இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.

 தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது போல அமைந்துள்ளது சில கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புத் திட்டங்கள். இந்த இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமி தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.

விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

————————————————————————————————————————-

நொடியில் நொறுங்கியவனுக்காக……

http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html

அசிங்கம்னா என்னடா (தலைவிதி)

முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடரா வருதுனு நண்பர்கள் பலர் சொல்லவும், கடந்த இதழின் அக்கப்போரை முந்தாநேற்று ஒரு தோழி படித்துவிட்டு அலறி அடித்து ஓடிவந்து நீ படிச்சியாடானு கேட்கவும்…
நீயும்மாடினு கேட்டு வைத்தேன்.
 
நேற்று இரவு அலுவலக மாதாந்திர கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திருப்பிய பின் நள்ளிரவில் உயிரோசையை வாசித்துவிட்டு வல்லினம் அகப்பக்கதை வாசிக்கத் தொடங்கினேன்…
 
ம.நவீன்-ன் எதிர் வினையை வாசித்து முடித்தபின் எனக்குள் எழுந்தது ஒரே கேள்விதான்!
 
வல்லினம் அகப்பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ம.நவீன் பக்கங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ள  http://vallinam.com.my/navin/  எனும் தளத்தில்தான். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” – ”ம. நவீன்” எனும் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது…
 
ஆக அப்படி இருக்க…  

 
அந்த தளத்தில் வாசித்த எனக்கு, வல்லினம் அகப்பக்கத்திற்கு தனது எதிர்வினையை பா.அ.சிவம் அனுப்பியதை, அசுத்தத்தை  ஏற்படுத்தியதாக ம.நவீன் எழுதியதை நினைத்து எக்குக்கு தப்பாக சிரித்துவைத்தேன்.
 
வல்லினம் இதழினை வெளியில் இருந்து யாரேனும் வந்துதான் அசுத்தப்படுத்தவேண்டுமா?
 
குறிப்பு:
ஜெயமோகனின் குறிப்பினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மனுஸ்யபுத்திரன் குறிப்புகளை விட்டு விட்டீர்களே (அவர்கள் வருந்தக்கூடும்)  மிஸ்டர்.
 
நன்றி: வல்லினம் மற்றும் லும்பினி
 
வாசக வேண்டுகோள்: –
  
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடராக வெளிவரவில்லையென்று அத்தகைய பத்திக்கான வாசகர்கள் வருந்துவதாக பேசிக்கொள்கிறார்கள்…
 
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர்க்கு முழுப்பதிலாக அடுத்த வாரத்தில் கிடைக்கும் ஓய்வு நாளில் சின்னப்புள்ளைத்தனமாக சிலவரிகளை எழுதி பதிவிட நினைத்துள்ளேன்.
 
வல்லினம் அகப்பக்கத்தில் அக்கப்போர் தொடரட்டும் அப்போது மணக்கும் அல்லவா?