்டில் பியர் கோப்பைகளின்  சப்தங்களின் இடையே மெல்லியதாய் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.

  மக்காய் கூட ச்சீ ச்சீனு முனுமுனுத்து கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.

  

  எங்க ஊருல ஜாக்கிசான் படத்தை பார்த்துவிட்டு ஊனு கத்துனதை நினைச்சுகிட்டேன், முன்னா சிரிச்சான்.

  

  வந்தனா முகத்தில் கொஞ்சமாய் சோகம் இருந்ததை காண முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அளவிற்கு சுதந்திரம் இருக்குமா என்பது தெரியலைதான். என்னதான் சிங்கப்பூர் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்திற்கு பின் பெண்களின் மகிழ்வுகளில் பல பறிபோய்விடத்தான் செய்கிறது.

  

  நான் ஒரு டைகர் பியர் மட்டும் எடுத்துக்கிட்டேன். கேத்ரீனா ஒய்ன் எடுத்துக்கிட்டாஅவள் ஒய்ன் சாப்பிடுறதை பார்க்கும் போது, பெண்களிடம் தான் தண்ணியடிக்க கத்துக்கணும்னு தோன்றியது எனக்கு. அதை கையில் ஏந்தி பருகியதில்  அவ்வளவு நளினம்  இருந்தது.

  

  வந்தனா சாருவைத்தான் கல்யாணம் பண்ணுவா என்று நினைத்திருந்தேன் என்றாள். கேத்ரீனா.

  

  ஏய், முதல்ல நீ தமிழ்படம் அதிகமாகப் பார்ப்பதை நிறுத்து என்றேன்.

  

  அப்படிப் பண்ணியிருந்தா வந்தனா சாருவைக் கல்யாணம் பண்ணியிருப்பாளா? என்றாள். ஒய்ன்  நிறைந்திருந்த கண்களுடன் கேத்ரினா.

  

  வ்வா வ்வானுயாரோ வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.  வழக்கம்போல சுகாங் தான். எப்பவுமே அவன் இப்படித்தான். அதிகமாயிடுச்சுனு தெரியும் ஆனாலும் அடம் பிடிச்சுக் குடிப்பான் கடைசியில வாந்தியெடுப்பான். நானும் ஒவ்வொரு முறையும் பசங்களை திட்டுவேன் நீங்கதான்டா அவன கெடுக்குறிங்கனு.

முன்னா சொன்னான்மாப்ஸ் இப்ப ஏன் டென்சன் ஆகுற. தினமுமா அவன் குடிக்கிறான் இந்த மாதிரி நம்ம கூட சேரும்போது மட்டும்தான். அவனுக்கு இதுதான்டா புடிச்சிருக்குஎன்றபோதும் என் மனம் ஒப்பவில்லை..

பேரருக்கு வேலை வைக்காமல் எல்லாம் முன்னாவே சுத்தம் செய்தான்.

  அவன் சட்டையை முதலில் மாற்று என்று சுப்பு அவளோட கோட்டை கழட்டிக்குடுத்தா. முகத்தில் கொஞ்சமும் சுருக்கம் இல்லை.

  

  நான் போற வழிதான் கௌ-காங்கில் நான் விட்டுவிடுகிறேன் என்று கேத்ரீனா சொன்னாள்.

  

  முன்னா கேட்கவில்லை.பிறகு நானும் கூட போனேன். காரில் சென்றபோது முன்னா கேட்டான்என்ன மாப்ஸ் தமிழ் முரசுவிற்கு போனவாரம் கவிதை அனுப்பினியே வந்திருச்சா என்றான்”  வழக்கம்போல் உதட்டை பிதுக்கினேன்.

  

  முயற்சி பண்ணு இல்லைனா நாமளே அச்சடிச்சு தேக்காவில் குடுத்திரலாம் என்று கூறிச் சிரித்தபோது,ஏதோ ஒன்று மனதை அழுத்திச் சென்றதாய் உணர்ந்தேன்.                                                                                                          

      சுகாங் இன்னமும் ச்சீ என்று குழந்தைபோல கேத்ரீனாவின் மடியில் முனகிக்கொண்டிருந்தான். அவளின் கை அவனின் முடியை கோதிக்கொண்டிருந்தது.

  

  உன்னோட பிளாக் எப்டியிருக்கு என்று கேட்டாள். கேத்ரீனா .

  

  ம். நிறைய பேர் வருகிறார்கள் சிலர் கருத்தை சொல்கின்றனர் என்றேன்.                 
       
அவளின் பல்வேறு வேலைகளுக்கிடையிலும் வலைதளத்தை அறிமுகப்படுத்தி  வடிவமைப்பில் எனக்கு உதவுகிறாள் என்பதை எண்ணியபோது பெருமையாய் இருந்தது.

  

  சுக்காங் வீடு வந்தடைந்தோம். ஆனால் ,காரை விட்டு இரண்டு பேரால் அவனை தூக்கமுடியவில்லைஒரு பியருக்கே நான் மிதக்க ஆரம்பித்திருந்தேன். முன்னா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தான்நாங்க படும் கஷ்டத்தை பார்த்துவிட்டு டிரைவர், “விடுங்க தம்பி நான் தூக்கிவந்து விடுறேன்”, என்றார்.        


     
ஐம்பது வயது இருக்க வேண்டும் அனாசையாக தூக்கிவந்து லிப்டில் கொண்டுவந்து விட்டார்.நன்றி கூறினோம் .

           முதலில் முன்னாவிற்கு பறக்கும் முத்தம், பின் என்னிடம்  கண்களால் பேசிவிட்டு , அதே காரில் விடைபெற்றாள் கேத்ரீனா.

  

  சுக்காய் வீட்டில் அவரோட தாத்தா மட்டுமிருந்தார்அம்மா வேலைக்குப் போய்விட்டார். அப்பா இப்ப இல்லை.ஏன்னா வேற ஒரு வாழ்க்கைத்துணையுடன் வாழ்கிறார்.                                                                
      
எனக்கு சற்று அங்கே இருக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என்னை புரிந்துகொண்டிருக்க வேண்டும், முன்னா விசில் அடித்துகொண்டே விஜய் டிவியில் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.   

                                                   
     
தாத்தா சுக்காங்கை நன்றாகவே புரிந்துவைத்துள்ளார்.  தாத்தா சுக்காயின் சட்டை பேன்ட் எல்லாம் கழற்றிவிட்டு வெந்நீர் வைத்து குளிக்கவைத்து பின் கொஞ்சமாக சாப்பிடவைத்தார் .அவனுக்கு இது எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என என்ணியது என் மனம்.

 தாத்தாவைக் கவனித்தபோது ,அவர் கொஞ்சமும் வருத்தபட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் புன்னகையே இருந்தது. இதைப்பார்க்கும் போது சுக்கா இதுக்காகவே தினமும் குடிக்கலாம் என்று நினைத்தேன்.

  

  சரி தாத்தா, நாங்க கிளம்புறோம் ஆன்டியை கேட்டதா சொல்லுங்க, என்றான். முன்னா. அருகே ஆமோக்கியாவில் தான் எங்கள் வீடு என்பதால் நானும் முன்னாவும் நடக்க ஆரம்பித்தோம்.

  

  ஓளிக்கற்றையை விரட்டிப் பிடிப்பதாய் பேருந்து எங்களை கடந்து சென்றது. என் மனதும் கூடத்தான். எப்பப்பார்த்தாலும் குடிச்சிகிட்டு இருக்கிற மாமா, எப்பப்பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணா, முக்குகடை சொக்கன், எங்க ஊரு ராவுத்தர், அம்மன் கோவில் பூசாரி, வழுக்கத் தலையை மறைக்க பின்னாடி முடியை முன்னாடி கொண்டுவந்து சீவும் தலைமையாசிரியர், அப்புறம் பூங்கொடி டீச்சர், எதிர்த் வீட்டு பாட்டிம்மா, என்கிட்ட மட்டும் டிக்கட் வாங்காத கண்டக்டர், எப்பத்தா கிழவி, குண்டு பாப்பா, மிட்டாய் மாது, நல்லா சாப்புடு சிதம்பரம்னு முகத்தாலே அதட்டும் சியாமளா, சின்ன வயசு சீனு, அம்மா, புல்புல்னு

  

  நினைவுகளுடனேயே படுக்கையில் வீழ்ந்த போது.

  

  என்ன மாப்ஸ் ரொம்ப களைப்பா இருக்கா..? காலையில எந்திரிக்க அலாரம் வைக்கட்டுமா..?

  

 ஏதோ குரல் ஒன்று தொலைவில் எங்கேயோ இருந்து கசிந்துவருவதாகப்பட்டது.

