சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 3

உயிர் எழுத்து

(ஏப்ரல்-09)

 

படைப்பிலக்கியத்தை முதன்மை படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுதீர் செந்தில் அயலக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டிய எண்ணத்தில் ஒரு வார மலேசிய சுற்றுப்பயணமாக ஏப்ரல் மாதம் வந்திருந்போது ஒரு நாள் மாலைபொழுதை சிங்கப்பூர் வாசகர் வட்டம் நண்பர்களுகளுடன் ஆங் மோ கியோ பொது நூலகத்தில் பகிர்ந்துகொண்டார்.

 

“உயிர் எழுத்து” வெளிவந்ததன் காரணம், அதன் பின் திறந்துகொண்ட சிறுகதைக்கான வெளி, இதன் வழியே இன்னும் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களை நாம் கண்டையக்கூடும் என்பதையும் சொல்லி, இதழ் பற்றிய வாசக எண்ணங்களை அறிவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

 

கவிதை குறித்தான கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ்-ன் பங்களிப்பு மிக அதிகம் என்றுரைத்தார்.

 

நிகழ்வில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது உடன், சிங்கப்பூர் எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் என மிகச் சிலரே கலந்துகொண்டது வாசகர் வட்ட வாசிப்பின் தீவிரத்தை குறைப்பதாகவே தோன்றியது.

ஜீன் 21 அன்று சென்னையில் – உயிர் எழுத்து – 25 வது இதழ் – ஒரு நிகழ்வு

inv

எப்ரல் 07ல் சுதீர் செந்தில் + “உயிர் எழுத்து” சிங்கப்பூர் வருகை

80706283a

படைப்பிலக்கியத்தை முதன்மையாக கொண்டு தமிழ் இலக்கிய பத்திரிக்கையில் தனெக்கென ஒரு அடையாளத்தை உறுதி செய்திருக்கும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சுதீர் செந்தில் ஏப்ரல் 09 மாதம் முதல் வாரத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

ஏப்ரல் 4 முதல் 6 திகதிவரையிலான மலேசிய சுற்றுப்பயணம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனை ( 016-4806241)தொடர்பு கொள்ளவும்

சிங்கப்பூர் சந்திப்பு

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் அமைந்துள்ள தக்காளி அறையில் ஏப்ரல் 7ம் திகதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 6.00 மணிமுதல் 8.30மணிவரை உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்திலுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

ஏற்பாடு:  வாசகர் வட்டம்

ஆதரவு:ஆங் மோ கியோ பொது நூலகம்

அந்தரங்க ஆடைகளைக் களவாடியவன் – சுதீர் செந்தில் 

 

இரவு

ஒளி உமிழும் நிலத்தில் இருந்து

வெளியேறிக்கொண்டிருந்தது

 

பூனையின் கால்களோடு திரிந்தவன்

உன் அடர்ந்த காட்டில்

பெருகும் வாசனையில்

வேர்களைத் தேடி நிலம் அலைகையில்

நெருப்புக் கோழி ஒன்று துரத்த

அது

நீ விரித்த மாய வனத்தில்

தலை புதைத்து வீழ்ந்தது

 

பின்

ஒரு குறியாய் நிமிர்ந்து

உன்னுள் நுழைகையில்

இதழ்கள் பருகி ருசித்தாய்

 

ஆந்தைகள் அலரும் கனவில்

விரிந்த ரகசியத் தடங்களின் வழிபற்றி

உன் உயிரை உறிஞ்சத் துடிக்கும்

அட்டைப்புழுக்கள் சூழ்ந்திருக்க

உன்னுள் உயிர்த்து

உன்னுள் மரிப்பவன்

 

மரணமும்

உயிர்ப்பும் இல்லாத பெருநகரின்

சந்தடி மிக்க வணிக வளாகத்தில்

உன் அந்தரங்க ஆடைகளைக்

களவாடிச் சென்றவனை

குரல்வளை கடித்து

உயிர் தின்றபொழுது

 

நீ

நீலவானமாய் விரிய

பொழிந்த மழையில்

மயக்கம் கலைந்தவன்

 

வானத்திற்கு அப்பால்

நீ வெண்மேகமாய்

மறைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.