http://puthu.thinnai.com/?p=27836

உடைந்து அழும்
பொம்மையிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்
அம்மா
ஒட்டப்பட்ட
பொம்மையாக
கேட்டுக்கொண்டிருக்கிறாள்
அவநிதா

@பாண்டித்துரை

யாரேனத் தெரிந்தும்
பலிபீடம் நோக்கி
தலை சிலுப்பச் செல்லும் ஆடு
குருதி படியும் நிலங்களுக்காக
தனை வெட்டக் கொடுக்கிறது.

அவநி-1

ஒரு
குறிப்பு எழுதும் நேரத்தில்
அவநிதா
எழுதி வைத்த கவிதைகளை
வரைந்து விடுகிறாள்
அந்த நாளின் கவிதை
ஓவியமாக
சிரித்துக் கொண்டிருக்கிறது

1222