கடலோரத்துப் பறவை.

கடலோரத்தில் இருந்த பறவை

நகரின் நடுப்பகுதிக்குப் பறந்து சென்றது

அங்கு தன்னையொத்த பறவையைப் பார்த்தது.

வாயேன் வனம் பார்ப்போம் என்று

கைகளைப் பின்னிக் காற்றில் பறந்து சென்றது

மரக்கிளைக்கும் நீரூற்றுக்கும் தாவித் தாவி

வனம் பார்த்த அக்கா பறவையும் தங்கை பறவையும் பறக்கத்துடித்தன.

பிரியாணிக்காகச் சற்று இளைப்பாறின

பறப்பதன் அடையாளமாக

இரு தற்படத்தைப் பத்திரப்படுத்திக்

கூடு நோக்கித் திரும்பியது

கடலோரத்துப் பறவை.

#பாண்டித்துரை

பின்னூட்டமொன்றை இடுக