முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை – எம்.கே.குமார் பார்வையில்

sorry na,

நீங்கள் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டதால் உங்களின் வலைதளத்தினை பார்வையிடாமல் இருந்துவிட்டேன். வேலைப்பளு குட்டிப்பையனுடான விளையாட்டுக்கள் இதனையும் கடந்து நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது வாசித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரைக்கு நீங்கள் உங்களின் கருத்தினை பதிவுசெய்தமைக்கு என்னுடைய நன்றிகள்.

http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html

கெட்டிமேளம் கெட்டிமேளம்……..

நமக்கில்லைங்க (வீட்ல ஆடி போய் ஆவணி வரட்டும் மகாலெட்டுமி மாதிரி (மாதிரியாம்க) பொண்ணு வரும்னு சொல்லிட்டாங்க)  நண்பன் சதிஸ்குமாருக்கு… (22.08.2010)

 திருப்பத்தூர் (சிவகங்கை) ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் B.Com முடித்து வெளியேறியபோது மனதிற்கு நெருக்கமாக கிடைத்த நண்பர்கள் இரு கைகளின் விரல்களுக்குள் அடங்கிவிடுவர். அதில் ஒருவிரல் இராமனாதபுரத்து சதிஸ்.

 சதிஸ்னதும் நண்பர்கள் எல்லோருக்கும் பளிச்சுனு மனதில் தோன்றுவது அவனோட சிரிப்பும், ”சொல்லுங்கப்பு” (அந்த அப்புவும்தான்) இரண்டும் தான் என்று நினைக்கிறேன்.

 கடந்த ஜனவரி வீடு குடிபுகும் நிகழ்விற்காக சென்றிருந்தபோது அம்மு சித்தியை சந்திக்க கோயம்புத்தூர் சென்றிருந்தேன், அப்போது சதீஸ் உடன் அதிகாலை நேரத்தை பகிர்ந்துகொண்டேன். உறவு சார்ந்த விரிவின் மூன்றாம் மனிதன் தனிமை படுத்திக் கொண்டதை, சிங்கப்பூர், கட்டாரி என்று பேசிக்கொண்டே காலையில் கண்ணயர்ந்துவிட்டேன். புதுமனை விழாவிற்கு நண்பன் விமலுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்திருந்தான்.

 அதன் பின் நண்பர்கள் எல்லோரும் கடந்த ஜீலையில் நண்பன் சீனிவாசன் திருமணத்தில் சந்தித்துக்கொண்டனர். என்னால்தான் கலந்துகொள்ள இயலவில்லை. சிங்கப்பூர் வந்தபின்பு இவனோடு சேர்த்து மூன்று நண்பர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது (கலந்துகொள்ள இயலவில்லை).

 இங்கு வந்த பின்பு அதீதமான தொலையாடல்கள் விரல்விட்டு என்னும் அளவு மின்னஞ்சல்கள் என நட்பு தொடர்கிறது. தொலையாடல் வழியே வாழ்த்து சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது (சதீஸ் திருமணத்திற்கு அம்மாவும் அக்காவும் சென்று வருவதாக சொல்லியிருக்கறார்கள்.)

 சும்மா கண்ணாடிக்கா போட்டு கலக்கலா நிக்கிறது சதிஸ்னு நீங்க நெனைச்சா இல்லைங்கண்ணா அது அடுத்த விரல் ஹைடெக் சரவணன் (ஆளா பார்த்தாவே ஹைடெக் தெரியுதில்லையா) கருப்பு கலர் டீ-சர்ட் தான் புதுமாப்பிள்ளை சதீஸ்குமார். அந்த பக்கம் இருப்பது இன்னொரு விரல் அவுக பேரும் சரவணன் – (கல்லூரியில் இவர் வரைந்த டைனோசர் ஓவியம் ரொம்ப பிரபலம்)

அக்கப்போருக்கு ஒரு ½ பதில்

பாண்டி லெட்சுமி அம்மா செம்ம வாங்கு வாங்கியிக்காங்க, ம் நான் தான் வின்னர்னு நிருபிச்சிட்டாங்க! நீங்க படிக்கலையா? படிச்சிருந்தா இந்நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 4 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பிங்களேனு நண்பர்கள் குலாம்ல இரண்டு பேரு கேட்டாங்க.

 என்னத்தங்க சொல்ல அடுத்த வருசம் புத்தகமா வருதுனு நினைச்சுக்கிற பக்குவம் ”குலாம்”கிட்டயும் இல்ல ”ஆம்” கிட்டயும் இல்ல.

வேறு நிறுவனத்திற்கு பணி மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. காத்தால 6 மணிக்கு போன மறுக்கா வர்றதுக்கு இரவு 9 மணி அதுக்கும் மேலயும்…. அதுக்கு அப்புறம் சமைக்கணும், செரைக்கணும்னு  இத்யாதி த்தியாதினு கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்க.

அட அப்படானு கொஞ்சம் குஞ்சை சொறிஞ்சு ஆசுவாசபடுத்திக்கலாம்னு நெனைக்கவே நேரம் இல்லை. இதுல பதிலு கேள்வினு …

இனிமே எழுதனும்ம்மானு முதல்ல யோசிப்போம் கடைசியாவும் யோசிப்போம் அதுக்கு முதல்ல வல்லினத்தை போய் படிக்கணும். ”குலாம்” சொன்னது போக ”ஆம்” சொன்னதுபோக மிச்சம் மீதி துக்கடானு ஏதாவது இருக்கும்ல… இருக்காத பின்னே!

என்னத்த இருந்து என்னத்த ஆகப் போகுது சரஸ்வதி போய் படிக்கணும்ல…

சரஸ்வதி போய் சரியா படிக்கணும்ல …

சரஸ்வதி போய் சரியா வெளக்க போட்டு படிக்கணும்ல …