சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா
தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன், ‘மலேசியப் புகழ்’ பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா சிங்கப்பூரில் வரும் 26 ஜூலை 2009, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சிராங்கூன் ரோடு கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் மாலை 5.00 மணிக்கு நடை பெறும் இந்நிகழ்வில் ‘வாசிக்க, நேசிக்கத் தமிழ்’ என்ற தலைப்பில் இருவரும் உரையாற்றுவார்கள். நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம்.
தமிழ்சுவை, நகைச்சுவை கலந்த இந்நிகழ்ச்சியைத் ‘தமிழ்வள்ளல்’ போப்ராஜூ என்ற நாகை தங்கராசு ஏற்பாடு செய்துள்ளார். மேல் விவரம் வேண்டுவோர் 82793770 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விழா ஒருங்கிணைப்பு: பாலு மீடியா
அது யாருங்க ‘மலேசியப்புகழ் பாண்டித்துரை’??
என்னங்க பதிவர் சந்திப்பிற்கு வரவில்லை!
கிரி வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். இனி ஞாயிறு அன்று மட்டும்தான் வெளி நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்
நம்ம ஊரு லியோனி மாதிரி. மலேசியா தமிழன் அவர். மலேசியாவில் மிகவும் பிரபலம். இப்ப சிங்கப்பூரில் அவருக்கு ஒரு ரசிக பட்டாளமே இருக்கு. காரணம் இங்க வந்த சென்னை தமிழை சென்னை தமிழனை அவருக்கு கைமா பண்ண புடிக்கும். அதைக் கேட்டு கிக்கி புக்கினு சிரிக்க இங்க நாலுபேரு இருக்காங்க.