வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,

29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.

நாள்: 29-1-12 ஞாயிறு

மாலை: 5.00 மணி

தலைப்பு: புதுக் கவிதைகள்

இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore) 

 அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக

சித்ரா

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

திரு-பூர்வீக-சதிர்

நூல் வெளியீட்டு விழா

 நாள்: நவம்பர் 2,  புதன் கிழமை நேரம்: மாலை 6.00 மணி

இடம்: புரோகிராம் வளாகம்

ஜீவன் ஜோதி பில்டிங் 107 பாந்தியன் சாலை எழும்பூர் சென்னை – 2

 

வெளியிடப்படும் நூல்கள்

 அன்பின் ஆறாமொழி

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: முபீன் சாதிகா

வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி

பெறுபவர்:ஜமலான்

நூல் அறிமுக உரை

 இந்திரா பார்த்தசாரதி

ஜமலான்

அமிர்தம் சூர்யா

திரு-பூர்வீக-சதிர்

(நாவல்)

ஆசிரியர்: அரவிந் அப்பாதுரை

வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன்

பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்

நூல் அறிமுக உரை:

பிரபஞ்சன்

எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழச்சி தங்கபாண்டியன்

 

ஏற்புரை: முபீன் சாதிகா

அரவிந் அப்பாதுரை

 

நிகழ்சி தொகுப்பு: பா.உதயகண்ணன்

 தொடர்புக்கு: 98401 54652 94446 40986

வெளியீடு:

பாலம் பதிப்பகம் (பி) லிட்

25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்

3வது பிரதான சாலை

தண்டிஸ்வரர் நகர்

வேளச்சேரி

சென்னை – 600042