அட இது உனக்கு தெரியாதா!……..

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா……..

நீ எப்ப பிறந்தா எனக்கு என்ன சீனிவாசா…..

என்ன பாட்டுனு பார்க்கிறீர்களா. கடந்த வாரத்தில் எனக்கு வந்த 10க்கும் மேற்பட்ட குறுந்தகவல். தகவல் ஒன்றுதான் என்னனா திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு இன்று (இன்னைக்கு இல்லங்க) பிறந்தநாள் இந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் நீங்கள் உங்களின் நலம் விரும்பிகளுக்கு அனுப்பினால் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று……….. . என்ன கொடுமை சார் இது

நேற்று இரவு நண்பர் ஒருவர் நல் இரவு எனக்கு போன் செய்திருந்தார். திடீரென்று நீதி உங்கள் அப்பா பிறந்த நாள் என்னைக்கு என்று தெரியுமா என்று கேட்டார். ன்னப்பா இப்படினு மேலே என்அறையில் டைரியில் இருக்கு என்றேன் ( என் போன் நம்பரை ஞாபகத்தில் வைப்பது எனக்கு சிரமம். ஒரு சிலர் பக்கம் பக்கமா ஏத்தி வைச்சிருப்பாங்க அது அவங்களோட தனி திறமை).  அப்படினா அம்மானு அடுத்த வீசினாரு. அம்மாவின் பிறந்தநாள் சரியா தெரியாதுங்க அம்மா பிறந்த மாதத்தில் ஒரு நாளை நாங்களே தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றேன். அம்மா பிறந்த வருசம் கூட முன்ன பின்ன இருக்கலாம் என்றேன். அட என்னப்பா இந்த நேரத்தில் என் அம்மா அப்பாவை கேட்கிறிங்கவீட்ல ஏதாவது அட நீங்க இப்ப நல்லாத்தானே இருக்கிறிங்க என்றேன்.

இல்ல  நேற்று எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பிறந்த நாளு என்று . உங்களுக்குமா என்று சொல்லி முடிப்பதற்குள், நான் உங்க நண்பர்தானே என்றார். எனக்கு செய்தியை அனுப்பிய நண்பருக்கு நான் தொடர்பு கொண்டு உங்க அம்மா அப்பா பிறந்தநாள் தெரியுமா என்று கேட்டேன் . தெரியாது என்று சொல்லிவிட்டார் . சரி பெருமாளு பிறந்தநாளு எப்படிடா உனக்கு  தெரியும் என்றேன். பசங்க அனுப்புனாங்க அண்ணானு சொன்னான் ,  நான் அதுக்கு உன்ன பெத்தது உங்க அப்பன் ஆத்தா அவங்கதான்டா உனக்கு முதல் தெய்வம் உண்மையான தெய்வமும் கூட முதலில் அவங்க பிறந்தநாளை தெரிஞ்சுக்க அப்படினு சற்று கடுமையா பேசிட்டேன்.  பாவம் அந்த பையன் இந்த அண்ணனுக்கு அனுப்புனதுக்கு இப்படி வாங்கிகட்டிக்க வேண்டியிருக்கு என்று நினைத்திருக்கலாம் என்று அந்த தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு என்னிடம் வருந்தி பேசினார்.

சரி நண்பா உனக்கு இதே குறுந்தகவல் எத்தனை வந்தது என்றேன். ஒரு 5 அல்லது 6 இருக்கும்  என்றார். எத்தனை பேர்கிட்ட இதுமாதிரி கேள்விகேட்டிங்க என்றேன். அந்த தம்பிக்கிட்ட மட்டும் இப்ப உங்ககிட்ட ஆனா நீங்க குறுந்தகவல் அனுப்பவில்லை என்றார். நண்பா உன்னை பற்றி புரிந்துகொள்ளகூடியவர்களிடம் தான் நீ கடுமையாகவும் இருக்கமுடியும் அன்பாகவும் இருக்கமுடியும் என்றேன். அதனால அந்த தம்பி வருந்தமாட்டான் என்றேன். சரி  உங்க குலசாமி பேரு என்ன அப்படினு கேட்டாரு அட இது என்னடா என்று காளி என்றேன். இரவு மணி 1-க்கு ம் மேல் இந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு மதுரைவீரன் என்றார். சரி உங்க காளி எப்பங்க பிறந்தாங்கனு அடுத்து ஒரு துண்டை இல்ல குண்ட போட்டாரு. (ம் இது சரிபாடாதுனு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு ) டேய் நண்பா எனக்கு இன்னும் சரியா ஞாபகத்தில் இருக்கிறது என் பிறந்தநாளுதான் ஆனா அதுகூட இப்ப விடிஞ்சா ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை என்றேன்.

