மாற்று சினிமா

இணையத்திலும், சஞ்சிகைகளிலும் மிகுதியாக காணக்கிடைப்பது திரைப்படங்களின் விமர்சனம்தான், நாமும் ஆர்வமாய் தேடிப்படிப்பது அத்தகைய விமர்சனங்களைத்தான். முகநூல் வந்த பிறகு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே விமர்சனத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமே அதிகருத்திருக்கிறது.

குறும் படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய விமர்சனத்தை இங்கு வெகுசிலரே, வலை பதிவுகளிலும் ஒரு சில சஞ்சிகைகளில் எழுதிவருகின்றனர். அப்படி எழுதப்படும் குறும்பட விமர்சனங்கள் புத்தகமாவது அரிது.

இன்று வெளிவரும் என்னற்ற குறும்படங்களில் சிறந்த படத்திற்கான விமர்சனங்கள் புத்தக வடிவம் பெறும்போது அத்தகு திரைப்படங்கள் சினிமா குறித்து பயில்பவர்களுக்கு ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆண்டுதோறும் வெளிவரும் நூற்றுக்கணக்கான குறும்படங்களில் தெரிவு செய்து பார்க்கவும்.

எழுத்தாளர் கிராபியென் பப்ளாக் எழுதி புதிய கோணம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மாற்று சினிமா’ நூல் நானும் எனது நண்பர் அறிவுநிதி தயாரித்து கவிஞர் அய்யப்ப மாதவன் இயக்கி, திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்த ‘சாலிட்டரி’, எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய கர்ண மோட்சம் உள்ளிட்ட 25 கும் மேற்பட்ட குறும்படங்கள், சில ஆவணப்படங்கள் குறித்துப்பேசுகிறது.

ஒவ்வொரு குறும்படம் பற்றிச்சொல்லும் முன்னர் அந்த திரைப்படத்தை பார்பதற்கு கிடைத்த வாய்ப்பு பற்றியோ, அல்லது எழுத்தாளர் குறும்படம் ஒட்டிய நினைவுகளைக் கிளறி குறும்படத்தை அறிமுகப்படுத்தும் போது, ஒரு திரைப்படத்தை காட்சிப்படுத்திப் பார்க்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு அயற்சியையும், வாசிப்பில் தொய்வையும் தருகிறது. மேலும் ஒரு சில இயக்குனர்களின் ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை விமர்சிக்கப்பட்டிருப்பதை தவிர்த்திருந்தால் வேறு புதிய ஒரு இயக்குனரின் குறும்படம் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும்.

மற்றபடி நாம் கடந்து செல்லும் நிகழ்வுகளை, சிறுகதைகளை குறும்படமாக ஆவணப்படமாக்க விரும்புபவர்களுக்கும், சிறுகதை வாசிப்பாளர்களுக்குமான நூல் இது.

நான் பார்த்த சாலிட்டரி, தீரா இருள், கர்ண மோட்சம், அட்சயம், மறை பொருள் தவிர்த்த பல படங்களை நானும் தேடிப்பார்க்க வேண்டும்.

aaa
வெளியீடு : புதிய கோணம்
முதற்பதிப்பு: 2010

வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,

29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.

நாள்: 29-1-12 ஞாயிறு

மாலை: 5.00 மணி

தலைப்பு: புதுக் கவிதைகள்

இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore) 

 அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக

சித்ரா

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —