முகவை இராம்-ன் பிள்ளைத்தமிழ்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும், பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் ஞாயிறு மாலை (03-10-2010) பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது..   (Near farrer park mrt – owen road – cambridge road)

நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும், முகவை இராம் அவர்களின் “பிள்ளைத்தமிழ் இலக்கிய உரையும் இடம்பெறும்.

இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு “பகலில் தோன்றிய நிலவு”…

இலக்கிய வட்டம் – ஏப்ரல் 4- பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

நண்பர்களே,

ஏப்ரல் மாத இலக்கிய வட்டம் கூட்டத்திற்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

நேரம்: ஞாயிறு ஏப்ரல் 4- பிற்பகல் மணி 3

இடம்: கல்லாங் சமூக மன்றம் (கம்யூனிடி க்ளப்) -பூன் கெங் எம்- ஆர்- டி அருகில்

பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

தலைப்பு  : சிலம்பில் கண்ட சில செய்திகள்

அனவரும் வந்து சுவைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

கேட்டவ(ர்) உள்ளம் கிறுகிறுத்துப் போம்வண்ணம்

தீட்டுவார் தம்முரையைத் தித்திக்கக் – கூட்டமாய்

ஏறிடுவோம் மாடி இவருரை

என்கின்ற வாரி நனைந்திடலாம் வா.

 

அகவை சிறிதுதான் ஆயினும் பேச்சில்

முகவையார்க் குண்டு முதன்மை – தகவுடனே

 சீராய் நமக்குச் சிலம்பின் சிறப்பெல்லாம்

காரா(ய்)ப் பொழிந்திடுவார் காண் .

 

சிலம்பில் ரசித்தபல செய்திகள் பற்றி

நலம்படச் சொல்லிடுவார் நண்பர்- விளம்புவதை

நாட்டமுடன் கேட்டுநீ நன்மை பலகாணத்

தேட்டையுடன் அங்கு திரள்.

சேதிபல கண்டார் சிலம்பி(ல்) இவர்தானும்,

ஆதியோ(டு) அந்தம் அவைதருவார் – யாதொன்றும்

சாக்குநீ கூறாமல் சட்டென்றே அங்குறுதல்

ஆக்கமுறு(ம்) ஆறென் றறி.

அன்புடன் வரத ராஜன்.