அப்புறம் நான் சொன்னது ங்க காளி சூளி எல்லாம் நம்ம பாட்டன் பூட்டன்க. அப்பா, அம்மா பிறந்தநாளே  தெரியாதப்ப இது எப்படிங்க தெரியும் என்றேன். இல்ல  இவங்களோட நம்பிக்கையை நான் குறைசொல்லவில்லை இந்த முட்டாள்தனமான நம்பிக்கையெல்லாம் என்னபண்ணுறது  என்று என் தலையில் ஏத்திவிட்டு நண்பர் தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். அப்புறம் எனக்கு எப்படிங்க தூக்கம் வரும். துக்கம் தான் வந்திச்சு!

எங்க ஊருல துண்டுச்சீட்டில் எழுதி அல்லது அச்சடிச்சு இதுபோன்ற தகவல்தாங்கிய செய்தி வரும். இப்ப டெக்னாலஜி வளர்ந்துவிட்டதுல அதான் குறுந்தகவல் என்று நினைத்து கொண்டேன். இதுவரைக்கும் எனக்கு மின்னஞ்சல் வரலைங்கஇந்த கட்டுரையை படித்துவிட்டு நலம் விரும்பிகள் யாரும் அனுப்பகூடும்க.

சிங்கப்பூரில் பணிச்சூழல் காரணமாக நண்பர்களை மாதம் ஒருமுறை சந்திப்பதே ஆபூர்வம். சந்திப்பது மட்டுமல்ல தொ(ல்)லைதொடர்பு குறுந்தகவல் என்று எல்லாமேங்க. நாமா போன் பண்ணினா மச்சான் உனக்கு போன்பண்ணனும் என்று  நினைச்சேன் நீயே பண்ணிட்ட அப்படிப்பான். சரி எப்ப நினைச்சா என்றால் தினமும் என்பான் அப்படியே 3-மாசம் ஓடியிருக்கும். ஆனா இதுபோன்ற குறுதகவல் மட்டும் சுட சுட அனுப்பிறாங்க நம்ம பயபுள்ளங்க.

இதுல என் கொடுமை சார்னா இந்த குறுந்தகவலை அனுப்புவதில் இரண்டு ரகம் இருக்காங்க 1. நல்ல படித்தவர்கள், நல்ல வேலையில்  அதிலும் அற்புதமா சிந்திக்ககூடியவர்கள் ( என்று நான் நினைத்திருந்தவர்கள்) 2. கஷ்டப்பட்டு உடல் உழைப்பால் தினமும் 12மணிநேரம் முதல் 18 மணிநேரம் உழைக்க கூடியவர்கள். (பேசாமல் ஊரிலே இப்படி தினம் 10 குறுந்தகவல் அனுப்பி கஷ்டப்படாமல் நல்லா இருந்திருக்கலாம்  – {அட நீங்க வேறங்க இருக்கிற சூப்பர் ஸ்டாருக்கும் சுப்ரிம் ஸ்டாருமே கண்டுக்காதபொழுது இதுல பெருமாளு எங்கங்க  ……….. }அப்படினு சில நண்பர்கள் நினைக்கலாம்)

இதில் 3- வதா ஒரு ரகம் இருக்காங்க.  அதான்க ரொம்ப கொடுமையானது. ஒரு குறுந்தகவல் வந்தா போதும் படிப்பதற்குள் கண்ணை மூடிக்கிட்டு 10- பேருக்கு அனுப்பிறது இன்னாருகிட்ட இருந்து குறுந்தகவல் வந்தா போதும் என்னடா மச்சான் எப்படி இருக்கிறாய் வேலை எப்படி என்றல்லாம வராது  இப்படிப்பட்ட ஏதாவதா ஒன்னைதான் அனுப்புவான்னு பேரை பார்ததுமே அப்படியே 10-பேருக்கு அனுப்பிறது (எனக்கு ஒரு குறுந்தகவல் போன மாசம் வந்தது டேய் எனக்கு பெண்குழந்தை பொறந்திருக்குனுஎனக்கு ஷாக் எல்லாம் கிடையாதுங்க என் நண்பனுக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை அது ஒரு தனிகதை அப்புறம் பார்ப்போம்) .

