மழையின் குதுகூலமாய்

  நீர்வீழ்ச்சியையொத்த ஜோ வென்ற இரைச்சல் என்னைச் சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்கள் மறைந்து கொண்டிருக்க என்றும் இல்லாது அழவேண்டும் என்று ஆசைப்பட்டவனாய்……… 

இங்கு (சிங்கப்பூர்) வந்தபின் அம்மாவிடம் தொலைதொடர்பில் உரையாடியதுஅம்மா இப்ப நான் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது என்பதான நீட்சிகள் நேற்றுவரையில் ஆனால் இன்று அழ ப்ரியபட்டவனாய். 

திரைப்படங்களில் எல்லாம் நாயகன் அழும்போது நாயகி பாhத்துவிடக்கூடாது என்று கழிவறைக்குள் சென்று கண்ணாடிமுன் நின்று ஓவென்பதாகவோ யாருமற்ற தனிமையில் கதறி துடிப்பதாகவோ அல்ல. எல்லோரையும் கடந்து செல்லும்போது ஒரு சிறு துளி எட்டிப்பார்த்தாலே போதுமானதாக இருந்தது 

 எம்.ஆர்.டியில் பயணிக்கும் பொழுதும் என் தேடல்கள் எனதொத்த முகமாகவே இருக்க அழுதலில் கரைந்து போனதாய் ஒன்றும் தென்படவில்லை. பெருவாரியான புன்னகைகளே கொட்டிக் கிடந்தன

 அழுவதற்கான தேவை இக்கணத்தில் என்னை அரவணைக்கும் தோழமையாகவே எண்ணியபோதும் எட்டிப்பார்க்கவில்லை. அதீதமான எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் அடையாளப்படுத்தாமல் புறக்கணிக்கப்படலாம். 

எம்.ஆர்.டியின் தடதடக்கும் சப்தங்கள் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க கொட்டிக்கிடக்கும் புன்னகைகளின் ரீங்காரம் இன்னும் எனக்கான நேரம் மௌனித்து என்னருகேவோ சிலமணிநேர தொலைவிலோ வந்துகொண்டிருக்ககூடும். காத்திருந்தலின் சுகம் காதலில் மட்டுமல்ல. 

என்மீதான கட்டுடைப்பின் விருப்பமின்மையோ அல்லது என் மீதான புரிதலாகவும் இருக்கலாம் காலதாமதத்திற்கு. பேருந்து பயணத்திற்கு மாறிய பொழுதும் பெயர்தெரியா முகங்கள் என தொட்டுச் சென்றபொதும் ………. இன்னும் என்னுள் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் அழ வேண்டும். 

அதற்கான நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! கொஞ்சம் சொல்லுங்களேன். கெஞ்சலாய் கேட்கிறேன். ப்யர் போன்ற என் ப்ரியமான அழுகையை கணநேர நண்பனாக மீட்டுத்தாருங்களேன் 

மழைநேரத்து குதுகூலமாக அழுகையினூடே நடக்கவேண்டும் அழுகையினூடே சிரிக்க வேண்டும் என்னை பைத்தியம் என்று பார்க்கட்டுமே. என் நிஜமான ரூபத்தை அக்கணத்திலாவாது அறியட்டுமே. இமைகளின் இயலாமை உறக்கத்திற்கு அழைத்து சென்றபோதும் எனக்கான நிறுத்தத்தில் அநிச்சையாய் விழித்தெழுந்து நடந்துசென்றபோதும் எட்டிப்பார்க்காத அழுகைக்காய் நான் இன்னும் காத்துக்கொண்டிருக்கேன். 

அம்மாவிற்கு தொலை தொடர்பு கொள்ளவேண்டும் என்ற ஆவல். இனி எனக்கான இரவுகள் விழித்துக்கொண்டே இருக்கும். எப்பொழுதும் என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்படியாகத்தான் …..

நீதி இங்கதான் இருக்கியா. அடைபட்ட காதுகளில் பட்டுத் திரும்பும் பக்கமெல்லாம் எதிரொலித்த வண்ணம். யாராக இருக்கக் கூடும் பிரபுவும், செல்வாவும் என்னை கூப்பிட்டபடியே ஓடிவந்ததை, சரவணனிடமிருந்து வராத மின்னஞ்சல்கள் என்னின் குப்பைத்தொட்டி முழுமைக்கும். போததகுறைக்கு நேற்றையகனவில் ஞாபகமறதியாய் பூர்ணிக்கு எழுதியபின் எதற்காக என்று கிழித்தெரிந்த கடிதங்களுமாய் நிரம்பிக்கிடந்தது. 

இன்று அதிகாலையில் (6.00) மணிக்கு அலுவலக அவசரமாய் ஒரு கப் மைலோவும் இரண்டு பிரட்டும். என்றைக்கும் இல்லாததாய் என் தொண்டையில் மாட்டிக்கொள்ள எழுந்த கண்ணீரை பார்த்து சீனன் சிரித்துக் கொண்டிருந்தான். வித்தியாசமாய் உணவருந்துவதாக நினைத்திருக்கலாம். இந்த நேரத்தில் பொறையேறுகிறது யாரக இருக்கக்கூடும். அடிக்கடி அம்மா மட்டும்தான் நினைப்பாள், அதுவும் அழுதுகொண்டே. ஆனால் இப்பொழுது இந்தியாவில் இரவு அல்லவா வறண்டு போன கண்ணீராய் அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க கூடும். வேறு யாரு சசியா? 

கடந்த நான்கு நாட்களாக விடுமுறையிருந்தும், எப்போதும் போல் இல்லாமல் ஞாபகங்களை மட்டும் சட்டைப்பையில் வைத்து திரிந்தேன். நேற்றுத்தான் சசிகூட போன் செய்து என்னப்பா என்றார். இருக்கியா என்பதாக நான் இருக்கிறேன் என்பதாகவும்! அது மட்டுமில்லாமல் சசியும் இந்நேரத்திற்கு ஒரு கப் தேத்தண்ணி இரண்டு பிரட்டுடன் அமர்ந்திருக்கலாம். நிச்சயம் சசி என்னை நினைத்திருக்க மாட்டார். 

வேறுயாராக இருக்கலாம், மதியம் உணவருந்தியபின் கிடைக்கும் குட்டித்தூக்கத்தில் வராத கனவுகளாய் வந்த கனவுகளும் ஒரு மணிக்கு வைத்த வைப்ரேட்டர் அலாரத்தால் தொட்டாச்சிணுங்கியாய் கடந்த வாரத்தில் எம்.ஆர்.டியில் பயணித்த பொழுது என்னெதிரே அமர்ந்திருந்தவளின் சாயலுடன். 

மூன்று மணிக்கு மீட்டிங் ஆறு மணிக்கு பேக்ஸ் இடையிடையே செல்பேசி, அப்போதும் வருவதில்லை நான் கல்லூரியில் காதலித்தவளாய். நெகத்துடன் கொஞ்சமாய் சிநேகம் செய்து மெனக்கெட்டாலும் பின்னிருந்து வரும் குரல் போன வாரம் எல்.கெச்க்கு கோட் பண்ண சொன்னேன் இன்னும் செய்யவில்லையா? அதனூடே ஜெனியின் சிரிப்பு சப்தமும் எதிர்பார்த்தே காத்திருப்பாள் போல . 

அன்றும் அப்படித்தான் சிராங்கூன் ரோட்டில் டொபாயோ போவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். அருகிலிருந்த சிலர் தூரத்தே ஒருவனை காட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அவனும் கெக்களித்தபடி எங்களை நோக்கி வந்து கொண்டிருக்க அவன் பின்னே பத்திருபது பேர் ஆண் பெண் என்று பேச்சு சப்தமும் சிரிப்பதுமாய் எல்லாம் இவன்பற்றிய சில நிமிட சந்தோசம் பொழுதுபோக்காய் ……….. 

