“தனி”

 
 
 
அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

அன்புனா என்னடா?

இதுதான் அன்பு என்று எப்படி அவளுக்கு சொல்வது?

துயரங்களும் கோபங்களும் ஒருவகையான அன்புதான் புரிந்துகொள்ளும் போது………

அதீதமான மௌனம்கூட அழகான அன்புதான்…….

ஒரே அன்பை என்னை சுற்றிய எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது ?

என்னை சுற்றிய மனிதர்களை அவதானித்து நேசிக்க கற்றுக்கொள்கிறேன் மனிதர்கள் மாற மாற அன்பென நினைத்ததும் மாறிக்கொண்டிருக்கிறது……..

மனிதர்கள் மீதான புரிதலில் அன்பென நாம்தருகின்ற எல்லாம் எதிர்கொள்பவர்களால் மாறிப்போகின்றன

எல்லோர் மீதும் ஏதோ ஒரு தருணத்தில் நான் கொண்ட கோபங்களை புறம்தள்ளி என்னிடம் கனிவாக பேசும்போது புரிபடுகிறது நாமும் கொஞ்சம் அன்பாய் இருந்திருக்கிறோம் என்று

அந்த கொஞ்சம் நிறையவேண்டும் என்ற எண்ணங்கள் அவ்வப்போது எழுந்துசெல்லும்….

நான் தரவிரும்பும் அன்பினை மழலை, அம்மா, ஆசிரியர், மருத்துவர் இவர்களின் வரிசையில் தேடிக்கொண்டிருக்கிறேன்…….

அன்பைத் தொடர
ஆதிசிவனை தேடுகிறேன்
சிவம் சொல்லும் பதிலொன்றில்
பிறழும் மனிதனாக
புரிபடுகிறது!