நேசிக்கப்படவேண்டியவர்கள்

 

ஒவ்வொரு சந்திப்பும் ஏதோ ஒருவிதத்தில் முக்கியமானதாகவிடுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் யாரோ ஒருவர் வசீகரித்து விடுகிறார்கள். ஓவியர் உமாபதியின் கவிதைநூல் வெளியீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்வில் பேசியவர்களின் பேச்சிலிருந்து காதல் பற்றிய கவிதைதொகுப்பு என்று அறியமுடிந்தது. படித்துமுடிப்பதற்குள் ஒருவித அயற்சிவந்துவிடும். சிவக்குமார் என்பவர் கவிதை வாசித்தார். அவரை பற்றிய அறிமுகத்தில் நிகழ்விற்கு புதியவர் எ…ன்று தெரிந்தது. ஏதோ ஒன்றில் அரவிந்அப்பாதுரையை ஞாகபடுத்தினார். அருகில் இருந்த துரைபிராசாந்தனிடம் யார் என்றேன்.  நாடக நடிகர் வசந்தம் தொலைக்காட்சியில் நாசி பிரியாணியில் நடித்திருப்பதாகச் சொன்னார். அகல்யா-வை விரும்பி பார்த்த பொழுது நாசிபிரியாணியையும் பார்த்திருக்கிறேன். சிவக்குமார் ஞாபகத்திற்கு வரவில்லை. உண்மையை பேசுபவர்களும், பாசாங்கற்ற மனிதர்களும் நேசிக்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்

 

இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம்

அந்த மிருகம்
எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று
அந்த மிருகம்
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று
அந்த மிருகம்
எப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று

இரையாகிக்கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்

 

என்ன செய்துவிட்டேன்

எனக்கு தெரிந்த
எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன

எடுத்துக்கொண்ட ப்ரியங்களை
திரும்பபெற
காத்திருத்தலில்
என்ன இருக்கப்போகிறது
உனக்கு தெரியும்

தொலைந்துபோவது
ஒரு பாவனைதான்

திரும்ப வருவதும்
ஒரு பாவனைதான்

குட்டப்பனோடு உரையாடி
நீண்ட நாட்களாகிவிட்டது
நீண்ட நாட்களில்
என்ன செய்துவிட்டேன்
குட்டப்பனோடு உரையாடுவதை தவிர்த்து