இரு கைகளை சிறகாய் விரிக்கும்
அப்புகுட்டிக்கு
உயரபறக்க வேண்டுமாம்
தூக்கச் சொல்கிறான்.
Monthly Archives: மார்ச் 2015
நிரல்யா
7th MAY 2015 – நதிமிசை நகரும் கூழாங்கற்கள்
இரண்டு ஆண்டுகளா கவிதை எழுதாமல் இருந்தவன் சில மாதங்களாக உதயா, அப்புகுட்டி, மதுவுக்கு தெரிந்த கவிதைகள் என்று கிறுக்க ஆரம்பித்துள்ளேன். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற எந்த ஒரு புத்தக நிகழ்வுக்கும் செல்லவில்லை. பணிச்சுமை என்று தப்பித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அப்படி தப்பிக்கவே நினைத்திருந்தேன். எம்.கே 10 பெண்களின் கவிதைகள் தொகுப்பு என்ற ஒரு பவுன்ஸரை போட்டுவிட்டார். மனம் உட்லண்ட்ஸ் நோக்கி திரும்பிவிட்டது.
நதிமிசை நகரும் கூழாங்கற்கள் எழுத்தாளர் எம்.கே.குமார் தொகுத்த சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது.