Bicycle traveler

விகாஸ் எதிராஜ் – வயது 24, கட்டிடப் பொறியாளர்

அருண் ராகேஷ் – வயது 27 மென்பொறியாளர்

விகாஸ் எதிராஜ் சென்னையிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மிதிவண்டியில் தனது பயணத்தை தொடர்கிறார். இதுபற்றிய ஒரு பதிவை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பத்தியாக அவரது இணையப்பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

விகாஸ் தன்னுடைய பயணத்தை தினமும் யூடியூப் & இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்கிறார்.

அருண் ராகேஷ்ம் சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மிதிவண்டியில் பயணப்படுபவர், தன்னைப்போன்று வேறுயாரும் இப்படி பயணம் மேற்கொண்டுள்ளார்களா என்ற தேடலில் விகாஸ் பதிவுகளைப் பார்த்து தொடர்புகொண்டு தாய்லாந்தில் இருவரும் சந்தித்து தங்களது மிதிவண்டி பயணத்தை தொடர்ந்தனர்.

இருவரும் ஆஸ்திரேலியா வரை போவதென்ற தற்போதைய இலக்கில் சிங்கப்பூரில் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு இன்று திரும்புகின்றனர்.

விகாஸ் எதிராஜ்-ன் ஆஸ்திரேலியா பயணம் விரைவில் தொடரும்.

அருண் ராகேஷ் தனது மிதிவண்டியில் வேறு நாடுகளை நோக்கி பயணப்படப் போகிறார்.

இருவருக்குமே மிதிவண்டிப் பயணமென்பது கனவல்ல, இலக்குமல்ல. ஏதோ ஒரு உந்துதலில் இலக்கின்றி விளம்பரமில்லாத இந்தப் பயணத்தை யாரையும் நம்பாமல் தொடர்ந்துள்ளனர்.

இவர்களுடனானா விரிவான உரையாடலை எழுத்து வடிவிலும், ஒளிப்பதிவாகவும் கூடிய விரைவில் பதிவுசெய்கிறேன்.

இவர்கள் இருவரையும் சிங்கப்பூரில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் Jeya Kumar

#பாண்டித்துரை