சனியன்றே இந்த பதிவையெழுதியிருப்பின்
இன்று மீண்டும் மீண்டும் மீண்டும் கென் என்றே பதிவுசெய்திருப்பேன்.
சனியன்று மாலை கென் என்னை தொடர்புகொண்டு பாண்டி சாருஆன்லைன் பார்த்திங்களா என்றார்.
இல்லை கென் என்றேன்.
ரொம்பநன்றி பாண்டி, என்னுடைய கவிதையையும், உங்களுடைய கவிதையும் சாருவின் இணையத்தில் வந்துள்ளது என்றார். நன்றிகளை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டோம். நாளையும் (ஞாயிறு) நன்றிகளை சொல்லிக்கொள்ளப்போகின்றோம் என்பதை அறியாது.
ஞாயிறு கென்னிடமிருந்து அழைப்பு
சாருவின் இணையத்தை பார்த்தீர்களா என்று, இல்லை கென் திங்களன்றுதான் பார்க்கநேரிடுமென்றேன்.
கென் ஏதோ ஒன்றை அணுமானித்தே கேட்டது
ஆனால் அதன் வீரியம் பற்றி அறியாது கென்னும்வலைப்பக்கம் செல்லவில்லை. ஞாயிறு மாலை இணையத்திற்கு சென்று சாருஆன்லைனை பார்த்தபின்னர் அவ்வளவு மகிழ்ச்சி, சாரு தனது 3 வது எழுத்துலக வாரிசாக கென்னை அறிவித்திருந்தார் (மற்ற இருவர் வா.மு. கோமு , மனோஜ்). கென்னை தொடர்புகொண்ட பொழுது ஆமாம் பாண்டி நண்பர்கள் சிலர் விசயத்தை சொல்லமால் இணையத்தை பார்த்தியா என்றனர் அதன் பின்னே சென்றுபார்த்தேன், எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை நீ கொடுத்திருக்கிறாய் பாண்டி என்று நன்றிகளை சொன்னார். இல்லை கென் நான் தான் உனக்கு நன்றியை சொல்லவேண்டும் என்று மாற்றி மாற்றி நன்றிகளை சொல்லிக்கொண்டோம்.
ஆனால் சின்னதாய் சந்தோசம்
கென் இனி எப்போது இதை நினைத்தாலும்
கென்னின் மகிழ்ச்சிக்கு எனது பங்களிப்பும் கொஞ்சமாய் எங்கோ துருதிக்கொண்டிருக்கலாம் (மறந்தால்தானே நினைப்பதற்கு)
கென் உனக்கு என்னுடைய வாழ்த்துகள்.
சாருநிவேதிதா- வின் பதிவு : வேலி முட்டியும் வாரிசுகளும் http://www.charuonline.com/june08/pp8.html
நன்றி: சாருநிவேதிதா
பாண்டித்துரை