–  – – பாண்டித்துரை 

   

திரு பிரபஞ்சனின் வருகை

ஜீன் 30-07

சிங்கப்பூர் வருகை தரும் எழுத்தாளர் திரு பிரபஞ்சன் அவர்களுடனான சந்திப்பு  ஜீலை 7 மற்றும் 8 ம் தேதியில் நடைபெறுகிறது இந்நிகழ்வு பற்றிய முழுமையான விபரம் திண்ணை இணையத்தில் வெளிவந்துள்ளது.

அதன் இணைப்பு உங்களுக்கா.

பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பு

****************

உங்களில் ஒருவன்

ஜீன் 10-07

சிறுகதை எழுதவேண்டும் என்று நான் கவிதை என்று எண்ணிக்கொண்டு எழுத ஆரம்பித்தநாட்களில் இருந்தே எண்ணிக்கொண்டிருந்தேன். சமீப காலத்தில்தான் ஏதோயொரு வடிவம்கிடைப்பதாக உணர்ந்து 3 சிறுகதைகளை எழுதினேன். பின் படித்துபார்த்து திருப்தியின்மையால் தூக்கிப் போட்டுவிட்டேன். சில வாரங்களுக்கு முன்தான் ஏதோயொரு உந்துதலில் ஒரு கதையை முழுமையாக முடித்தேன். பின் நண்பர் பிரபுவிற்கு அனுப்பி அவரின் கருத்தினை கேட்டேன் படித்துபார்த்து விட்டு சில ஆலோசனைகளை என்னுடன் பகிரவே மீண்டும் சில திருந்தங்களுக்கு பின் இதோ இன்று உங்கள் முன் அந்த ஒருவன்.

உங்களில் ஒருவன்

நான் பூபதியுடன் நடந்து கல்லூரி வளாகத்தை நெருங்கிய தருணத்தில் பூபதி அழ ஆரம்பித்து விட்டான்எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அழுகை அதிகரித்துக்கொண்டே இருந்ததுஅவன் அழுது இதற்குமுன் நான் பார்த்ததே இல்லை.

அவனை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு மாற்றி விபரத்தை கேட்டபோது அவன் உயர்நிலை பள்ளி நாட்களில் இருந்து உயிருக்குயிராய் நேசித்த ஆர்த்தியிடம் அவனது கவிதை புத்தகத்தை கொடுத்திருக்கிறான்அவள் அதை கிழித்தெறிந்திருக்கிறாள்அதனை எதிர்பார்க்காத அவன் மனமுடைந்திருக்கிறான்.

பூபதியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்அவனது விருப்பங்கள் வெறுப்பு என்னவென்பதும்அவனது கவிதையாற்றலும்ஆமாம், அவனது எல்லா கவிதையிலிலும் ஆர்த்தி பற்றிய வார்த்தைகள் இல்லாமல் இருக்காது.

ஆர்த்தி அவனோட முதல் காதலி. அப்படி என்று தான் நினைக்கிறேன்ஆனால் முதன் முதலில் பூபதியை ஆர்த்தி வீட்டுக்கு அழைத்து சென்றது நான் தான்அதான் அவன் அந்த வீட்டை மிதிச்ச கடைசி நாளாகவும் இருக்கனும்.

அன்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடச் சென்றபோது வாடா ஆர்த்திவீடு இங்கதான் இருக்கு அந்த  பக்கம் போய் வரலாம் என்றான்.

நானும் மறுப்பேதும் சொல்லாமல் வண்டியை செலுத்தினேன். ஆனால்  அந்த தெருவில் கடைசியாய் உள்ளதுதான் ஆர்த்தி வீடு. போய் திரும்பும் போது அந்த வீட்டில் யாராவது பார்க்க நேரும் என்று திரும்ப நினைத்தேன்.

பூபதியோ போகவேண்டும் என்று அடம்பிடித்தான்சரி என்று அவள் வீட்டுக்கு வண்டியை செலுத்தினேன். என் சிறுவயது குடும்ப நண்பர்கள் தான் ஆர்த்தியின் பெற்றோர்கள். என் அப்பாவோட வேலை மாற்றம் காரணமாக வேறு ஊர்களில் இருந்துவிட்டு அப்பொழுதான் அங்கு வந்திருந்தோம்.