நான் உங்களுடைய நம்பிக்கைக்கோ, மூடநம்பிக்கைகளுக்கோ எதிரானவன் அல்ல நல்ல பேஷா திருமாலு, பெருமாளுனு கொண்டாடுங்க. ஆனால் அதை இப்படி கொண்டாடலாமே உங்கள் ஊரில் உள்ள அரசு நடத்தக்கூடிய அல்லது சேவைமனப்பான்மையுடன் நடத்தகூடிய பல பள்ளிகள் அடிப்படை தேவைகூட இல்லாமல் இருக்குங்க. இப்படி 10 பேருக்கு  குறுந்தகவல் அனுப்புறதுக்கு பதிலா, 10வருசத்திற்கு ஒருமுறை 10 பென்ஞ் வாங்கி போடலாம்க (அப்ப நீதான்ட அங்க கடவுள்) அப்படி ஒரு பள்ளில படிச்ச 10- பேரு செய்தால் போதும்க பள்ளி என்று இல்லை, எங்கு எங்கு அடிப்படை கட்டமைப்புகள் தேவைப்படுதோ அங்க அங்க இப்படி 10 வருசத்திற்கு ஒரு முறை  நீங்க செய்தால் கோபாலு, பெருமாளு என்று நம்மின் எதிர்கால தலைமுறைகள் கையேந்த வேண்டிய கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்காதுங்க.

கனவுகள் கண்டது போதும் இனி நாம் கண்ட கனவுகள் நிறைவேற்றப் புறப்படுவோம்.

தோழமையுடன்
பாண்டித்துரை.

கணையாழி – 2007

கணையாழி விழா 2007 (18.11.2007)

 கணையாழி விழா மறக்கமுடியாத ஒரு விழாவாக என்னுள் பதிந்துவிட்டடது. நான் கடந்த ஆணடுதான் சிங்கப்பூர் வந்தது வந்த உடன் நான் சந்தித்த ஒரு பெரிய இலக்கிய விழா மேலும் கவிதை எழுதிய குறுகிய காலத்திற்குள் நான் எழுத்தாளர் பாலா அவர்களின் முன்னிலையில் அன்று நடந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்ததுடன் அன்றைய நிகழ்வினை வார்ப்பு இணையத்தில் பதிவு செய்தது. என்னுடைய முதல் கட்டுரை முயற்சியும் கணையாழி 2006 தான்.  அந்தநாள் நினைவுகளை மீள்பார்வை செய்தபடி கணையாழி 2007 ல் கலந்து கொண்டேன்  

a.jpgb.jpgc.jpgd.jpg

நிகழ்வின் மத்தியில் புதுமைத்தேனி அன்பழகன் அவர்கள் சொன்ன வார்த்தைதனிஒரு மனிதனால்பிச்சினிக்காடு இளங்கோவால் – 7 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கவிமாலை அமைப்பு விருட்சமாக எழுந்து காடாகியுள்ளது. இன்று காடுகள் அழிவுற்று வரும் வேளையில் வளர்கும் பணியினை தனது பயணத்தின் ஒரு பகுதியாய் சுமந்து செல்லும் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் 5-ம் ஆண்டு கணையாழி -2007 விழாவினை வழிநடத்திச்செல்ல திருமதி மீரா மன்சூர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா இனிதே துவங்கியது. 

  மன்மதன் வந்தாடி எனும் பாடலுக்கு குமாரி ஹெமினின் பரதநாட்டியம் பதட்டமுடனே அரங்கேறியது. பாடலின் முற்பகுதியல் ஒலி நாட இயங்க தடுமாறியதே! குமாரி ஹெமினி பாடல் ஒலிக்க அபிநயம் பிடித்திருந்த காட்சியும் அவரது நாட்டியத்தை கண்டு இயங்கிய ஒலிநாடாவும் இடையில் சில நிமிடம் தன் மூச்சினை நிறுத்திவிட இதை எல்லாவற்றையும் கவனித்தவண்ணம் ஒலி பொறுப்பினை மேற்பார்வை செய்த நண்பர் கவி ரமேஷ் மருண்ட முகமாய் பதைபதைத்ததும் இன்னும் என்னுள்ளே.

  பின் பண்முக ஆளுமையை நோக்கி பயணப்படும் நண்பரும் கவிஞருமான கோவிந்தராஜீ பலகுரல்களில் பவனிவந்து கணையாழி – 2007 நிகழ்வினை வாழ்த்தினார். இவரது பேச்சின் உச்சகட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மு..ஸ்டாலினாக பேசியது.  

