சொற்சுவை 2010 (ந.பாலசுப்ரமணியன்)

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் (திருப்பத்தூர்) கல்லூரியில் வணிகவியல் படித்தபோது சிங்கப்பூர் பற்றிய கனவுகளும் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணங்களும் எழுந்ததாக ஞாபகம் இல்லை. எனது வணிகவியல் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன்

அவர்கள் அவரின் சிங்கப்பூர் பயண அனுபவத்தையும் பாரதியார்ஆக வேசமிட்டதையும் முஸ்தபா கடை பற்றியும்  இன்னும் சில பயணஅனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று அவரை கலைப்பித்தர்கள் கழகம் ஏற்பாடு செய்த சந்திப்பில் சந்தித்தபோது ஞாபகமாய் வந்துசென்றது.

டேய் நீயும் எழுதிறியா கல்லூரியில் படிக்கும் போது நீ எழுதியதில்லையே என்று குழந்தைக்கான துள்ளலுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி  நாட்களில் என் நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருந்த நெருக்கம் எனக்கு இல்லாதது பற்றி கொஞ்சம் வருத்தமாக இருந்தது

14.11.2010 முதல் 20.11.2010 வரை பேராசிரியர் டாக்டர் தா.மணி (முதல்வர்- கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச் சிவபுரி – புதுக்கோட்டை) மற்றும் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன் (துணை பேராசிரியர் வணிகவியல் துறை  ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி திருப்பத்தூர்-சிவகங்ககை) இருவரும் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்