இது தவறாகயிருப்பின் என்னில் ஏதுமில்லை…

சமிபத்திய இரு மரணங்கள் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அதே நேரத்தில் ஆற்றாமையின் வெளிப்பாடு இதுநாள் வரை அழுகை என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்னில் இது மாறுபடத்துவங்கியது. சீனுதான் சொல்வான் தெருமுனை வரைக்கும் சிரித்து பேசிக்கொண்டு வருவார்கள் துக்க வீடு நெருங்கியதும் அழ ஆரம்பித்துவிடுவார்கள் என்று…. ஒரு வீட்டிற்கு விருந்தினராய் செல்லும்பொழுதும் பழம் பிஸ்கட் என்று வாங்கி கொண்டு செல்வதையும்…. எதுவும் வலிந்து கொண்டு வருவது கூடாது என்று இம்மரணங்கள் உணர்த்தியது. இல்லை 2000- ம் மைல்களுக்கு அப்பால் உள்ள இடைவெளியின் காரணமாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

  இத்தருணங்களில் உணர்வுகளால் ஒடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அலுவலக பணியினூடே என்னுள் அடைத்துக் கொண்ட மௌனம் பணிசூழலில் மூழ்கிவிட்டாலும் அவ்வப்பொழுது வரும் தொலைபேசி அழைப்புகள் என்னடா போன்செய்தாயா எல்லாரும் வந்துட்டாங்களாமே என்பதூடே மீட்டெடுக்கிறேன். தடையற்றதாய் நகரும் இக்காலத்தில் என்னைமட்டும் ஒருவித இறுக்கம் சூழ்ந்து கொள்கிறது. தொலைபேசி விசாரிப்புகளுக்கு பழக்கப்படாதவனாய் சுருண்டு படுத்துக்கொள்கிறேன். 

 பலதரப்பட்ட உறவுகளுடன் தொடர்பு கொண்டபொழுது வந்து விழுந்த சொல்லாடல்கள் எல்லாம் மாறுபட்டதாய் இருக்கின்றன. மாற்றம் பெற்றதாகவும்…. என்சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு நான் இன்னும் எதிர்பார்த்தே காத்திருக்கிறேன்.  நேற்று இன்று என்ற ஒப்பீடுகள் எல்லாம் என் முன் உடைத்தெறியபட்ட போதும்,   மனிதம் என்பது பொய்யோ என்ற எண்ணப்பாடும் சொல்லாமலே எழுந்து அடங்குகிறது.  

உறவுகளுக்குள் நிகழ்ந்த மரணம். உயிர் ஒன்றுதான் என்றாலும் அம்மா, அப்பா என்ற வேறுபாடு இருக்கத்தானே செய்கிறது. நாம் எடுக்கும் நிலைப்பாடுகளின் மீது உணரவே முடிகிறது. ஒருகணம் நானும் ஸ்தம்பிக்ககூடும் அப்பொழுதும் இதே நிலைப்பாடு தொடருமா என்றால் கிடையாது. இழத்தலின்போதும் இருத்தலின் நிதர்சனம் இவர்களுக்கு புரிவதில்லை.  மீண்டும் கண்ணை கசக்கிக்கொண்டோடவே பழக்கப்படுகின்றனர்.

  பொய்யான வாழ்வினை இதுநாள்வரை சுமந்துகொண்டு திரிந்தேனா என்ற ஐயப்பாடு. உணர்வுகளுடன் இருக்கவே ப்ரயத்ணப்படுகிறேன். எப்பொழுது தூங்கினேனோ காலையில் கண்உறுத்தலுடன் எழுந்திரித்தேன்.