எங்கள் கவிமாலை என்ற தலைப்பில் பா.திருமுருகன் தான் கண்ட கவிமாலையை கவிதையாக வாசித்தார் . அதிலிருந்து சில வரிகள்   

கவிமாலை திருவிழா

ிமிறாய் நடக்க வேண்டும் 

இங்கு குயில்களை காட்டிலும்

காகங்களே கவனிக்கப்படுகின்றன

 ஏதோ ஓர் தூரத்தில்

பாதங்கள் மட்டும்

பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன  

கணையாழி விழாவிற்கே உரித்தான அம்சம் கவியரங்கம். முதல் உதவி செய்வோம் எனும் பொது தலைப்பின் கீழ் கவிஞர் .வீ.விசயபாரதி அவர்களின் தலைமையின் கீழ் நடந்தேறியது. அதிலிருந்து சில வரிகள் 

 கண்ணீர் துடைப்போம் எனும் தலைப்பில்:- கவிஞர் கோ.கண்ணன். 

இயலாமை

தோல்வி

இவைகளில் ஏதோ ஒன்று

 இயற்கையின் படைப்பில் எதுவுமே

இங்கு சீராக இல்லை

அதானால்தான் மனிதனும்

மாறுபட்ட கோணத்தில் வாழ்ந்து...” 

 காயங்களுக்கு மருந்து பூசுவோம் எனும் தலைப்பில் கவிஞர் சுகுணா பாஸ்கர்   

உற்றுக் கவனி

உன்னை சூழந்திருப்பது மங்கிய வெளிச்சம்

இருள் என்று பிதற்றிக்கொண்டிருக்காதே 

அடிபட்ட கணங்களை

ஆழமாக துடைத்தெடுத்து

அவளுக்கென்று காத்திருக்கும்

பல ஆச்சர்யங்களைபரிச்சயமாக்க மருந்தாக்குவோம்“.

  பூத்தூவி வரவேற்போம் எனும் தலைப்பில் கவிஞர் கலையரசி செந்தில் குமார்.  

 நலம் கருதாமல்

நாளும் நட்பு செய்யும்

நயவஞ்ச கமில்லாத

நல்ல உள்ளங்களை

நட்பு பூத்தூவி வரவேற்போம்  

புன்னகையை புரியவைப்போம் எனும் தலைப்பில் கவிஞர் பாலு மணிமாறன்  

இதயக் கதவை

திறக்கும் சாவி புன்னகை

சறுகுகள் கூட

மரங்கள் பூமிக்கு அனுப்பும்

புன்னகை முத்தங்கள்

 புன்னகை என்பது

உலக மொழி   

இடையிடையே கவிஞர்களின் கவிதையின் செறிவினை தனக்கேஉரிய அந்த துள்ளலில் சொல்லிச்சென்ற கவிஞர் .வீ.விசயபாரதி ? யின் சில வரிகள்

   அடிமை இந்தியாவை

சுதந்திர இந்தியாவாக மீட்டெடுக்க

சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய

விடுதலை வேள்விக்கு

களமும் பலமும் பணமும் தந்து

இந்த சிங்கப்பூர் மண் செய்த

முதல் உதவிதான்

இந்த பூமியின் புகழுக்கெல்லாம்

உச்சம் என்று

உரத்துச் சொல்வேன்   

விழாவின் தொடக்க உரையை புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜகாங்கீர் அவர்கள் நிகழ்த்தினார். இவரது பேச்சு அனைவரையும் கவரும் ஒரு அம்சம்.   பல்வேறு கவிதைஇகவிஞர் என்று உதாரணப்படுத்தி சிங்கப்பூர் கவிதை உலகத்தரத்துடன் போட்டி போடுகின்றன அச்சூழலை ஏற்படுத்தியும் இருக்கிறது என்று செல்வதாக இருந்தது. 

 சென்ற ஆண்டைபோலவே இந்த ஆண்டும் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் இந்த ஆண்டின் கணையாழி விழா நாயகன் யார் என்று சுவாரஸ்யமாக எடுத்துச்சென்று மர்மத்திரையை விலக்கினார். ஆம் அப்பொழுதான் அங்கு குழுமியிருக்கும் அனைவருக்குமே தெரியும் விழா நாயகன் யார் என்று?  

  யார் அந்த சாதனையாளர்?  

  ஆங்கிலம் ஜப்பான் சீனம் மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமைபெற்று பல்வேறு நிகழ்வுகளில் மொழிபெயர்பாளராக இருந்தவர் சீனச்சிறுகதைகள் ஆங்கில கவிதைகள் ஆங்கில நூல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டது அணணாவின் சிறுகதையை நாடகவடிவில் இயற்றி அரங்கேற்றம் செய்தது பத்திரிக்கை ஆசிரியர் .N.யு தேசிய பணியில் பணிபுரிந்து பின் காவல் துறையில் பணியாற்றியவர் தூரதேசங்களில் சுகமான பயணங்கள் எனும் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றி வெளியிட்டது பல்வேறு தமிழ் மற்றும் சழுக அமைப்புகளில் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஏற்ற இந்திய கலைஞர் சங்கத்தின் கலை காவலர் பட்டம் வென்று 78 வயதினை எட்டியவர் இப்பொழுது யார் என்று புரிந்ததா? 

 இந்த ஆண்டின் கணையாழி ? 2007 எழுத்தாளர் பி.பி.காந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது  

எழுத்தளார் பி.பி.காந்தம் அவர்களின் பெயரினை அறிவிக்கும் பொழுது அவரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எவ்வித அதிர்வுகளுக்கும் இடம் கொடுக்காதவராய் அமர்ந்திருந்தார். ஆனால் விழிகளுக்குள் எழுந்த நீர் திவளைகள் மட்டும் இன்னும் அவர் சொல்லிச்செல்லாததை சொல்லிச்செல்ல துடிப்பதாகப்பட்டது. 

 முன்னதாக விழாவிற்கு பல்வேறுவகைகளில் இந்நிகழ்விற்கு உதவிசெய்த புரவலர்களை நினைவு கூர்ந்தனர். 

 சிறப்புவிருந்தினராக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் .வரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிஞர் மாதங்கி எழுத்தாளர்கள் சிங்கப்பூர் சித்தார்த்தன் ஜே.எம்.சாலி இளங்கண்ணன் ஜெயந்தி சங்கர் லெட்சுமி ஒலி96.8- ன் செய்திபிரிவின் பொன்மகாலிங்கம் முனைவர் ரெத்தின வெங்கடேசன் தினமலர் நிருபர் புருசோத்தமன் சமூக ஆர்வளர் பிரவின்குமார் மேடைப்பேச்சளார்கள் சிவக்குமார் ஸ்டாலின் கவிமாலை கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை சிறப்பாக ஒளிப்பதிவாளர் பேச்சாளர். எம்.சே.பிரசாத் ஒளிப்பதிவுசெய்தார்.  

  பார்வை: பாண்டித்துரை

சிங்கப்பூர்22-11-2007 

thanks: http://www.vaarppu.com

அய்யப்ப மாதவன் – னின் வரிகள்

பிறகொருநாள் கோடை கவிதைதொகுப்பிலிருந்து கவிஞர்  அய்யப்ப மாதவனின் என்னுரையிலிருந்து ஒரு பகுதி

இங்கு கவிதைகள் குறித்தான எண்ணங்கள் பொய்த்து கிடக்கின்றன. கவிதை பற்றிய உரையாடல்கள் கவிதையை மேல் எடுத்துச்செல்லும் எண்ணங்கள் ஆகியவை அறவே இல்லாமல் போய்விட்டன.  அவர் அவருக்கென்று சிறுபத்திரிக்கைகள் அதில் அவர்களின் கவிதைகள், அவர்களுக்கு வேண்டியவர்களின் கவிதைகள் இதைத்தவிரவும் திராவையான மொழி பெயர்ப்புக் கவிதைகள் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  அவ்வளவாக யாரும் அதை வாங்கிப் படித்து மெய்சிலிர்த்ப்பதாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் நாங்கள் மிகத்திறமையாக கவிதைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று போலியாய் தம்பட்டம் அடித்து காசு வேறு பெரிய அளவில் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  நல்ல இலக்கியம் பற்றியோ நல்ல கவிதைகள் பற்றியோ எந்தவித அக்கறையும் அவர்களுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

கவிதையை தீர்மானிக்கும் கவி மகுடம் சூடிய ராஜாளிகள் இங்கு இருந்துகொண்டு எதையாவது சொல்லி கூரிய பேனாக்களால் பூப்போன்ற நல்ல கவிஞர்களையும் காயப்படுத்துகிறார்கள்.  மேதாவிலாசங்கள் பூக்களைப் பறிப்பதை விட்டுவிட்டு பூக்களின் வண்ணங்கள் பற்றி ஆராய்ந்து நிறைகுறைகளைத் தெளிவாகச் சொல்லலாம்.  அது அந்த வகைப்பூ இந்த வகைப்பூ என்றுக் கூறி பூக்களை இனம் பிரிப்பதில் என்ன அர்த்தம் என்ன கௌரவம் இருக்கிறதென்று தெரியவில்லை பூக்கள் மேலும் பூத்துக் கொண்டிருந்தால் தான் அர்த்தம் தொனிப்பதாக இருக்கும்.

நன்றி: அய்யப்ப மாதவன்