அந்நேரத்தில் ஆர்த்திதான் வீட்ல இருந்தா. அவளுக்கு பூபதியை தெரியாதது மாதிரி நான் தான் அறிமுகபடுத்தினேன்.  அவளும் அன்போடு வரவேற்றாள்அந்த நேரத்தில் ஆர்த்தி என்னை பற்றி என்ன நினைச்சிருப்பாள்?  !

என்று எண்ணிய மனதில் ஏதோ உறுத்தல் தொடங்கிய நேரத்தில் பூபதியின் அழுகை சத்தம் என்னை நிகழ்காலத்தை உணர்த்தியது.

ஒரு பெண்ணுக்காக இந்த அளவு அழுது நான் யாரையும் பார்த்ததில்லை.

பூபதி அந்தபெண்ணை விடுடா அவளுக்கு குடுத்துவெச்சதது அவ்வளவுதான்னு நினைச்சுக்க  என ஆறுதல்கள் சொல்லி தேற்றி அனுப்பினாலும் அந்நிகழ்வு என் மனதில் இழப்பு என்பதின் வலி எப்படிபட்டது என்பதை தடம்பதித்துசென்றது.

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்வினில் கால் பதித்து கவலை மறந்திருந்த காலம் அது. கனவுகளை மட்டுமல்ல காதலையும்சுமந்தே கல்லூரி வாழ்க்கை அமைந்துவடுகிறது பலருக்கு.

  உண்மைதான் எனக்கும் ஒருத்தியை பிடித்திருந்தது. இரைட்டை சகோதரிகள்  இருவரும் ஒரே வகுப்புதான். மூத்தவளை விரும்பினேன் . எனக்கு குழப்பமே  இருந்ததில்லை இருவரின் தோற்றத்தில் யார் அக்கா யார் தங்கை என்பதில்.

கல்லூரியிலும் பரவியது நான் காதலிப்பது. அந்த பெண்ணுக்கும் தெரியும் ஆனால் நான் நேரில் வெளிப்படுத்தியது கிடையாது. பார்ப்பது ரசிப்பதிலேயே பறிபோனது ஒன்றரை வருடங்கள்.

பூபதி கவிதை பேச்சுபோட்டி என கல்லூரியின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தான். பெண்களிடமும் சகசமாக பேசுவான்அவனுக்கு சில பெண்கள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.

அப்படித்தான் நான் விரும்பும் பெண்ணிடமும் பேச ஆரம்பிச்சான். யாரு வெளிப்படுதியிருக்க கூடும் எனத் தெரியவில்லைஒரு கட்டத்தில் இருவரும் விரும்பும் செய்தி கிடைத்தது.

அந்நாட்களில் மனசுக்கு ஏதாவதென்றால் பூபதி அக்காவைத்தான் போய்ப் பார்ப்பேன். அன்றும் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றை சிரித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுள் ஏதோ அழுத்தி என்னமோ நடக்கிறது.  கண்ணில் இருந்து பொல பொலனு தண்ணி கொட்டுது. என்னால அதக்கட்டுப்படுத்த முடியல. சிரிச்சிகிட்டே இருக்கேன் ஆனா கண்ணில் பொல பொலனு தண்ணி வருது அக்கா பதறிபோயிட்டாங்க

என்னடா தம்பி என்ன ஆச்சு  எங்கிட்ட சொல்லுறதுக்கென்னடா என்று  கேட்டாலும் ஏதோ சொல்லி மறைக்க முயன்றேன்.

ஆனால் அக்கா புரிங்சுகிட்டாங்க. மறுபடியும் மீண்டும் சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டேன்.

பூபதியும் நானும் ஒரே இடத்தில் டியூசன் போனோம். வாத்தியார்  நண்பர் மாதிரி. அவரிடம் அவன் அவளின் மேற்படிப்பு எதிர்காலம் பற்றியெல்லாம் இலைமறைகாயாய்  பேசுவான்வாத்தியாரும் புரிந்து கொண்டு குசியாகிவிடுவார். ஆர்வமாக அவனுக்கு பதில்பேசிக் கொண்டு இருப்பார்.

அந்நேரங்களில் எனக்கு சங்கடமாயிருக்கும் எந்திரிச்சு ஓடிடலாம் என நினைப்பேன் முடிவதில்லை.

இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் எனக்கும் பூபதிக்கும் இடையில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. என் நணபர்களும் புரிந்து கொண்டு கொஞ்ச நாள் அவனுடன் பேசுவதில்லை.