 நினைவுகளுடன்: பாண்டித்துரை 

மனதின் ஓரத்தில் கசிந்து கொண்டிருக்கிறது  

 களவாடப்பட்ட உன் நினைவுகள்  

 புரிதலற்ற வாழ்வில்   

தினமும்   விழியின் ஈர்ப்புகளை   

விருப்பமின்றியே நிராகரித்து

மனதின் பேச்சுகளை நீ கேட்டிடாதிட 

இப்பொழுது எல்லாம்   

மௌனித்து விடுகிறேன்  

அர்த்தமற்ற பார்வையில்  

எனை அவமானித்தாதிட 

 உன் மேலான ப்ரியங்கள்   

கானல் நீராகின்றன  

 முரண்பட்ட ரூபத்தின் தவிப்புகளை 

 தூரத்தில் நிறுத்தி   

ன் என்ற கேள்விகளுடன்   

எனது பயணம் தொடர்கிறது 

 னது பார்வையில் நீ  

விலகிச் செல்கிறேன் நான்.

நன்றி: வடக்குவாசல்

ஆக்கம்: பாண்டித்துரை

நேற்றிருந்தோம் –

இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்)
தேதி: 25-11-2007r1.jpgr2.jpgr3.jpg
சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் – நேற்றிருந்தோம் – நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த தேக்காவின் பகுதிகளை எழுத்தாளர் இராம.கண்ணபிரான் பகிர்ந்து கொண்ட நிகழ்வின் பதிவு.


இவரது இந்த தொகுப்பிற்கு உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவலையில் எழுந்த 11ஆண்டுகளை கவிஞர் துரைச்சாமி எழுதிய 3-வரி கவிதையினை ஞாபகப்படுத்தி நிறைவுசெய்தார். எனக்கோ இந்த கவிதையினை முதலில் சொல்லி என்பார்வையை திறக்கிறேன்.

திரும்பி பார்க்கையில்
காலம்
ஒரு இடமாக
காட்சிஅளிக்கிறது (பக்கம் ? 166)

நகுலன் கவிதைகள்

பொன். இராமசந்திரன் அவர்கள் அவருள் எழுந்து அடங்கிய எண்ணப்பேரலைகளுக்கான விடைதேடும் ஆவலுடன் எழுத்தாளர் இராம.கண்ணபிரானை அறிமுகம் செய்துவைத்தார்.

இராம.கண்ணபிரான் சிங்கப்பூர் சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடதக்கவர். 25ஆண்டுகள் + உமாவுக்காக உள்ளிட்ட நான்கு சிறுகதை தொகுப்பு நாவல் என்ற இவரது பரிணாமம் இன்று அதித ஈடுபாட்டுடன் ஆய்வுக்கட்டுரை எழுதுதல் மலேசிய ஈழ இலக்கியத்தின் மீதான ஈடுபாடு என்று விரிந்துள்ளது.

நேற்று நான் இருந்த தேக்கா அல்லது நேற்றிருந்த தேக்கா எனும் அணுகுமுறையில் பள்ளிக்காலம் எழுத்தாளன் தேக்காவின் தொழில் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை என்ற 3 பகுதிகளாக இருந்தது. 10 வயதில் ஆங்கில வழி கல்வி கற்பதற்காகவே தனது தந்தையால் சிங்கப்பூருக்கு 1953ல் வரவழைக்கப்பட்ட இவர் புதிய கல்விமுறை மஞ்சளாய் காட்சியளித்த சீன மாணவர்கள் என்ற பொருந்தா சூழலில் துவங்கிய பயணம் பள்ளிமாணவர்கள் பாடத்திட்டம் ஆசிரியர்கள் பள்ளிக்கட்டிடங்கள் என்று சிராங்கூன் சாலையினூடே தேடல் தொடர்கிறது. தனிமையான வாழ்வு புத்தகவாசிப்பினை ஊக்கப்படுத்திய நண்பர்கள் மாதம் ஒருமுறை எதிர்பார்க்கும் புத்தகங்களை சுமந்து வரும் கப்பல் இலக்கியவாசிப்பு என்று எழுந்து ஆண்ட பிறவியின் நினைவி னை கோர்வையாக எடுத்துச்சென்றார். நேதாஜி ஜவகர்லால் நேரு பிரிட்டானியஅரசு என்று எங்கும் மக்களால் வியாபித்து திரும்பதிரும்ப பேசப்பட்ட பேச்சுக்கள் ஆங்கில புழக்கம் இல்லாத அக்காலத்தில் பேசப்பட்ட பஜார் மலாய். குறியீடுகள் கொண்டு ஊருக்கு அனுப்பிய பணவிடை நாணயங்கள் நாணயவிகிதம் முதன் முதலாக விமானத்தை இரண்டு தினங்களாக இடைவிடாது பார்த்து ரசித்த மக்கள். பதின்ம வயதில் பணிக்கு வந்த தமிழர்கள் அவர்களின் கடினமான உழைப்பு பொழுதுபோக்கு. முதல் தலைமுறையில் வேறூன்றிய தமிழர்கள். பயணத்தமிழர்கள் என்று இருவேறுபட்ட பார்வையில் இவர்களின் வாழ்வாதாரங்கள் தேக்காவின் கட்டிடங்களின்ஊடே கடைவிரிக்கப்பட்ட வியாபாரங்கள் என்று ஜன்னல் வழி பார்த்த பல விசயங்கள் பின்னால் இவரும் இவருடைய நண்பர்களின் கதை வாயிலாக இடிபாடுகளுக்கு இடையில் மீட்டெடுத்து பதிவுசெய்துள்ளனர்.


