பிழைதிருத்துபவர்
வரத்தவறிய ஒருநாளில்
பாண்டியன்
பாரதிதாசனை தட்டச்சுசெய்திருந்தான்
எல்லோரும் பார்க்க தட்டச்சை
சில பிரதிகள் எடுத்து விநியோகித்ததில்
பாரதிதாசன்
பாதிதாசானாக மாறியிருந்தான்
பாதிதாசனை அறியாதா பாண்டியன்
செத்தொழியும் நாளெனுக்கு திருநாளாக
எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டிநிற்க
அருள்பாளித்தார்
தினையளவு நாட்டினில்
“தீ” யளவும் பயிராகா
பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்
பாதிதாசைனையும்
பாவிதாசனாக
இ-ஊரானை நப்புக்காட்ட
ஊரானை ஒப்புக்காட்டி
நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும்
மக்கள் முன்னே
பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்
பாரதியாரையும்
பாறையாக
பறையாக
எம்பெருமான் முருகப்பெருமான் அருள்பாளித்தார்
பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்
©pandiidurai