இவனோ சட்டை கிழிந்து மழிக்கப்பட்ட தலையுடன் பல நாள் உச்சிவெயிலில் சுற்றித்திரிந்தவனாய் அந்த மாலை நேரத்தில் அங்கங்கே கிழிசல்களுடன் நிஜத்தை சொருபிக்கும் வண்ணமாய் கைகள் ஏதோ ஒன்றை எழுதிச்செல்ல  எரியும் விழிகளில் பார்த்துக்கொண்டிருந்தான் சுற்றியிருந்தவர்களின்  நிர்வாணங்களை என்னையும் பார்த்திருக்கலாம். பஸ் வந்தவுடன் நான் ஏறிச்சென்றுவிட்டேன். 

அருகிருந்த முதிர்ந்த சக பயணி தமிழா என்றார் . ம் என்பதாக எத்தனை வருசுமாச்சு, வந்து 2 தம்பி 3 சக்கரைக்கு இன்னும் ஓரிரு மாதத்தில்மாமா வந்து 12 வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஜன்னல் வழி ஓடிச்சென்றன விண்முட்டும் கட்டிடங்களும் வெள்ளைப்பெணகளுமாய் அடுத்தடுத்த நிறுத்தங்களும் 

மயானமாய் இருந்த பிரதேசமல்லவா உடலிலிருந்து உரிக்கப்பட்ட வெம்மைத் தடங்கள் அங்கங்கே தெரித்திருக்க யாருக்கும் தெரியாது. திரும்பி பார்த்தபொழுது முதியவருக்கு பதிலாக சீன மாதோ அல்லது பிலிப்பானாவோ இருக்கணும். அவளுக்கு புரிந்திருக்காது, என்னை பார்க்க பிடிக்காதவளாய் திரும்பிக்கொண்டால். 

ஜெனியின் சிரிப்புச் சப்தம் பிரிண்டரில் இருந்து அந்த கோட்டை (quote)  எடுத்து பாஸ் டேபிளில் வைத்து விடு நான் கலெக்சனுக்கு போய்விட்டு நாளை அலுவலுக்கு வருகிறேன் 

இரவு அடிக்கப்போகும் தொலைபேசிக்காக யாரும் காத்திருக்கப்போவதில்லை. இந்த அங்காடியின் நெடிய க்யு முடிவடைய இன்னும் கால் மணிநேரமாகலாம். அப்பாவோடா செல்லுக்கு டிரை பண்ணேன். அவளா பரிட்சையில சுட்சை அமத்திப்போட்டிருப்பா. எப்பொதும் போலத்தான் இன்றிரவும் ப்ளிஸ் ட்ரை எகைன், ப்ளிஸ் ட்ரை எகைன் ……….. 

விண்மீன்களையும் நிலவினையும் விரடிட்டிப்பிடிக்கும் வேகத்தில் லாரிகள் . முழுநாளைய வாசனையை தோல்பையில் அடைத்திருக்க அதன் மீதான முகக்கவிழ்ப்பில் கசப்புகளை சுவைத்தபடி தொண்டையில் ஜில்லிட்டது ப்யர். இன்றைய  

இரவில் வராத கனவுகளுக்காய் நாளைய பொழுதில் தொலைந்த போகலாம்………….     

ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே

 picture-003.jpg

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

எனக்கான தேவைகள் எல்லா இடங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது. அப்படித்தான் ஆவியும்.  புரிதலற்ற ஒரு காலத்தில் புரண்டு எழுந்துவந்த தடங்கள் இருந்தாலும் என் சகோதரனின் உபயத்தால் ஆவியின் சில பக்கங்களை அவ்வப்பொழுது விரும்பி படிப்பதுண்டு. அப்படித்தான் ஞாநியின் பக்கங்களும்.  ஞாநியின் பக்கங்கள் ஒரு கட்டத்தில் (100க்கு பிறகு ) தடைபட்டபொழுது மீண்டுவரும் என்று எண்ணியதுண்டு. அப்படித்தான் அடுத்தடுத்த பக்கங்கள். 