 
பெட்டிசன் கந்தசாமி என்ற பதிவுசெய்யபடவேண்டிய தனிமனிதர்கள் பற்றிய சுவாரஸ்யமான பக்கங்கள் என்று மறக்கடிக்கபட்டவை மறுபடியும் தூசிதட்டப்பட்டுள்ளது.

சட்டைக்காரர் ஒட்டுக்கடை முனைகடை காலிஆட்கள் அலுவலக தம்பி என்று நான் அறிந்திராத புதியசொல்லாடல் தனிமனித பார்வையில் நிகழ்வுகள் பதிவுசெய்யப்படவேண்டிய அவசியம் என்று நேற்றிலிருந்து மீண்டபொழுது என்னிலும் அதிர்வலைகள். தேடலுக்கான தடமாய் மாறக்கூடும்.

பேச்சினூடே கண்ணபிரான் அவர்கள் சொன்னது நினைத்துபார்க்கும் அளவில்தான் பின்னோக்கிய தேடல் இருந்துள்ளது. நான் கதைகேட்கும் ஆர்வத்தில்தான் இந்த நிகழ்வினை அணுகத்தொடங்கினேன். அனுபவங்களை பகிர்ந்துகொண்டது வாசிப்பாக இருந்ததால் என்னுள் ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யம் தடைபடுவதாக உணரமுடிந்தது. இந்நிகழ்வின் பகிர்வுள் அடுத்த தலைமுறைக்கு ஒலி ஒளி அல்லது அச்சு வடிவில் எடுத்துசெல்லும் பொழுது நான் முழுமையாக கண்டுணரக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாக இராம.கண்ணபிரான் அவர்கள் கூறியுள்ளார். இந்த சந்திப்பிற்காக 15-நாட்கள் நீண்டதொரு போராட்டமாய் 1950 காலகட்டத்தின் நிகழ்வுகளின் நினைவுகளில் மூழ்கி வந்ததும் அன்றைய தேக்காவின் இன்றைய மாற்றங்களை கடைகளின் மாற்றம் அந்த கடைகளின் பெயர் தற்போதைய வாணிபம் உள்ளிட்ட அம்சங்களை தேடிவந்தமையும் மீள்பார்வையின் அவசியம் மற்றும் அக்கறை சார்ந்த பார்வையினை உணரமுடிந்தது.

வெகுசிலரே இந்- நிகழ்வில் கலந்துகொண்டாலும் மாற்றுத்தளம் அடுத்தகட்டநகர்வு என்ற தடையற்ற பயணத்தின் தூண்டுகோலாய் சிலர் எழுந்து வருவது கண்ட மகிழ்ச்சியுடன் நிகழ்விற்கு களம் அமைத்துதந்த அமோக்கிய நூலகம் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிறைவுசெய்கிறேன்.
நன்றி: வார்ப்பு திண்ணை இணையம்

நேற்றிருந்தோம்