இனி பிரபுவை அரவிந்தன் ஞாகப்படுத்த மாட்டார்

பிரவுவை பற்றி எழுதவேண்டும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. பிரவுவை எனக்குத் தெரியும் (இந்த தெரியும் என்பதை எந்த அளவிற்கு என்று பின்னே குறிப்பிட்டுள்ளேன்) பிரவுபிற்கு என்னை தெரியுமா என்று தெரியவில்லை, அப்படியே என்னை தெரிந்து கொள்ளவேண்டும் என்று பிரபு நினைக்கக்கூடிய இடத்தில் இன்று இல்லை.

pirabhukamal

இந்த பிரபு எனது ஊரான அ.காளாப்பூரை சேர்ந்தவர். அ.காளாப்பூரைச் சேர்ந்த 99.99 சதவிதம் பேர் அ.காளப்பூர் அரசு ஆண்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, மீதமுள்ள .01 சதவிதம் பேர் சிங்கம்;புணரியில் உள்ள தனியார் ஆங்கிலவழி கல்வியில் படித்தனர். பிரபுவும் பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தான். ஆங்கில வழி கல்வி பயில்பவர்கள் அரசு பள்ளி மாணவர்களைவிட அதிகம் மதிப்பெண் பெறுபவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு அப்போது உண்டு.

கடந்த மாதத்தில் ஒருநாள் அரவிந்தனிடம் பேசிக்கொண்டிருக்கையில் பிரவுவை தெரியும்ல பாண்டி என்றார். பாரிவள்ளல் பிரபு என்று சொன்னதும் தெரியும் என்றேன். இறந்துவிட்டதாக கூறினார். திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஏற்பட்ட விபத்து என்றார்.

பிரவுவை இப்போதும் என்னால் நினைத்துபார்க்க முடிகிறது. ஒரு முறை எங்கள் ஊர் திருவிழா என்று நினைக்கிறேன் உள்ள+ர் பள்ளி மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. அங்கு பிரவுவும் ஒரு பாடலுக்க ஆடினான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வரும் ரப்பப்பரி ரப்ப்பரி புதுமாப்பிள்ளைக்கு என்ற பாடலுக்கு குள்ள கமலாக! திரையில் கமலை எப்படி ஆச்சர்யமாக பார்த்தேனே  அதே ஆச்சர்யத்துடன் பிரபுவை பார்த்திருக்கிறேன். பின் எப்போதாவது சிங்கம்புணரிக்கு சைக்கிளில் செல்கையில் சாலையோரத்தில் இருக்கும் அவர்களின் வீட்டை கடந்து செல்கையில் பார்த்ததுண்டு. இப்போதும் என் நினைவுக்கு வருவது குள்ள பிரபுதான். இந்த அளவிற்குத்தான் எனக்கு பிரபு பரிச்சயம். இடைஇடையே அரவிந்தன் ஞாபகப்படுத்துவார். இனி அரவிந்தன் ஞாபகப்படுத்தமாட்டார்.

அம்மாவிற்கு அழைத்தேன் ( அம்மா எப்போதுமே ஊரில் நடக்கும் இறப்பு பற்றிய விபரத்தை உடனே தெரிவிக்க மாட்டாள் யாரிடமாவது செய்தியறிந்து பின் அம்மாவை அழைத்து விசாரிக்கும்போது ஆமாம்பா நீங்க தொலைவில் இருக்கிங்க உங்களுக்கு அந்த கதையை உடனே சொல்லி கலங்கவைக்க வேண்டாம் என்பாள் ) வாவனான் குளம் பிரபு என்று சில அடையாளங்களை சொன்னவுடன் ஆமாம்ப நல்ல பையன் அந்த பையன் தலையெடுத்துதான் 3-தமக்கைள் திருமணம் முடித்து மைத்துனர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு சேலத்தில் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து நல்ல நிலைமையில் இருக்கும் போது இப்படியாகிவிட்டது என்றார்கள். பிறகு சொன்னதுதான் பிரபு எந்த அளவிற்கு குடும்ப உறவினர்களிடையே தன்னை பிணைத்துக் கொண்டிருந்திருப்பார் என்று கற்பனை செய்யமுடிகிறது. பிரவுவின் இறுதிச் சடங்கில் 3-மச்சினனன்களும் கதறி அழுததை நான் இதற்கு முன் அப்படி பார்த்ததில்லை ஊரே சொன்னுச்சுப்பா

விபத்து குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வரலாம்.. சமதளமற்ற சாலை வண்டியின் வேகத்தை தடை செய்திருக்கலாம், எதிர் வந்த வாகனத்தால் ஏற்பட்டிருக்கலாம், மதுவினாலும் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று மட்டும் புரிகிறது, மரணம் நம்மை தொடர்ந்தே வந்துகொண்டிக்கிறது. வெகுசிலருக்கு தெரிந்துவிடுகிறது பலருக்கும் தெரிவதில்லை..

பிரபு வந்தான் சென்றான் என்பதை அவ்வளவு எளிதில் அவன் சார்ந்த யாரும் கடந்து சென்றுவிடமுடியாது.

இந்த வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பிக்கும் இப்படித்தான் முடியும் என்று இங்கு எவரும் அறியாத போது பிரவுவின் ப்ரியங்களைப் போல நமக்கான பயணத்தில் எதை விட்டுச் செல்லப்போகிறோம்.

இனி எனக்கு பிரவுவை ஞாபகப்படுத்தும் ரப்பப்பரி ரப்பப்பரி புதுமாப்பிள்ளைக்கு பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு உறங்கச்சென்றுவிட்டேன்.

 

வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,

29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.

நாள்: 29-1-12 ஞாயிறு

மாலை: 5.00 மணி

தலைப்பு: புதுக் கவிதைகள்

இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore) 

 அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக

சித்ரா

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —