இந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் – 06

இந்தநாளின் மகிழ்ச்சியாக 

எதைச்சொல்லலாம்

ஜோ பகிர்ந்த பொங்கல் கவிதைப் படங்களை 

தேக்காவின் கடைகளெங்கும் முளைத்து நிற்கும் கரும்புக் கட்டை 

ரங்கூன் சாலையிலிருக்கும் சங்கீதா பவனின் 

மணக்கும் பில்டர் காபியை 

‘தோட்டம்’ நடிகர் சிங்கை ஜெகன் மற்றும்

இசையமைப்பாளர் சபீர் பற்றி  அமைந்த

சுந்தருடனான நட்புரையாடலை

வாகன ஓட்டத்தில் ஆடச்செய்த 

பாடலாசிரியர் மதிசியம் பாலா எழுதிய

நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதய்யாவை

இளஞ் சிவப்பு நிறத்தை


இந்தநாளின் மகிழ்ச்சியாக 

எதைச்சொல்லலாம்

#பாண்டித்துரை

ஹான்ஸ் தல

பப்போலதெரு இரயில் நிலையம் அருகில்

தேக்காவின் குடைக்கேண்டியன்

ஹனிபா கடைக்கு பின்புறம் கடக்கையில் எல்லாம்

அறிமுகமில்லா சிலர் புன்னகைத்து

C என்றழைக்கிறார்கள்

தேக்காவின் சுவர் ஓவியத்தை பார்த்து கடப்பதைப்போல

சுற்றும் முற்றும் பார்த்து கடந்துவிடுகிறேன்

வேறெங்கும் என்னை யாரும் இப்படி அழைத்ததில்லையேஎ

ன்னைப்பார்த்து புன்னகைத்தவர்களுக்கு

ஹான்ஸ் தல என்றவர்களுக்கு

ஒரு தேநீரையோ , பகிர்ந்துண்ணும் வடையையோ

பரிசளிக்காத இந்த மனமெதற்கென்ற

ஹான்ஸ் தலையையோடு

ஒரு தேநீரைப் பகிர்ந்து நீங்களும் கடக்க நேரிடலாம்

#பாண்டித்துரை

40நீங்கள், Jeeva Nanthan, Ganga Kathiravan மற்றும் 37 பேர்12 கருத்துக்கள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்

யமுனா வீடு – 10

யமுனா வீடு

ஒரு நெடியநாளின் சிறுதுயரை
கடந்து வருவதில்
யாரிடம் கதை கேட்டு
யாரிடம் கதை சொல்வது
என்ற குழப்பத்தில்
அழத்தொடங்கும் யமுனாவிற்கு
சமாதானம் தேவைப்படுகிறது
அம்மாச்சியின் முகம் பார்க்கிறாள்
அப்பாவின் முகம் பார்க்கிறாள்
அம்மாவின் முகம் பார்க்கிறாள்
சமாதானத்திற்கான புன்முறுவலை
யார் தருகிறார்களோ
அவர்களைப் பற்றிக்கொண்டு
சமாதானம் அடைகிறாள்
சமாதானம் அடையும் யமுனாவிற்கு
ஒரு நெடியநாள் இன்றோடு முடியாது
நாளைய பொழுதில் ஆரம்பமாகும் – என்று
தெரிந்தே இருக்கிறது.

#பாண்டித்துரை

Thanks: http://www.minkirukkal.com/%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-10/