சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 2

(மார்ச்-09)

 

அநங்கம்

 

மலேசியதீவிர இலக்கிய   இதழான “அநங்கம்” மூன்றாவது இதழ் மார்ச்-09 மாதத்தில் சிங்கப்பூர் ஆங் மோ கியோ பொது நூலகத்தில், வாசகர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 

இயந்திரங்களுக்கு மத்தியில் சிக்கி பதட்டமான ஒரு நிலையில் இன்று நாங்கள் வந்திருந்தாலும், இங்குள்ள இலக்கியச் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது என்று பேசத்தொடங்கிய மலேசிய எழுத்தாளரும், அநங்கம் இதழுமான ஆசிரியர் கே.பாலமுருகன் நுகர்பொருள் சந்தையை கடந்து சிற்றிதழ்கள் வெற்றியடைய வேண்டிய முன்வைத்து “அநங்கம்” என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு அகராதியை புரட்டவேண்டியிருக்கிறது என்று வினவி, ஆகாயம் என்றபோது என் அரூபமான எண்ணப்பாடு

 

சிதைவுக்குள் உட்பட்டது. சுதந்திரமான வெளியை சிற்றிதழ்கள் அடையவேண்டும். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் (எனக்கு இப்போதெல்லாம் வரலாற்றை புரட்டும் போது ஒரு வித பயம் ஏற்படுகிறது) கடாரம் மண் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த மண்ணில் ஒரு சிற்றிதழ் வரவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும்தான் காரணம். இதழின் நோக்கம், சிற்றிதழ்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்று சொற்களை கோர்க்கும் முன் தெரிந்து விழுந்தன வார்த்தைகள்

 

வெகுஜனப் பத்திரிக்கை தீவிரப்பத்திரிக்கையின் வேறுபாட்டை முன்வைத்து, வெகுஜனப் பத்ரிக்கையால் துண்டாப்பட்ட சிறுகதையை உள்ளடக்கி பேசிய மலேசிய மூத்த எழுத்தார் கோ.புண்ணியவான், வல்லினம் இதழ் பெண்ணியம், தலித்தியம் என சிற்றிதழ் தீவிரத்தை கோட்பாடு சார்ந்த இலக்கியங்களை முன்னிருத்துகிறது. பெண்ணியச் சிந்தனை வெளிவர இன்று அநங்கம், வல்லினம் இருக்கிறது என புதிய வெளி திறந்ததற்கான சாளரத்தை முன்நிறுத்தினார்.;

 

மூகமூடிகளை கலைந்து மகிழ்ச்சிக்குரிய பயணம்  என்றுச் சொல்லி, மலேசிய கவிதை இதழமான “மௌனம்”-த்தின் நிலைப்பாடும் போக்கும் கவிதை குறித்த தீவிரம், அதற்கான புரிதல் களம் என்ற செய்திகளை எழுத்தாளரும் “மௌனம்” இதழின் ஆசிரியருமான ஜாசின் தேவராஜ் இறுக்கம் தளர்ந்து மிக சுருக்கமாக பேசினார்

 

அநங்கம் இதழுக்கு வலுவான தொடக்கமாக  இருந்த சிறுகதைகளை சுட்டி வெளிவந்த மூன்று இதழ்களுக்கான சிறுகதைகளை   சிங்கப்ப+ர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர் எழுதிய சிறுகதையையும் முன்வைத்து, அந்தந்த சிறுகதையின் பயணப் போக்கில் பயணப்பட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அநங்கம் பத்திகளை முன்வைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 

 

நிறைவான கலந்துரையாடலின்  நிறைவற்ற தேகத்தோடு மறுநாள் விடிந்தது.

 

○ பாண்டித்துரை

©pandiidurai@yahoo.com

பின்னூட்டமொன்றை இடுக