நாதஸ்வர சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும்
——————————————————————–
ஒரு வேப்பமரமும்
வெள்ளம் சிதைத்த வீடொற்றின்
நவீன பக்கத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
வேப்பமரம் வெட்டப்பட்ட கனத்தையும்
வெள்ளம் சிதைத்த சுவற்றின்
மிச்ச செங்கற்களை உருவிய பொழுதையும்
நினைக்காது இருக்கும் வரை
நன்றி:உயிரோசை.காம்