மஹாத்மனுக்கு வருத்தத்துடன் சில வரிகள்…
வணக்கம் மஹாத்மன்
நான் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாளனை இப்படியாவது சந்திக்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது.
வரலாறு பற்றி வாய் திறப்பதற்கு முன் இனி உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்.
பல சிக்கு என்று ஒரு சிக்கை முன்வைத்து, சில மூட்டைகளையும் அவிழ்திருக்கிறீர்கள். அவிழ்தமைக்கு நன்றி.
பின்னூட்டம் சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டபோது (தொடர்பு கொண்டதன் முதன்மையான விசயம் இறுதியில் வருகிறது) தெளிவு படுத்திய ஒன்றை உங்களுக்காகவும் சொல்லிவிடுகிறேன்.
இந்திய எழுத்தாளர்களுக்கு ஒதுக்ககூடிய (1/2 / 1) பக்கத்தில் மலேசிய படைப்பாளர்களை எழுதச் சொல்லலாமே என்ற ம.நவீன் வினவலுக்கு எதற்கைய்ய தனி நாடான சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்? அந்த இடத்திலும் மலேசிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே? சரிதானா இல்லையா
கொள்ளையை பற்றி ஒருவர் பேசி முடித்துவிட்டார் விட்டார். நீங்கள் கொள்கையை (மனவலியை) பற்றி பேசியிருக்கிறீர்கள். கவிஞர் வந்துவிட்டு சென்றதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் போல….
இந்த விமர்சனங்களுக்கு உரிய இருவரும் வாய் திறக்கும்போது இன்னும் கொஞ்சம் உண்மையை உணரலாம் என எல்லோரும் நினைக்கலாம்.
திறப்பார்களா?
என் மீதே எனக்கு விமர்சனம் உண்டு (இப்ப கூட என்னைய கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டேன்) மனுஸ்யபுத்திரன் பயணத்தில் அவருக்கு உடல் மனரீதியான வலி எற்பட்டிருப்பின் அதற்காக வருந்துகிறேன். இனி அதுபோல் இதுபோல் எப்போதும் நடக்ககூடாது.
அட இனிமே நடந்து முடிஞ்ச உடனே என்ன நினைச்சிங்கனு சொல்லிப்புடுங்கய்யா அப்பத்தான் அடுத்து எவனும் வரமாட்டான். கூட்டம்னு கூட்டமாட்டான். நீங்க இரண்டு மூன்று வருசம் என்று பொத்தி பொத்தி வச்சு பேசுற பயபுள்ளைக போல.
கே.பா, பா.மு எதிர்பட்டால் வாய் பொத்தி போவிங்க போல. அட முழுப்பெயரை வெளிப்படுத்த ஆ இல்லையா. ஏம்பா பா.து நீதான் சொல்லலாம்ன நீங்கள் வைத்த எழுத்துக்கள் மீது நடந்துகொண்டிருப்பவன்.
///கற்றிருக்கலாம்///
அட மனிதர்களோடு பழகுவதில் அப்படி என்னையா காண்டு உணக்கு. ///பணம் பண்ணுவது/// வரவு செலவு கணக்கு பார்கணும்னு எதிர்பார்கிறிங்க போல, இருங்க கேட்டுச் சொல்லுதேன்.
///ஆண்மையை வெளிப்படுத்துதல்///
அட சொக்கா!
முதல் அடிக்கு இங்கு 3-வது அடியில் ஆண்மை பீறிடுகிறதப்பா.
வல்லினம் இதழ் சார்ந்து என்பதை நீங்கள் தப்பா புரிஞ்சுண்டேள். இருங்க தெளிவா விளக்கிடுறேன். வல்லினம் விற்பனை சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டிருந்தார். அது சார்ந்து நான் அனுப்பிய சில மின்னஞ்சல்களுக்கு அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்து குவிந்துவிட்டது அதான். வல்லினம் விற்பது 5 புத்தகம்தான் அதற்மேல் படிக்ககூடிய நண்பர்களிடம் தேடிச்சென்று கொடுக்கிறேன். இங்கு எல்லோரிடமும் வெள்ளிகளை எதிர்பார்க்க முடியாது. ஆக 5 புத்தகத்திற்கு மேலான தொகையை நான் குடுக்க நேர்ந்தால் அது எனது சம்பாத்திய பணம் என்று எழுதியிருந்தேன். இதற்கு நவின் தொடர்பு கொண்டு நீங்க கவிதைதனமா எழுதியிருந்திங்களா அந்த பார ஒன்றும் புரியலை பாண்டி! என்ன பாண்டி உங்களை விற்கச் சொல்லி கஷ்டப்படுத்திட்டேனானு (எனக்கு மனிதர்கள் தான் முக்கியம்) (தன் தேவை சார்ந்து) அப்ப பிரச்சினை இல்லைதானேனு,
இல்லை.
அட சொக்கா!
எனக்கு விருப்பமான இதழ்களை நண்பர்களுக்கு படிக்கச்சொல்லி நான் கொடுப்பது வழக்கம். அப்படி சமீபகாலமாக சமநிலை சமுதாயம் என்னும் இதழை நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். முதல் முறையாக சென்று 5 புத்தகங்களை அள்ளும் போது கடைக்காரன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான்.
சுயபுராணம் என்ன செய்ய
மேட்டருக்கு வருவோம்.
உன் தேவை சார்ந்த நான் அனுப்பிய கேள்விகள் கொண்ட மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.
இப்ப தெளிவா குழப்புறேன்.
உன்னுடைய தேவைகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ள பாண்டித்துரை என்ன பரத்தையா?
ஓ பரத்தையோடு நீங்கள் பரிவாக பேசக்கூடியவர்கள் அல்லவா ? அதற்காகத்தான்யா அறுவைசிகிச்சை……
இதற்கு எந்த ஆத்மா ஆண்மைபீறிட வந்து 5-அடியில் பதிலிடப்போகிறதோ?
ம்… பேசப் பேசத்தானே உன்னையும் என்னையும் பற்றிப் புரியும்.
ம.நவீன் வல்லினம் இதழினை என்னிடம் கொடுப்பதற்கு முன் மஹாத்மனிடம் கலந்துரையாடியிருக்கலாம். ஏன்னா என் முகம் பார்க்கா ஜோசியர் மஹாத்மன் //கற்றிருக்கலாம்// அட அவனா அப்படி இப்படினு நெற்றிக்கண்ணால் உணர்ந்ததை சொல்லியிருப்பார். ம் இப்ப ஒரு அனுபவம் ம.நவீனுக்க கிடைத்துவிட்டது.
என்னுடைய முதல் கவிதை தொகுப்பை உங்களிடம் தருகிறேன் மஹாத்மன் அச்சிட்டு வெளியிட்டுத் தாருங்கள்.
தருவீர்கள் தானே.
பாண்டித்துரை
சிங்கப்பூர்.
அஞ்சடியில் பின்னூட்டம் இட்ட இந்த பதிவு தொடர்பான சுட்டி: ‘விபச்சாரியின் யோனியை’எப்படி உடைத்துப் பார்ப்பது?!
என்ன ஆயிற்று!? ஒன்னும் புரியலையே நீதிபாண்டி!
படித்துவிட்டு வருகிறேன்!!