பூபதியும் அவளும் பஸ்சில் பேசிகிட்டே வருவாங்கநான் பின்னாடி இருந்து கேட்டுகிட்டே வருவேன். எனக்கு கேக்கணும் என்றே பேசுவாங்கலானு தெரியாது

 தமிழ், ஆங்கிலம், தெலுங்கு எல்லாம் எனக்கு தெரியும்  அதனால எனக்கு வரும் மாப்பிள்ளை  இண்டர்நேசனல் லெவல்ல வரணும் என்பாள்.

அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வரும்.

அப்ப நான் நினைப்பேன் ஆர்த்திக்காக அன்னைக்கு அப்படி அழுதானே இப்ப இன்று என்னை அழுக விடுறானேனு. ஏன்னா இது என் முதல் காதல். எது அப்படி அவனை மறக்கடிச்சுதுனு தெரியலை.மேலும் மேலும் என் நெஞ்சை புண்ணாக்கிக் கொள்ள விரும்பாத நான் கொஞ்சம் கொஞ்சமா அவள் பார்வையில் இருந்து விருப்பம்மின்றி விலக ஆரம்பித்தேன்

 கல்லூரி வாழ்வு கனவு போல முடிந்ததுபணி நிமித்தம் பெங்களுர் சென்று விட்டேன். பூபதியடம் மட்டும் தொடர்பு இருந்தது.  பூபதியும் அந்த பெண்ணும் பிரிந்துவிட்டதாகவும் அவன் இப்ப் வேறு பெண்ணை விரும்புவதாகவும் எனக்கு தகவல் வந்தது.

 என் அக்கா  திருமணத்தின் போதுதான் நான் விரும்பிய பெண்ணை கடைசியாக பார்த்தேன். அக்காவுடன் பணிபுரிவதால் வந்திருந்தனர். அக்கா சொல்லித்தான் தெரியும் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது.

எட்டு மாதிற்கு முன் சென்னை வர வேண்டியிருந்தது அப்ப பூபதியை சந்தித்தேன். தற்போது ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணையே திருமணம் செய்யவிருப்பதாகவும் சொன்னான்நான் என்னை மறந்து  சிரித்தேன்இல்லைடா இது சரியான நேரத்துக்கு வந்த காதல் என்னையும் என் வேலையையும் நல்லா புரிஞ்கிட்டிருக்கா என்றான்.

மறுநாள் நானும் பூபதியும் சந்திப்பதாக இருந்தது.

அதற்குள் அவனிடமிருந்து போன் வந்தது. பரோடாவில் இருந்து நண்பர் ஒருவர் வருகிறார் அவரை பார்க்க போய்விட்டு படத்துக்கு போகிறேன் என்றான்.

 மறு நாள் சைதாப்பேட்டை சென்றிருந்தேன். இயில்நிலையத்தில் ஏதேச்சையாக பூபதியை பார்க்க நேர்ந்தது. அவனும் ஒரு பெண்ணும் நின்றுகொண்டு சிரிச்சி பேசிகிட்டிருந்தாங்க ஒருவேளை அவன் விரும்பிய பெண்ணாகயிருக்கலாம்ஒரு இரண்டு நிமிடம் நின்னு பார்த்தேன் அப்புறம் அவன் கைத்தொலைபேசிச்கு போன்பண்ணி துண்டிக்கலாம்னு பார்த்தேன் ஆனா பண்ணலை அவனை கடந்து போக ஆரம்பிசேன் . அவங்க இரண்டு பேருக்கும் அவங்களை சுற்றி என்ன நடக்குதுனு தெரியாம இருந்தாங்க.

ஒரு மாசத்துக்கு முன்னாடி போன் செய்திருந்தேன் அம்மா ஒததுக்க மாட்டாங்க பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு போய் அவங்க காலில் விழுந்திரவேண்டியதுதான் என்றான்

பூபதி  காதல் தொடர்ந்த வண்ணமிருக்கு இன்னமும்  திருமணம் மட்டும் ஆகவில்லை .

முதல்காதல் முள்ளுமாதிரி குத்திக்கிட்டே இருக்கும்பாங்கல!

சரி இந்த நான் யார்?;

இந்த நான் உங்களில் ஒருவராககவும் இருக்கலாம் !

காதலுடன்: பாண்டித்துரை