நண்பர்களே,
ஏப்ரல் மாத இலக்கிய வட்டம் கூட்டத்திற்கு வாருங்கள் என அழைக்கிறோம்.
நேரம்: ஞாயிறு ஏப்ரல் 4- பிற்பகல் மணி 3
இடம்: கல்லாங் சமூக மன்றம் (கம்யூனிடி க்ளப்) -பூன் கெங் எம்- ஆர்- டி அருகில்
பேசுபவர். திரு. முகவை இராம்குமார்
தலைப்பு : சிலம்பில் கண்ட சில செய்திகள்
அனவரும் வந்து சுவைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
கேட்டவ(ர்) உள்ளம் கிறுகிறுத்துப் போம்வண்ணம்
தீட்டுவார் தம்முரையைத் தித்திக்கக் – கூட்டமாய்
ஏறிடுவோம் மாடி இவருரை
என்கின்ற வாரி நனைந்திடலாம் வா.
அகவை சிறிதுதான் ஆயினும் பேச்சில்
முகவையார்க் குண்டு முதன்மை – தகவுடனே
சீராய் நமக்குச் சிலம்பின் சிறப்பெல்லாம்
காரா(ய்)ப் பொழிந்திடுவார் காண் .
சிலம்பில் ரசித்தபல செய்திகள் பற்றி
நலம்படச் சொல்லிடுவார் நண்பர்- விளம்புவதை
நாட்டமுடன் கேட்டுநீ நன்மை பலகாணத்
தேட்டையுடன் அங்கு திரள்.

சேதிபல கண்டார் சிலம்பி(ல்) இவர்தானும்,
ஆதியோ(டு) அந்தம் அவைதருவார் – யாதொன்றும்
சாக்குநீ கூறாமல் சட்டென்றே அங்குறுதல்
ஆக்கமுறு(ம்) ஆறென் றறி.
அன்புடன் வரத ராஜன்.