உலகத்தின் கணக்கினை வகுத்தவன்
நீ வந்ததன் வழித்தடம் பிறழ்கிறதோ?
உலகமயமாதலாய்
உன் படம் ஏந்தி எங்கும்
விளிம்புநிலை மக்களை வாங்க
அங்கும் அதன் விகிதாச்சாரமே
அதிகரிக்கும் இப்போக்கிலே
அடிபட்டுபோகிறது
உன் மனிதநேயம்
இனியாவது நீ பிறப்பாய்
விளிம்பு நிலை விழி திறப்பாய்
பரிசுத்த ஆவியாய்
நீ மீண்டும் பிறந்திட
ஏ கர்த்தரே என்னை ரட்சிப்பாயாக
நன்றி: சிங்கை ஒலி 96.87 தமிழ்முரசு வார்ப்பு இணையம்
ஆக்கம்: பாண்டித்துரை