யமுனா வீடு – 11

PC: ஓவியர் துரைஎழிலன்

பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி
முன்னங்கால்களை மேலுயர்த்தி
என் முகம்பார்த்துச் சப்தமிட்ட
அணிலின் மொழி
எனக்குப் புரியவில்லை எனினும்

வானவில் பண்பலையின் உயிர்ச் சொல்லில்
அய்யப்ப மாதவன் கவிதையை வாசித்துக்கொண்டிருக்க

கிண்கிணி ஓசையை எழுப்பிய ஆடு
மேய்ப்பனோடு நகர்ந்து கொண்டிருந்த
பெருநகர வாழ்வொன்றில்

யாருமற்ற வெளியை உருவாக்கும்
ஆட்டுக் குட்டியின் பாடலொன்றை
யமுனா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்

பெருநகர வாழ்தலிலும்
யாருமற்று இருத்தலிலும்
அய்யப்ப மாதவன் வாசித்த கவிதை
யமுனாவின் வீட்டை நிரப்பிச் செல்கிறது

யமுனா
கவிதைக்கான ஓவியம் ஒன்றை
கரித்துண்டால் சுவற்றில்
கோடுகளாக்கி உறங்கிப்போகிறாள்

வீடு வருவோர்க்கு
சுவர்க் கோடுகள் புரிவதில்லை
அந்தக் கவிதையும்
யமுனாவும் அப்படித்தான்

நன்றி: கவிஞர் அய்யப்ப மாதவன்

நன்றி: க.உதயகுமார் ( கவிதையின் முதல் 5 வரிகளுக்கு)

இந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் – 06

இந்தநாளின் மகிழ்ச்சியாக 

எதைச்சொல்லலாம்

ஜோ பகிர்ந்த பொங்கல் கவிதைப் படங்களை 

தேக்காவின் கடைகளெங்கும் முளைத்து நிற்கும் கரும்புக் கட்டை 

ரங்கூன் சாலையிலிருக்கும் சங்கீதா பவனின் 

மணக்கும் பில்டர் காபியை 

‘தோட்டம்’ நடிகர் சிங்கை ஜெகன் மற்றும்

இசையமைப்பாளர் சபீர் பற்றி  அமைந்த

சுந்தருடனான நட்புரையாடலை

வாகன ஓட்டத்தில் ஆடச்செய்த 

பாடலாசிரியர் மதிசியம் பாலா எழுதிய

நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதய்யாவை

இளஞ் சிவப்பு நிறத்தை


இந்தநாளின் மகிழ்ச்சியாக 

எதைச்சொல்லலாம்

#பாண்டித்துரை

ஹான்ஸ் தல

பப்போலதெரு இரயில் நிலையம் அருகில்

தேக்காவின் குடைக்கேண்டியன்

ஹனிபா கடைக்கு பின்புறம் கடக்கையில் எல்லாம்

அறிமுகமில்லா சிலர் புன்னகைத்து

C என்றழைக்கிறார்கள்

தேக்காவின் சுவர் ஓவியத்தை பார்த்து கடப்பதைப்போல

சுற்றும் முற்றும் பார்த்து கடந்துவிடுகிறேன்

வேறெங்கும் என்னை யாரும் இப்படி அழைத்ததில்லையேஎ

ன்னைப்பார்த்து புன்னகைத்தவர்களுக்கு

ஹான்ஸ் தல என்றவர்களுக்கு

ஒரு தேநீரையோ , பகிர்ந்துண்ணும் வடையையோ

பரிசளிக்காத இந்த மனமெதற்கென்ற

ஹான்ஸ் தலையையோடு

ஒரு தேநீரைப் பகிர்ந்து நீங்களும் கடக்க நேரிடலாம்

#பாண்டித்துரை

40நீங்கள், Jeeva Nanthan, Ganga Kathiravan மற்றும் 37 பேர்12 கருத்துக்கள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்