07.02.08 சீனப்புத்தாண்டை (சிங்கப்பூர்) கொண்டாடிக் கொண்டிருந்தது. இன உணர்வுகள் எனக்கான தேவை என்றாலும் அவை என்றுமே பூசலுக்கு அடிக்கோடிடுதை அனுமதித்ததில்லை. பல்வேறுபட்ட இனமக்கள் வாழும் ஒரு சமுகத்தில் வாழும்பொழுது அவர்களின் உணர்விற்கு என்னையும் உட்படுத்த முயல்வதுண்டு அப்படித்தான். ஆனாலும் மனதளவில் சீனப்புத்தாண்டை கொண்டாடினேன் கூடுதலாக என்னுடைய முதலாளிக்கு ஒரு குறுந்தகவல் அவ்வளவே. கடந்த ஆண்டு சீனப்புத்தாண்டை நினைத்துப்பார்க்கும் அளவிலே இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு என்னை ஆட்கொண்டது. கடந்த ஆண்டு புத்தாண்டிற்கு மலேசிய லங்காவி தீவிற்கு நானும் என்னுடைய சகோதரர்களும் பயணித்ததே. இந்த ஆண்டு என்னுடைய சகோதார்கள் அனைவரும் இந்தியாவில் விடுமுறையை கொண்டாட நான் மட்டும் இங்கே 

சீனப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் கவிமாலை கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடும் ஒரு பகுதியாக எனக்கு வந்த அழைப்பினையொட்டி சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டன் (பூ மாலை) பகுதிக்கு ஒரு நாள் முழுமைக்கும் என் சின்டெரெல்லா கனவுகளுடன்…. எல்லோரையம் எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னருகே சிலரே இருக்க கூடும் அப்படிச் சிலர் வந்த மகிழ்ச்சியில் நாளைய பொழுதில் அதன் ஞாபகங்கள் எங்காவது துருத்திக்கொண்டிருக்கலாம்.  

 மாலையில் தேக்காவின் வீதிகளில் பயணிக்கும்பொழுது சனசந்தடி பற்றிய சலிப்பு ஏற்பட்டாலும் இதை விட்டால் இவர்கள் வேறு எங்குபோய் மகிழக்கூடும் இவர்களின் மகிழ்ச்சிக்கு இடைஞ்சலாய் (இடையே) நான் என்றவாரு கால்களின் போக்கினில் கண்களில் ஒரு மாற்றம். ஏதேச்சையாய் நான் படித்த சில வரிகள் 

ஞாநியின் …… பக்கங்கள் ஆரம்பம் ஆரம்பித்த ஒன்று மீண்டுமா என்ற ஆர்வமிகுதியில் மேலெழுந்த பார்வையில் கொட்டை எழுத்துக்களில் குமுதம். வாங்குவோமா இல்லையா என்று யோசிப்பதற்கு முன்னே என்கைகளில் தாங்கியபடி பிறகு என்ன சில்லறையை சரிபார்க்காமல் கொடுத்துவிட்டு செல்ல மறதியில் நடைபோட்ட என்னை அங்காடிக்காரர் அழைத்து மிச்சமாக 0.30 சென்ட் கொடுக்க அட என சொல்லிக் கொண்டே முதல் பக்கத்தை திருப்பினால் வாங்கியதன் சந்தோசங்கள் ஒரு பக்கம் வடியத்தொடங்கியது.   

 ரோபோ படத்திற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம். சரியான பெயரை சொல்லும் ஒரு வாசகருக்கு பரிசு ரூபாய்.1000.00  

உடனே என்னுள் எட்டிப்பார்த்தது . (இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா) படத்திற்கான தலைப்பு போட்டியே. (நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு வகையில் .ஆவிற்கும் ஒரு தொடர்பு உண்டு 

100 கோடிக்கும் மேல் பட்ஜெட் ப்ரமாண்டம் சங்கர் இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தகு பிரமாண்டத்தின் படதலைப்புக்கு ரூபாய் 1000.00 ? ரசிகா! பெயரை தமிழ்ப்படுத்துவதால் கிடைக்கும் வரிச்சலுகையை…………….?  

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

குமுதம் ரஜினி ரசிகர்களை வைத்து சம்பாதிக்கிறதா அல்லது ரஜினி……………….. 

ஆக மொத்தத்தில் ரஜினி ரசிகர்களின் மதிப்பு ஒரு ஆயிரமாய்……………………….